என் மலர்
நீங்கள் தேடியது "போலீஸ்காரர் உயிரிழப்பு"
- குடிப்பழக்கம் உள்ள ராமச்சந்திரன் கடந்த ஒரு மாதமாக விடுமுறையில் இருந்து வந்தாராம்.
- அக்காள் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் காம்பவுண்டுக்குள் உள்ள மரத்தில் ராமச்சந்திரன் தூக்கில் பிணமாக தொங்கினார்.
செஞ்சி:
விழுப்புரம் அடுத்த வி. கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் ராமச்சந்திரன் (வயது 37). இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஆயுதப்படை பிரிவில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
இவருக்கும் செஞ்சி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பெனித்தா (வயது 33) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று 3 குழந்தைகள் உள்ளனர். பெனித்தா செஞ்சி கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருவதால் அவர்கள் கிருஷ்ணா புரத்தி லேயே குடும்பம் நடத்தி வந்தனர். குடிப்பழக்கம் உள்ள ராமச்சந்திரன் கடந்த ஒரு மாதமாக விடுமுறையில் இருந்து வந்தாராம்.
இந்நிலையில் இன்று பணிக்கு திரும்புவதற்காக நேற்று இரவு வீட்டிற்கு வந்தவர் வீட்டில் இருந்து பக்கத்து தெருவில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றாராம். இந்நிலையில் இன்று அதிகாலையில் அவர் அக்காள் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் காம்பவுண்டுக்குள் உள்ள முருங்கை மரத்தில் ராமச்சந்திரன் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இது குறித்து செஞ்சி போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் அரி கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேரில் சென்று ராமச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் ராமச்சந்திரன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்து தூக்கில் தொங்க விட்டாரா என்பது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள். செஞ்சி டி.எஸ்.பி. மனோகரன் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

டெங்கு-பன்றி காய்ச்சலை தடுக்கும் பணியினை சுகாதார துறையினர் செயல்படுத்தி வருகின்றனர். விழிப்புணர்வு பிரசாரமும் செய்யப்பட்டு வருகிறது. மாதவரம் பகுதியில் கடந்த வாரம் டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலியாகினர்.
இதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. காய்ச்சல் அறிகுறி ஏற்பட்ட உடனேயே அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் மர்ம காய்ச்சலுக்கு திருமணமான 6 மாதத்தில் போலீஸ்காரர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆவடி சாந்தி நகரைச் சேர்ந்தவர் விஜய் (வயது26). ஆவடி 13-வது பட்டாலியனில் சிறப்பு காவலராக பணியாற்றி வந்தார்.
கடந்த சில நாட்களாக விஜய்க்கு காய்ச்சல் இருந்தது. அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் காய்ச்சலின் தாக்கம் குறையவில்லை. இதையடுத்து கடந்த 26-ந்தேதி போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் விஜய்யை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி போலீஸ்காரர் விஜய் பரிதாபமாக இறந்தார்.
பலியான விஜய்க்கு கடந்த 6 மாதத்துக்கு முன்புதான் திருமணம் முடிந்தது. அவருக்கு நர்மதா என்ற மனைவி உள்ளார். மர்ம காய்ச்சலுக்கு போலீஸ்காரர் விஜய் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விஜய்க்கு வந்திருந்த காய்ச்சல் குறித்து டாக்டர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து போரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #MysteryFever #Death






