search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police checkpoint"

    விழுப்புரத்தில் நள்ளிரவில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 16 வயது மாணவர்கள் காரை ஓட்டி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் போலீசார் நேற்று நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து நிறுத்தினர். காரில் 16 வயதுள்ள 2 மாணவர்கள் இருந்தனர். இதை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். காரை சோதனை செய்தனர்.

    இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அந்த மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது மாணவர்கள் கூறும்போது,

    எங்கள் 2 பேரின் மாமா ஸ்ரீதர் விழுப்புரத்தில் வசித்து வருகிறார். அவர் மற்றும் கார் உரிமையாளருடன் விழுப்புரத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு நள்ளிரவில் வந்தோம். பின்னர் எங்கள் 2 பேரையும் காருக்குள் இருக்குமாறு கூறி விட்டு ஸ்ரீதர் மற்றும் கார் உரிமையாளர் ஆகியோர் ஓட்டலுக்கு சென்று விட்டனர். நாங்கள் காரை ஓட்ட ஆசைப்பட்டோம். இதனால் காரை அங்கிருந்து மாறி மாறி ஓட்டி வந்தோம் என்றனர்.

    காரை சிறுவர்கள் ஓட்ட அனுமதியில்லை. எனவே இனிமேல் நீங்கள் கார் ஓட்ட கூடாது என்று மாணவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரித்து அனுப்பி வைத்தார்.

    இதையடுத்து சிறுவர்களை தனியாக காரில் அமர வைத்து சென்ற ஸ்ரீதர் மற்றும் கார் உரிமையாளர் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களுக்கு அபராதம் விதித்தனர். இரவில் சிறுவர்கள் காரை ஓட்டிய சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனைச்சாவடிகள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தி தீ வைத்ததில் 30 வீரர்கள் உயிரிழந்தனர்.
    காபூல்:

    ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகள், மேலும் பல நகரங்களை கைப்பற்றும் நோக்கத்தில் சமீபமாலமாக பாதுகாப்பு படையினரை குறிவைத்து ஆவேச தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களை கைப்பற்றி உள்ளனர். இழந்த பகுதிகளை மீட்க பாதுகாப்பு படையினரும் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது.

    நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள செனயா என்ற ராணுவ தளத்தின்மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை தலிபான் பயங்கரவாதிகள் அதிரடியாக தாக்குதல் நடத்தி கைப்பற்றினர். இந்த சண்டையில் இரு தரப்பிலும் கடுமையான உயிர்ச்சேதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், பக்லான் மாகாணம் பக்லான் இ மர்காசி மாவட்டத்தில் உள்ள இரண்டு போலீஸ் சோதனைச்சாவடிகள் மீது நேற்று நள்ளிரவில் தலிபான்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். பின்னர் அந்த சோதனைச் சாவடிகளுக்கு தீ வைத்துள்ளனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீஸ் தரப்பில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதேபோல் தெற்கு ஜாபூல் மகாணத்தில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடி மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் 4 போலீசார் கொல்லப்பட்டனர். போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் தலிபான்கள் தரப்பில் 7 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #AfghanAttack
    ஒரத்தநாடு அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருட்டுத்தனமாக மது விற்ற 2 பேரை கைது செய்தனர்.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள வடக்கூர் கிராமத்தில் திருட்டு தனமாக மது விற்பனை செய்வதாக ஒரத்தநாடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடக்கூர் கிராமத்தில் ஒருவர் சட்டத்திற்கு விரோதமாக அதிக விலைக்கு மது விற்று கொண்டிருந்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் வடக்கூர் கிராமத்தை சேர்ந்த தமிழ்மணி என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரிடம் இருந்த 27 மது பாட்டில்கள், ரூ.2500 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பாப்பாநாடு காவல் சரகத்திற்கு உட்பட்ட கண்ணுகுடி பகுதியில் ஒருவர் திருட்டு தனமாக மது விற்றது தெரியவந்தது.

    அங்கு பாப்பாநாடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு முருகேசன் (44) என்பவரை கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்த 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    வாகன சோதனையில் போலீஸ் தாக்கியதால் விவசாயி திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் அருகே உள்ள குமாரபுதுக்குடியிருப்பை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 42) விவசாயி. நேற்று மாலையில் இவர் மதுகுடித்துவிட்டு தனது மொபட்டில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வள்ளியூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    இதையடுத்து போலீசார் சக்திவேலை வழிமறித்தனர். அவர் மது குடித்து இருப்பதை அறிந்ததும் போலீசார் கண்டித்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே போலீசார் சக்திவேலை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் மனமுடைந்த சக்திவேல் திடீரென தனது மொபட்டில் வயலுக்கு அடிக்க வாங்கி வந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் மீட்டு வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஏர்வாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது. ஆனால் சக்திவேல் சாவுக்கு காரணமான போலீசாரை பணிநீக்கம் செய்யவேண்டும், அவரது குடும்பத்தாருக்கு நிதிஉதவி அளிக்க வேண்டும் என கூறி அவரது உடலை வாங்க மறுத்து சக்திவேல் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ×