search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pipe"

    • 24 களப்பணியாளர்களை டெங்கு நோய் தடுப்பு பணிக்கு அமர்த்த வேண்டும்.
    • நகராட்சிக்கு 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் வாகனம் வாங்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் வெங்கடலட்சுமணன், பொறியாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், வேதாரண்யம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் மகாராஜபுரம் பகுதியில் அறிவுசார் மையம் அமைக்கும் பணி மேற்கொள்வது, கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக சீர் செய்வது, நகராட்சி பகுதியில் பயன்பாடுகள் இல்லாத கழிவறை கட்டிடங்களை அகற்றுவது, நகராட்சியில் சாலையோரம் வளரும் புற்களை வெட்டு வதற்கு புல் வெட்டும் எந்திரம் வாங்குவது, வேதாரண்யம் நகராட்சி பகுதியில் 24 டெங்கு களப்பணியாளர்களை டெங்கு நோய் தடுப்பு பணிக்கு அமர்த்துவது, நகராட்சிக்கு 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் வாகனம் வாங்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • 5 நாட்கள் கடலுக்கு செல்லாமல் தொடர் வேலை நிறுத்த போராட்–டத்தில் ஈடுபட்டனர்.
    • மீண்டும் கச்சா எண்ணை குழாயில் கசிவு ஏற்பட்டதா என்ற கூறி கடற்கரையில் திரண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் சிபிசிஎல் நிறுவனத்தின் சார்பாக பதிக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் குழாயில் கடந்த 2-ம் தேதி இரவு உடைப்பு ஏற்பட்டது.

    குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கடலில் கலந்த காரணத்தால் அப்பகுதி மீனவர்கள் கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆளாகி 5 நாட்கள் கடலுக்கு செல்லாமல் தொடர் வேலை நிறுத்த போராட்–டத்தில் ஈடுபட்டனர்.

    அதனை தொடர்ந்து 3, 4 , 5 ஆகிய தேதிகளில் குழாய் உடைப்பை சரி செய்ததாக சிபிசிஎல் நிர்வாகம் அறிவித்தனர்.

    அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் எண்ணெய் உள்ளிட்ட எந்தவித எரிவாயுக்–களையும் குழாயில் கொண்டு செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதால், நாகூர் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கடலுக்கு தொழிலுக்கு சென்றனர்.

    இதனிடையே கச்சா எண்ணை குழாய்யில் நேற்று பராமரிப்பு பணிகள் நடை பெற்றது. அப்போது குழாய்யில் பம்பிங் செய்ததால் கச்சா எண்ணையுடன் கலந்த தண்ணீர் வானுயரத்தில் பீய்ச்சி அடித்து கடலில் கலந்தது. இதைத் பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் மீண்டும் கச்சா எண்ணை குழாய்யில் கசிவு ஏற்பட்டதா என்ற கூறி கடற்கரையில் திரண்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகை வட்டாட்சியர் ராஜசேகர் ஆய்வு மேற்கொண்டு மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட நிர்வாகம் உத்தரவை மீறி சி.பி.சி.எல். நிர்வாகம் செயல்படுவதாக புகார் தெரிவித்தனர்.

    இது குறித்து சி.பி.சி.எல். அதிகாரிகள் கூறுகையில் குழாயை சுத்தம் செய்யும் பணியின் போது தண்ணீர் மட்டுமே வெளியானது என்றும், கச்சா எண்ணை செலுத்த வில்லை என்றும் தெரிவித்தனர். மீண்டும் பட்டினச்சேரியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • நேற்று மாலை 5 மணி அளவில் குழாய் சீரமைக்ககப்பட்டது.
    • மீண்டும் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூரை அடுத்த நரிமணத்தில், பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சுத்திகரிப்பு நிலையம் (சி.பி.சி.எல்.) உள்ளது. காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் இங்கு சுத்திகரிக்கப்பட்டு லாரிகள், கப்பல்கள் மூலம் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    கப்பல்களுக்கு கச்சா எண்ணெய்யை கொண்டு செல்ல நரிமணத்தில் உள்ள சி.பி.சி.எல். நிறுவனத்தில் இருந்து சாமந்தான்பேட்டை வழியாக நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமம் வரை கடற்கரையில் எண்ணெய் குழாய் புதைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி நள்ளிரவு பட்டினச்சேரி கடற்கரையில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்தது. இதனால் கடல் நீர் முற்றிலுமாக கருப்பு நிறமாக மாறியது. இதனால் பொது மக்களும், கடல் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சி.பி.சி.எல். மற்றும் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்து குழாய் உடைப்பை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் நேற்று மாலை 5 மணி அளவில் குழாய் சீரமைக்ககப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாய் நேற்று அடைக்கப்பட்டதாக கூறிய அதே இடத்தில் மீண்டும் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மீண்டும் அதே இடத்தில் பழுது நீக்க பணியில் இயந்திரங்கள் மற்றும் ஊழியர்களைக் கொண்டு பணி நடைபெற்று வருகிறது.குழாயில் கசிவு ஏற்படுமா என சோதனை செய்ய சிபிசிஎல் நிர்வாகம் கச்சா எண்ணெயை குழாயில் அழுத்தத்துடன் செலுத்திய போது கசிவு ஏற்பட்டது.

    அதனால் உயர் அழுத்தத்தில் குழாயில் ஆயில் செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.மேலும்

    தொழில்நுட்ப குழுவினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இதனால் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • மேட்டுப்பாளையத்திலிருந்து அவினாசி, திருமுருகன்பூண்டி, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
    • பூமிக்குள் இருந்த குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் அருவிபோல் கொட்டியது.

    அவினாசி :

    அவினாசி அருகே குடிநீர் குழாய் உடைந்து நீர்வீழ்ச்சி போல் தண்ணீர் கொட்டியது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளைய த்திலிருந்து அவினாசி, திருமுருகன்பூண்டி, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதற்காக பூமிக்குள் ராட்சத குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவினாசி மங்கலம் ரோட்டில் நேற்று கருணை பாளையம் பிரிவு அருகே பூமிக்குள் இருந்த குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் அருவிபோல் கொட்டியது.

    இதுபற்றி தகவல் அறிந்த திருப்பூர் மாநகராட்சி அலுவலர்கள் சம்பவ இடம் வந்து குழாய் உடைப்பை சரிசெய்தனர்.

    • போலீஸ் குடியிருப்புக்குள் லாரியை நிறுத்தி பைப்புகளை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள 30 இரும்பு பைப்புகள் பதுக்கியிருந்தது தெரிய வந்தது.

    மதுரை

    மதுரை திடீர் நகர் போலீஸ் குடியிருப்பில் இரும்பு பைப்புகள் பாதுகாக்கப்பட்டு வந்தன. மர்ம நபர்கள் 30 இரும்பு பைப்புகளையும் திருடி சென்று விட்டனர். இது குறித்து கான்டிராக்டர் பாண்டி, திடீர் நகர் போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் லோகேசுவரி வழக்குப் பதிவு செய்தார். போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.அப்போது போலீஸ் குடியி ருப்புக்குள் லாரியில் இரும்பு பைப்புகளை எடுத்து செல்வது தெரிய வந்தது.

    அந்த லாரியின் பதிவெண் பற்றிய விவரம் தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் அவனியாபுரம் எம்.எம்.சி காலனியில் பதுங்கி இருந்த வாலிரை பிடித்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரியில் ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள 30 இரும்பு பைப்புகள் பதுக்கியிருந்தது தெரிய வந்தது.

    இரும்பு பைப்புகளுடன் லாரியையும் பறிமுதல் செய்த போலீசார், பிடி பட்ட வாலிபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் ஆந்திர மாநிலம், குண்டூர், சிரங்கி பாலத்தை சேர்ந்த தும்மா மார் ரெட்டி (28) என்பது தெரியவந்தது. இவர் வேலை பார்க்கும் நிறுவனம், மதுரையில் புதைவட கம்பிகள் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    அந்த நிறுவனத்துக்கு இரும்பு பைப்புகள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை சரி கட்டுவதற்காக அவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனாலும் இரும்பு பைப்புகள் கிடைக்க வில்லை. மதுரையில் பல்வேறு பகுதிகளில் தனியார் நிறுவனங்கள், புதைவட கம்பிகள் பதிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றில் ஏதேனும் ஒரு கம்பெனியில் உள்ள இரும்பு பைப்புகளை திருடுவது என்று அந்த வாலிபர் முடிவு செய்தார். அவர் லாரியை எடுத்துக் கொண்டு திடீர்நகர் போலீஸ் குடியிருப்புக்குள் லாரியை கொண்டு வந்து பைப்புகளை நைசாக திருடி சென்றது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து வரக்கூடிய தண்ணீர் குழாயில் திடீரென உடைப்பு
    • பேரூராட்சி ஊழியர்கள் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி கிழக்கு ரத வீயியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து வரக்கூடிய தண்ணீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் உடைப்பு ஏற்பட்ட குழாயிலிருந்து செயற்கை நீரூற்று போல தண்ணீர் வெளியேறி பொதுமக்களுக்கு செல்ல வேண்டிய பல லட்சம் லிட்டர் குடிநீர் அருவி போல சாலையில் சென்று வீணாகியது. கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதியில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் அதன் காரணமாக உடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.இது குறித்து பொதுமக்கள் அவிநாசி பேரூராட்சிக்கு தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து பேரூராட்சி ஊழியர்கள் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • ரூ.1 கோடியே 55 லட்சம் மதிப்பில் புதிய பாலம் அமைக்கும் பணி.
    • அப்பகுதி மக்கள் ஆற்றை கடக்க குழாய் கொண்டு தற்காலிக பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி வளப்பாற்றின் குறுக்கே நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.1 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கும் பணி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த பாலம் வழியாக திருப்பயத்தங்குடி, பில்லாளி, திருச்செங்காட்டங்குடி, தென்னமரக்குடி, கீழப்பூதனூர், நத்தம், வீரபெருமாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர் சென்று வர முக்கிய வழியாக உள்ளது.

    மேலும் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வரவும் இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் பாலம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போக்குவரத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    மேலும் காவிரி நீர் கடைமடை பகுதியான திருமருகல் பகுதிகளுக்கு வந்து சேர்ந்தது.

    இதனால் அப்பகுதி மக்கள் ஆற்றைக் கடக்க குழாய் கொண்டு தற்காலிக அமைக்கப்பட்டு பாலம் ஒன்று அமைக்கப்பட்டது.

    அதில் அப்பகுதி மக்கள் சென்று வந்தனர்.

    இந்த நிலையில் திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்காலிக பாலம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது.

    இதனால் ஆற்றை கடக்க முடியாமல் அப்பகுதி மக்கள் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றி வந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை என தெரிவிக்கின்றனர்.

    எனவே பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நெல்லை மாநகர பகுதியில் கூட்டுகுடிநீர் திட்டப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.
    • இன்று காலை சந்திப்பு பஸ் நிலையம் அருகே திடீரென குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

    நெல்லை

    நெல்லை மாநகர பகுதியில் கூட்டுகுடிநீர் திட்டப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதனால் மண்டல வாரியாக அரியநாயகிபுரம் கூட்டு குடிநீரை சப்ளை செய்வதற்கு முன்னோட்டம் நடைபெற்று வருகிறது.

    குழாய் உடைப்பு

    அப்போது ஒரு சில இடங்களில் திடீரென குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு விடுகிறது. அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை சந்திப்பு பஸ் நிலையம் அருகே திடீரென குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

    இதனால் குழாயில் இருந்து வெளியேறிய தண்ணீர் சாலை முழுவதும் ஆறு போல் ஓடியது. சமீபத்தில் அந்த சாலையின் குறுக்காக குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு மீண்டும் அந்த இடத்தில் மண்ணால் மூடப்பட்டது.

    ஆறு போல் ஓடியது

    இதன் காரணமாக அந்த இடம் மேடாக காட்சியளித்ததால், வெளியேறிய தண்ணீர் முழுவதும் ரெயில்நிலையம் செல்லும் சாலையை நோக்கி ஓடியது. அந்த பகுதியில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி கிடந்தது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றது.

    தகவல் அறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தி னர் குழாய் அடைப்பை சரி செய்து வருகின்றனர். ஏற்கனவே சந்திப்பு பகுதியில் வாறுகால் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டும், தூர்ந்து போயும் இருப்பதால் மழை காலங்களில் அந்த இடம் தீவு போல் காட்சியளித்து வருகிறது.

    எனவே மழை காலத்திற்கு முன்பாக அந்த பகுதியில் வாறுகால்களை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • தரைப்பாலம் முழுவதும் இடிக்கப்பட்டு புதிய பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று முடிந்தது.
    • பாலம் அமைக்கப்பட்ட இடத்தில் கொள்ளிடம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பு கலூரில் நாகை-நன்னிலம் நெடுஞ்சாலையின் குறுக்கே தோட்டக்குடி பாசன வாய்க்கால் அமைந்துள்ளது.

    இந்த பாசன வாய்க்கால் மூலம் தாமரைக்குளம், பூவாளி தெரு, பட்டக்கால் தெரு உள்ளிட்ட 3 கிராமங்களுக்கு உட்பட்ட சுமார் 250 ஏக்கர் விளைநிலங்களுக்கு முக்கிய பாசன வாய்க்காலாக தோட்டக்குடி வாய்க்கால் உள்ளது.

    இந்த வாய்க்காலில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தரைப்பாலம் ஒன்று இருந்தது.

    கடந்த சில ஆண்டுக்கு முன்னர் தரைப்பாலத்தில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் தரைப்பாலம் முழுவதும் இடிக்கப்பட்டு புதிய பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று முடிந்தது.

    இந்த நிலையில் முடிகொண்டான் ஆற்றில் காவிரி பாசன நீர் வந்து சேர்ந்துள்ளது.

    இந்த பாசன நீர் தோட்டக்குடி வாய்க்கால் வழியாக விளை நிலங்களில் உட்புகாமல் மண்ணை வைத்து அடைக்கப்பட்டுள்ளது.

    இதனால் மேற்கண்ட கிராம பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் குருவைப் பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் சேதம் அடையும் அபாய நிலையில் உள்ளது.

    மேலும் பாலம் அமைக்கப்பட்டுள்ள இடத்தின் வழியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் செல்கிறது.

    இந்த குடிநீர் நாகூர், நாகப்ப ட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதும க்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பாலம் அமைக்கப்பட்ட இடத்தில் கொள்ளிடம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் அதிக அளவில் வெளியேறி முடிகொண்டானாற்றில் கலந்து வீணாகிறது.

    இந்த குடிநீர் குழாய் உடைப்புகள் சரி செய்யப்படாமல் உள்ளது.

    கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரை பயன்படுத்தும் நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதா ரண்யம் உள்ளிட்ட பகுதி களை சேர்ந்த 50,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

    இது குறித்து சம்பந்த ப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைப்பை சரி செய்து தோட்டக்குடி வாய்க்கால் பாசன பெரும் விவசாய பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து எதிர்பார்த்துள்ளனர்.

    • ரூ.6லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் குடிநீர் விரிவாக்கப் பணி.
    • குடிநீர் குழாய் விரிவாக்கப் பணி துவக்க விழா நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி 15வது வார்டு மேற்கு பல்லடம் கருப்பாண்டி வீதி, பழனியப்பா வீதி, எஸ்.வி.கிளினிக் வீதி, கொசவம்பாளையம் சாலை, கிருஷ்ணப்பா வீதி, ராமசாமி ஆகிய வீதியில் ரூ.6லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் குடிநீர் பகிர்மான குழாய் அமைத்து விரிவாக்கப் பணி துவக்க விழா நடைபெற்றது.

    இந்த பணியை நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் துவக்கி வைத்தார். இதில் நகராட்சி பொறியாளர் ஜான்பிரபு, பணி மேற்பார்வையாளர் ராசுக்குட்டி, நகராட்சி கவுன்சிலர் விஜயலட்சுமி, முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் வைஸ் பி.கே.பழனிசாமி, நகர தி.மு.க. நிர்வாகிகள் நடராஜன், குட்டி பழனிசாமி,சேகர்,அன்வர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பரமத்திவேலூர் காவிரி ஆற்றுப் பாலத்தில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் குழாயில் பழுது ஏற்பட்டு ஆங்காங்கே குடிநீர் வெளியேறி பாலத்தின் மீது பீச்சி அடித்து வருகிறது.
    • குடிநீர் குழாய் உடைப்பால் பொதுமக்கள் பாதிப்பு.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் கிணறு அமைத்து மின் மோட்டார் வைத்து அங்கிருந்து இந்தப் பாலத்தின்மேல் ஓரமாக குடிநீர் குழாய் அமைத்து பரமத்திவேலூர் பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குடிநீர் கொண்டு செல்லப்பட்டுவருகிறது.

    குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டு ஆங்காங்கே குடிநீர் குழாயிலிருந்து குடிநீர் வெளியேறி பாலத்தின் மீது பீச்சி அடித்து வருகிறது.

    இதனால் பாலத்தின் ஓரத்தில் நெடுகிலும் தண்ணீர் தேங்கி உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகளின் வாகனங்கள் தண்ணீரில் பட்டு நிலை தடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளது.

    எனவே துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கி குடி நீர் வெளியேறாமல் தடுத்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்தியாவின் பெருநகரங்களில் செயல்பாட்டில் உள்ள வீட்டிற்கு வீடு குழாய் வழி எரிவாயு இணைப்பு திட்டம் நாகை மாவட்டத்தில் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது.
    • நாகை மாவட்டம் முழுவதும் வீட்டிற்கு வீடு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் பணிகள் விரைந்து தொடங்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    உலக நாடுகள் மட்டு மில்லாமல், மும்பை, டில்லி உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களில் செயல்பாட்டில் உள்ள வீட்டிற்கு வீடு குழாய் வழி எரிவாயு இணைப்பு திட்டம் நாகை மாவட்டத்தில் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. திருமருகலை அடுத்த சீயாத்தமங்கை கிராமத்தில், தமிழகத்திலேயே முதல் முதலாக 14 வீடுகளில் குழாய் வழி எரிவாயு இணைப்பு திட்டத்தை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

    டோரண்ட் கேஸ் நிறுவனம் சார்பாக தொடங்கப்பட்டுள்ள குழாய் வழி எரிவாயு இணைப்பு திட்டத்தில் இதுவரை 65 இல்லத்தரசிகள் பதிவு செய்துள்ளனர். நாகை மாவட்டம் முழுவதும் வீட்டிற்கு வீடு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் பணிகள் விரைந்து தொடங்கப்படும் என்று கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

    சீயாத்தமங்கை கிராமத்தில் மிகுந்த பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு சேமிப்பு நிலையத்தில் இருந்து, 17 கிலோ தூரம் பூமி வழியாக 1 முதல் ஒன்றரை அடி ஆழத்தில் குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு வழங்கப்படுகிறது. வீட்டிற்கு வீடு மின்சாரம் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைப்பது போல எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டு, சமையலறைக்கு நேரடியாக எரிவாயு கொடுக்கப்பட்டுள்ளது.

    எல்.பி.ஜி. சிலிண்டரை விட பாதுகாப்பானதாக இருக்கும். கேஸ் தீரும் அச்சம், புக் செய்ய வேண்டியதில்லை, 24 மணி நேரமும் தடையில்லா கேஸ் விநியோகம் என பல அம்சங்களை கொண்ட திட்டத்தில், செலவீனமும் சிக்கனமாகும். குழாய் மூலம் வழங்கப்படும் எரிவாயுவில், 1 கொள்ளளவு ரூ.45 வீதம் ரூ.805 மட்டுமே செலவாகும். மின்சார கட்டணம் போல இரண்டு மாதத்திற்கு ஒருமுறை இணைய வழியிலேயே எரிவாயு கட்டணம் செலுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் நுகர்வோர் அலைய வேண்டிய அவசியமில்லை.

    கெயில் நிறுவனத்தில் இருந்து, இறக்குமதி செய்யப்படும், சமையல் எரிவாயுவானது குழாய்கள் மூலம் பாதுகாப்பான முறையில் வீட்டிற்கு வீடு கொண்டு வருவதை கண்காணிக்க 24 மணிநேரமும் தொழில்நுட்ப கண்காணிப்பு குழுவினர் அமைக்கப்பட்டுள்ளது. நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் 1 லட்சத்து, 60 ஆயிரம் இணைப்புகள் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று டோரண்ட் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ×