search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "petrol theft"

    • ரவி (வயது 34). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.
    • இரவு 11 மணியளவில் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்த போது நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் பெட்ரோல் திருடிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    ஓமலூர் அடுத்த பூசாரிப்பட்டி தாசசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 34). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார். இரவு 11 மணியளவில் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்த போது நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் பெட்ரோல் திருடிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அந்த வாலிபரை பிடித்து தீவட்டிப்பட்டி போலீசில் ஒப்படைத்தார். பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பண்ணப்பட்டி காங்கேய னூர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரின் மகன் விக்னேஷ் (23), என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • தமிழ்ச்செல்வி தன்னுடைய இருசக்கர வாகனத்தை வீட்டின் வாசலில் நிறுத்துவது வழக்கம்.
    • இவரது இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோல் திருடப்பட்டு வந்துள்ளது.

    திருச்சி,

    திருச்சி அரியமங்கலம்காந்தி தெரு பீடி காலனி 2வது தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது 30). இவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தை வீட்டின் வாசலில் நிறுத்துவது வழக்கம். இந்த நிலையில் அவரது வாகனத்தில் இருந்து தொடர்ந்து பெட்ரோல் திருட்டு நடைபெற்று வந்துள்ளது.

    கடந்த மூன்றாம் தேதி இரவு வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடும் சத்தம் கேட்டு தமிழ்ச்செல்வி வெளியே வந்து பார்த்தார்.

    அப்போது அரியமங்கலம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த தீபக் , திருவானைக்கோவில் நடு கொண்டையம்பேட்டை பகுதியை சேர்ந்த சம்பத் நாராயணன், பிரவீன் ராஜ் ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடியது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து மறு நாள் தீபக்கிடம் தமிழ்ச்செல்வி பெட்ரோல் திருடியது தொடர்பாக கேட்டபோது தீபக் மற்றும் சம்பத் நாராயணன் இருவரும் தமிழ்ச்செல்வியை தாக்கியுள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்ச்செல்வி அரியமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீபக் மற்றும் சம்பத் நாராயணன் இருவரையும் கைது செய்தனர். மேலும் சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

    • 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து 20 லிட்டர் பெட்ரோலை நிரப்பி அங்கிருந்து தப்பினர்.
    • குணசேகரன் சக ஊழியர் ஒருவரை அழைத்து கொண்டு அருகில் உள்ள இடங்களில் அந்த வாலிபர்களை தேடினார்.

    கோவை:

    கோவை கோவில்பாளையம் அடுத்த குரும்பபாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன்(வயது62). இவர்அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இரவு நேர காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு அவர் வழக்கம் போல வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் பெட்ரோல் பங்கில் 20 லிட்டர் பெட்ரோலை மோட்டார் சைக்கிளில் நிரப்பி அங்கிருந்து தப்பினர்.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி குணசேகரன் அவர்களை பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் குணசேகரன் சக ஊழியர் ஒருவரை அழைத்து கொண்டு அருகில் உள்ள இடங்களில் அந்த வாலிபர்களை தேடினார்.

    அப்போது அருகில் 3 வாலிபர்களில் ஒருவர் மட்டும் இருந்தார். அவரை குணசேகரன் மடக்கி பிடித்தார். பின்னர் கோவில்பாளையம் போலீசில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில் அவர் சிவகங்கையை சேர்ந்த செல்வகுமார் (27) என்பதும், தப்பியது அவரது நண்பர்கள் மனோஜ் கண்ணா மற்றும் மகாராஜா என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் செல்வகுமாரை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தஞ்சையில் மோட்டார் சைக்கிள் திருட்டு மற்றும் பெட்ரோல் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழிப்பறி, செயின் பறிப்பு, பைக் திருட்டு போன்ற சம்பவங்கள் அதிகளவு நடந்தன.

    இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் அதிகமாக புகார்களும் எழுந்தன. இதனால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்ததால் திருடர்கள் நடமாட்டம் குறைந்தது.

    தஞ்சை தொம்பன்குடிசை அருகே உள்ள செண்பக வள்ளி நகர் 2-வது தெருவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த தெருக்களில் 6 மின் கம்பங்கள் உள்ளன. ஆனால் ஒரு மின் கம்பங்களிலும் தெரு விளக்குகள் பொருத்தப்பட வில்லை.

    இதனால் செண்பகவள்ளி 2-வது தெரு இரவு நேரம் முழுவதும் இருட்டாக காட்சியளிக்கும். வேலைக்கு சென்று இரவில் வீடு திரும்பும் ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் தங்களது மோட்டார் சைக்கிள்களை வீட்டின் வெளியே தான் நிறுத்துவர்.

    இதை பயன்படுத்தி கொண்டு பைக் கொள்ளையர்கள் அதிகாலை 3 மணியளவில் வந்து மோட்டார் சைக்கிளை திருடி செல்கின்றனர்.

    தற்போது பெட்ரோல் விலை கிடுகிடு என்று உயர்ந்துள்ளது. லிட்டர் ரூ.83-க்கு விற்பதால் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் திருட்டு சம்பவமும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் கூறியதாவது:-

    தஞ்சை 44-வது வார்டு தொம்பன்குடிசை அருகே உள்ள செண்பகவள்ளி நகரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள் திருட்டு, பெட்ரோல் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.

    இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பெரும் பாலும் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக தான் உள்ளனர். குறிப்பாக இரவு நேரங்களில் தான் திருட்டு சம்பவங்கள் அதிகம் நடைபெறுகிறது.

    இதனால் மாநகராட்சி அதிகாரிகள் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க எங்கள் தெருக்களில் மின் விளக்குகள் அமைத்து தர வேண்டும். மேலும் போலீசார் துறையினர் இப்பகுதியில் இரவு நேர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மீஞ்சூர் அருகே டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படும் டீசல், பெட்ரோல் திருடப்படுவதாக 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பொன்னேரி:

    மீஞ்சூர் அருகே உள்ள வல்லூர்கூட்டுசாலை அருகில் டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படும் டீசல், பெட்ரோல் திருடப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது லாரிகளில் இருந்து நூதன முறையில் பெட்ரோல் திருடிக் கொண்டிருந்த 13 பேரை கைது செய்தனர். அவர்கள் கவுண்டர்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்குமார், வண்டலூர் பாண்டு, டிரைவர் திருவண்ணாமலை கார்த்தி, பாடி கணேசன், ஏழுமலை, அத்திப்பட்டு புதுநகர் சந்தோஷ், கார்த்திக், பெருமாள், அய்யனார், சிவா, பிரவீண்குமார், மீஞ்சூர் கோபால், வெங்கடேச பாண்டி என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து டீசல், பைப், பேரல்கள் உள்ளிட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews
    ×