search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tanker Larry"

    மீஞ்சூர் அருகே டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படும் டீசல், பெட்ரோல் திருடப்படுவதாக 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பொன்னேரி:

    மீஞ்சூர் அருகே உள்ள வல்லூர்கூட்டுசாலை அருகில் டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படும் டீசல், பெட்ரோல் திருடப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது லாரிகளில் இருந்து நூதன முறையில் பெட்ரோல் திருடிக் கொண்டிருந்த 13 பேரை கைது செய்தனர். அவர்கள் கவுண்டர்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்குமார், வண்டலூர் பாண்டு, டிரைவர் திருவண்ணாமலை கார்த்தி, பாடி கணேசன், ஏழுமலை, அத்திப்பட்டு புதுநகர் சந்தோஷ், கார்த்திக், பெருமாள், அய்யனார், சிவா, பிரவீண்குமார், மீஞ்சூர் கோபால், வெங்கடேச பாண்டி என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து டீசல், பைப், பேரல்கள் உள்ளிட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews
    ×