search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Perambalur constituency"

    • மோடி மீண்டும் பிரதமர் ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தூக்கி வீசிவிடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
    • இருவரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

    சென்னை:

    இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அறிவுறுத்தலின் பேரில் அக்கட்சியின் அமைப்பு குழு பொதுச் செயலாளர் ஆனந்த் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளரான அருண் நேருவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட போது, உண்மைக்கு புறம்பான சமூகத்திற்கு மிகவும் ஆபத்தான விஷயங்களை தன்னுடைய பிரசார உரையில் குறிப்பிட்டுள்ளார்.

    மோடி மீண்டும் பிரதமர் ஆனால் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. தேவாலயங்கள், மசூதிகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்று பேசியுள்ளார்.

    மோடி மீண்டும் பிரதமர் ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தூக்கி வீசிவிடுவார்கள் என்றும் கூறியுள்ளார். அவரது உரையில் மத வெறுப்பு பிரசாரமும் பிரதமர் மோடியின் மீதான அவதூறு பிரசாரமும் மிகவும் மேலோங்கி காணப்படுகிறது.

    பா.ஜ.க. தான் பாபர் மசூதி கட்டிடத்தை இடித்தார்கள் என்று எங்கேயும் சட்ட பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. பா.ஜ.க.வின் மேடைகளிலோ அல்லது சங்பரிவாரின் மேடைகளிலோ தொல்.திருமாவளவன் கூறுவது போல் எங்கேயும் உரையாற்றியதற்கான சான்றுகள் இல்லை.

    இது ஐ.பி.சி. சட்டப்பிரிவு 123(3A)யின் படி குற்றமாகும். இந்திய குடிமக்களிடம் மதரீதியான வித்தியாசங்களை பயன்படுத்தி மோதவிட்டு வெறுப்புணர்வோடு வாக்கு சேகரிக்கும் ஒரு யுக்தி ஆகும்.

    எனவே இருவரையும் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாரிவேந்தர் தனது சொந்த நிதியிலிருந்து, பெரம்பலூர் தொகுதியில் உள்ள நூறு அரசுப் பள்ளிகளுக்கு, ரூபாய் பத்து லட்சம் மதிப்பிலான கணினிகளை வழங்கினார்.
    • விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காக, லாரிகள் மூலம் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு கொடுத்தார்.

    சாதாரண ஆசிரியராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி, பல கல்வி நிறுவனங்களை உருவாக்கி இன்று தமிழகத்தின் கல்வித் தந்தைகளில் ஒருவராக தன்னை உயர்த்திக் கொண்டவர். தமிழகம் மற்றும் இந்தியாவில் பல கல்வி நிறுவனங்களை உருவாக்கியவர். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில், இந்திய ஜனநாயக கட்சியை நிறுவினார். 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட, டாக்டர் பாரிவேந்தர், மக்களின் பெரும் ஆதரவை பெற்று, பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். தொடர்ந்து நாட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காகவும், உயரிய கொள்கைகள் கொண்டு மாணவ மாணவிகளுக்கு, உலகத் தரக் கல்வியை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி, வியக்க தக்க செயல்களை செய்து வருகிறார். மக்கள் பணியாற்ற மக்களவை சென்ற டாக்டர் ப்பாரிவேந்தர், மக்களவையில் 268 முறை கேள்விகள் எழுப்பியுள்ளார். மக்களவையில் நடைபெற்ற விவாதங்களில் முப்பத்தி ஒன்பது முறை பங்கேற்றுள்ளார், இரண்டு முறை தனி நபர் மசோதா கலந்து கொண்டுள்ளார். 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி, இலவச கல்வி உதவி திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில், மொத்தம் ஆயிரத்தி இருநூறு மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், சட்டம், கலை மற்றும் அறிவியல், மேலாண்மை உள்ளிட்ட இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு, நூற்றி இருபத்தாறு கோடி ரூபாயை தமது SRM பல்கலைக்கழகம் மூலம் வழங்கினார். டாக்டர் பாரிவேந்தர் தனது சொந்த நிதியிலிருந்து, பெரம்பலூர் தொகுதியில் உள்ள நூறு அரசுப் பள்ளிகளுக்கு, ரூபாய் பத்து லட்சம் மதிப்பிலான கணினிகளை வழங்கினார்..

    டாக்டர் பாரிவேந்தர் தமது அயராத முயற்சியால், அரியலூரிலிருந்து பெரம்பலூர் வழியாக நாமக்கல் செல்லும் ரயில் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில், டாக்டர் பாரிவேந்தர், பிரதமர், நிதி அமைச்சர், ரயில்வே துறை அமைச்சரிடம் பல முறை கோரிக்கை விடுத்து, தற்போது புதிய ரயில் தடம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். தமது சொந்த நிதியிலிருந்து பெரம்பலூர் தொகுதிற்கு உட்பட்ட மூன்று கிராமங்களுக்கு, சொந்த நிதியிலிருந்து boreவெல் வசதி ஏற்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காக, லாரிகள் மூலம் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு கொடுத்தார்.

    டாக்டர் பாரிவேந்தர், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, பெரம்பலூர், லால்குடி, துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், குளித்தலை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளில், தமது பெரம்பலூர் தொகுதிகளில் பெரம்பலூருக்கு உட்பட்ட வேலூர் கிராமத்தில் ரூபாய் பதினெட்டு லட்சம் மதிப்பிலான தார்சாலை அமைத்து கொடுத்தார். கைகளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூபாய் முப்பத்தொன்பது லட்சம் மதிப்பிலான வகுப்பறையை அமைக்க, தழுதாழை மற்றும் நெய்க்குப்பை ஊராட்சியில் பேருந்து நிழற்குடை அமைப்பதற்காக, ரூபாய் இருபது லட்சம், குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆழ்துளைக் கிணறுடன் கூடிய, குடிநீர் தொட்டி அமைத்தல் ருபாய் இரண்டு புள்ளி ஐம்பது லட்சம், செங்குணம் ஊராட்சியில் பேருந்து பயணியர் நிழற்குடை அமைத்தல் ருபாய் மூன்று லட்சம், துணை இயக்குநர் சுகாதாரம் பெரம்பலூர் மருத்துவமனை ருபாய் நாற்பது லட்சம், பெரகம்பி முதல் கண்ணப்பாடி வரை குடிநீர், ருபாய் இருபத்தி நான்கு லட்சம், ராமசாமி மருத்துவமனை பேவர் பிளாக் ருபாய் ஏழு லட்சம், வெங்கலம் கிராமம் நியாய விலைக்கடை, ருபாய் ஒன்பது லட்சம், போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் CCTV கேமரா, ருபாய் பத்து லட்சம், வேலூர் ஊராட்சி புதுநடுவலூர் ருபாய் ஐந்து புள்ளி இருபத்தெட்டு லட்சம் உள்ளிட்ட உதவிகளை தமது தொகுதி மக்களுக்கு வழங்கினார்.


    தமது லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளனூர் அரசு நடுநிலைப்பள்ளி, ரூபாய் முப்பத்தியோரு கோடி ஐம்பத்தாறு லட்சம், CCTV கேமரா ரூபாய் மூன்று லட்சம், அன்பில் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி பேவர் பிளாக் ரூபாய் நான்கு லட்சம், புள்ளம்பாடி ஒன்றியம் வி-கண்ணனூர் ஊராட்சியில், பயணியர் நிழற்குடை அமைத்தல் ரூபாய் 6.94 லட்சம், அகலங்கநல்லூர் ஊராட்சி சமுதாயக் கூடம் ரூபாய் 44 லட்சம், கொன்னைக்குடி ஊராட்சி அங்கன்வாடி ரூபாய் 14 லட்சம், புள்ளம்பாடி, மால்வாய் அரசுப் பள்ளிக் கழிவறை ரூபாய் 7.70 லட்சம், ஒரத்தூர் சமுதாயக் கூடம் ரூபாய் 44 லட்சம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார். தமது துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்திரப்பட்டி, மதுராபுரி ஊராட்சி சமுதாயக்கூடம் ரூபாய் 31 லட்சம், முருகூர் நியாயவிலைக் கடை ரூபாய் 13.80 லட்சம், முருகூர் மயானக் கொட்டகை ரூபாய் 2.74 லட்சம், தொட்டியம் அரங்கூர் மேல்நிலைப்பள்ளி இரண்டு வகுப்பறைக் கட்டடம், ரூபாய் 33 லட்சம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார். தமது முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டு வகுப்பறைக் கட்டடம் ரூபாய் 35 லட்சம், வெங்கடாசலபுரம் மான்ய துவக்கப் பள்ளியில் இரண்டு வகுப்பறைக் கட்டடம் ரூபாய் 31.56 லட்சம், சாரண சாரணியர் முகாம் கட்டிடம், முசிறி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி ரூபாய் 27 லட்சம், தா.பேட்டை ஊராட்சி ஒன்றியம் பைத்தம்பாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் இரண்டு வகுப்பறைக் கட்டிடம், ரூபாய் 33 லட்சம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.

    டாக்டர் பாரிவேந்தர் தொகுதிக்கு செய்த உள்கட்டமைப்புகள்

    டாக்டர் பாரிவேந்தர் தமது அயராத முயற்சியால், அரியலூரிலிருந்து பெரம்பலூர் வழியாக நாமக்கல் செல்லும் ரயில் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில், டாக்டர் பாரிவேந்தர், பிரதமர், நிதி அமைச்சர், ரயில்வே துறை அமைச்சரிடம் பல முறை கோரிக்கை விடுத்து, தற்போது புதிய ரயில் தடம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். வரலாற்று மிக்க சிறப்பு திட்டங்கள் தமது சொந்த நிதியிலிருந்து பெரம்பலூர் தொகுதிற்கு உட்பட்ட மூன்று கிராமங்களுக்கு சொந்த நிதியிலிருந்து போர்வெல் வசதி ஏற்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காக லாரிகள் மூலம் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு கொடுத்தார்.

    ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு செய்த பணிகள் என்ன?

    டாக்டர் பாரிவேந்தர், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர், லால்குடி, துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், குளித்தலை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளில் தமது பெரம்பலூர் தொகுதிகளில் பெரம்பலூருக்கு உட்பட்ட வேலூர் கிராமத்தில் ரூபாய் 18 லட்சம் மதிப்பிலான தார்சாலை அமைத்து கொடுத்தார். கைகளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூபாய் 39 லட்சம் மதிப்பிலான வகுப்பறையை அமைக்க, தழுதாழை மற்றும் நெய்க்குப்பை ஊராட்சியில் பேருந்து நிழற்குடை அமைப்பதற்காக 20 லட்சம் ரூபாய், குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆழ்துளைக் கிணறுடன் கூடிய குடிநீர் தொட்டி அமைத்தல் ரூபாய் 2.50 லட்சம், செங்குணம் ஊராட்சியில் பேருந்து பயணியர் நிழற்குடை அமைத்தல் ரூபாய் 3 லட்சம், துணை இயக்குநர் சுகாதாரம் பெரம்பலூர் மருத்துவமனை ரூபாய் 40 லட்சம், பெரகம்பி முதல் கண்ணப்பாடி வரை குடிநீர் ரூபாய் 24 லட்சம், ராமசாமி மருத்துவமனை பேவர் பிளாக் ரூபாய் 7 லட்சம், வெங்கலம் கிராமம் நியாய விலைக்கடை ரூபாய் 9 லட்சம், போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சி.சி.டி.வி. கேமரா ரூபாய் 10 லட்சம், வேலூர் ஊராட்சி புதுநடுவலூர் ரூபாய் 5.68 லட்சம் உள்ளிட்ட உதவிகளை தமது தொகுதி மக்களுக்கு வழங்கினார்.

    தமது லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளனூர் அரசு நடுநிலைப்பள்ளி ரூபாய் 3156 லட்சம், சி.சி.டி.வி. கேமரா லால்குடி ரூபாய் 3 லட்சம், அன்பில் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி பேவர் பிளாக் ரூபாய் 4 லட்சம், புள்ளம்பாடி ஒன்றியம் வி. கண்ணனூர் ஊராட்சியில் பயணியர் நிழற்குடை அமைத்தல் ரூபாய் 6.94 லட்சம், அகலங்கநல்லூர் ஊராட்சி சமுதாயக் கூடம் ரூபாய் 44 லட்சம், கொன்னைக்குடி ஊராட்சி அங்கன்வாடி ரூபாய் 14 லட்சம், புள்ளம்பாடி, மால்வாய் அரசுப் பள்ளிக் கழிவறை ரூபாய் 7.70 லட்சம், ஒரத்தூர் சமுதாயக் கூடம் ரூபாய் 44 லட்சம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.

    தமது துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்திரப்பட்டி, மதுராபுரி ஊராட்சி சமுதாயக்கூடம் ரூபாய் 31 லட்சம், முருகூர் நியாயவிலைக் கடை ரூபாய் 13.80 லட்சம், முருகூர் மயானக் கொட்டகை ரூபாய் 2.74 லட்சம், தொட்டியம் அரங்கூர் மேல்நிலைப்பள்ளி இரண்டு வகுப்பறைக் கட்டடம் ரூபாய் 33 லட்சம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.


    தமது முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டு வகுப்பறைக் கட்டடம் ரூபாய் 35 லட்சம், வெங்கடாசலபுரம் மான்ய துவக்கப் பள்ளியில் இரண்டு வகுப்பறைக் கட்டடம் ரூபாய் 31.56 லட்சம், சாரண சாரணியர் முகாம் கட்டிடம் முசிறி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி ரூபாய் 27 லட்சம், தாத்தையங்கார்ப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பைத்தம்பாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் இரண்டு வகுப்பறைக் கட்டிடம் ரூபாய் 33 லட்சம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.

    தமது மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தண்ணீர் தொட்டி ரூபாய் 2.50 லட்சம், மண்ணச்சநல்லூர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ரூபாய் 33 லட்சம், சனமங்கலம் ஊராட்சியில் சமுதாயக் கூடம் அமைத்தல் ரூபாய் 37.30 லட்சம், சிறுகுடி ஊராட்சியில் இரண்டு வகுப்பறை அமைத்தல் ரூபாய் 33.56 லட்சம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.

    எழுச்சி மிக்க தலைவராக டாக்டர் பாரிவேந்தர் செயல்படுவது எப்படி?

    டாக்டர் பாரிவேந்தர் எம்.பி. தனது சொந்த நிறுவனங்களின் மூலம், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்காக ஏராளமான பணிகளை மேற்கொண்டார். அதில் முக்கியமான திட்டங்களாக திகழ்பவை, இலவச உயர்கல்வித் திட்டத்தின் கீழ் அவர் 118 கோடியே 77 லட்சத்து 51 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு படிப்புகளில் 1,200 மாணவ- மாணவிகளுக்கு உதவி செய்துள்ளார். இதனிடையே, கொரோனா பேரிடர் கால உதவிகளை ரூபாய் 2 கோடியே ரூபாய் 22 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் செய்துள்ளார். இதில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி, மருத்துவ மற்றும் உணவுப் பொருட்கள் வினியோகம், வெளியூர்களில் சிக்கியோர் மீட்பு போன்ற பணிகள் அடங்கும். மேலும், பள்ளி மற்றும் ஊர் நலனுக்காக ரூபாய் 1 கோடியே 9 லட்சம் மதிப்பில் கணினி, போர்வெல் அமைத்தல், குடிநீர் சுத்திகரிப்பு பணிகளை நிறைவேற்றி உள்ளார். ஆன்மிகம் மற்றும் அறப்பணிகளுக்காக ரூபாய் 4 கோடியே 80 லட்சத்து 80 ஆயிரம் செலவு செய்துள்ளார். மொத்தம் ரூபாய் 126 கோடியே 90 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பீட்டில் ஏராளமான திட்டப்பணிகளை நிறைவேற்றி உள்ளார். பாரிவேந்தர் எம்.பி.யின் இத்தகைய பணிகளுக்கு தொகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பெரம்பலூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக டாக்டர் பாரிவேந்தர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் செய்த மக்கள் பணிகளை பாராட்டி இந்த முறையும் மக்கள் அவருக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர் மீண்டும் பெரம்பலூர் தொகுதி எம்பி ஆவார் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர்.

    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
    • பெரம்பலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கற்பகத்திடம் வேட்புமனுவை அருண் நேரு வழங்கினார்.

    பெரம்பலூர்:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடக்கிறது. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 28-ந் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப்பெற 30-ந் தேதி கடைசி நாளாகும்.

    தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்-9, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களிலும், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் போட்டியிடுகிறது. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது.

    திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேரு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    பெரம்பலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கற்பகத்திடம் வேட்புமனுவை அருண் நேரு வழங்கினார். திமுகவில் முதல் ஆளாக அருண்நேரு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட பாரிவேந்தர் 6,83,697 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    பெரம்பலூர்:

    தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.

    நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னணிலை பெற்றது.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.

    பெரம்பலூர் தொகுதியில் 13,91,011 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 10,94,659 வாக்குகள் பதிவானது.

    இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் 6,83,697 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.சிவபதி 2,80,179 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாந்தி 53,545, அமமுக வேட்பாளர் ராஜசேகரன் 45,591 வாக்குகள் பெற்றுள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட பாரிவேந்தர் முன்னிலை வகித்து வருகிறார்.
    பெரம்பலூர்:

    தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.

    இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னணிலை பெற்றது.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.

    இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் 12 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 4,14,769 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.

    அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.சிவபதி 1,73,953 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். 
    பெரம்பலூர் தொகுதி வாக்கு எண்ணும் பணிகளில் கண்காணிப்பாளர், உதவியாளர் மற்றும் நுண்பார்வையாளர் என 306 நபர்கள் ஈடுபட உள்ளனர்.
    பெரம்பலூர்:

    தமிழகத்தில் உள்ள அனைத்து பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. அதன்படி பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    இந்தநிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் சாந்தா கூறியதாவது:-

    பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட குளித்தலை, முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கும் எண்ணும் மையமான தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் நர்சிங் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர், தமிழக சிறப்பு காவல் படையினர், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் உள்ளூர் காவலர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இவ்வாக்கு எண்ணும் பணிகளில் கண்காணிப்பாளர், உதவியாளர் மற்றும் நுண்பார்வையாளர் என 306 நபர்கள் ஈடுபட உள்ளனர்.

    பதிவான வாக்குகள் அனைத்தும் 14 எண்ணிக்கையிலான மேஜைகள் அமைக்கப்பட்டு பல்வேறு சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன. அதன்படி பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் 24 சுற்றுகளாகவும், குளித்தலை சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் 20 சுற்றுகளாகவும், லால்குடி சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் 18 சுற்றுகளாகவும், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் 20 சுற்றுகளாகவும், முசிறி சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் 19 சுற்றுகளாகவும், துறையூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் 20 சுற்றுகளாகவும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×