search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Passenger request"

    • அரசு அலுவலர்கள் கூட்டம், ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக் கிழமை விவசாயிகள் கூட்டம் நடைபெற்று வருகின்றது.
    • கலெக்டர் அலுவலகம் முன்பு குளிர்சாதன வசதி யுடன் அமைக்கப்பட்ட பஸ் நிறுத்தம் முழுவதும் சிதலமடைந்து பயனற்ற நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    கடலூர் செம்மண்டலம் கரும்பு ஆராய்ச்சி நிலையம் அருகே புதிய கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பணிகள் தொடர்பாகவும், கோரிக்கை மனுக்கள் அளிப்பது தொடர்பாகவும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் வாரந்தோறும் திங்கட்கிழமை மற்றும் பல்வேறு அரசு அலுவ லர்கள் கூட்டம், ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக் கிழமை விவசாயிகள் கூட்டம் நடைபெற்று வருகின்றது.

    இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடலூர் கலெக்டர் அலு வலகத்திற்கு வந்து செல்லும் நிலையில் கடலூர் பஸ் நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து செல்லக் கூடிய பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடலூர் கலெக்டர் அலுவல கத்திற்கு பேருந்தில் செல்லும் போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தாமல் செல்கின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் கடும் அவதி அடைந்து வருவ தோடு, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி யிடம் புகார் தெரிவித்தும் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை. இது மட்டும் இன்றி கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு குளிர்சாதன வசதி யுடன் அமைக்கப்பட்ட பஸ் நிறுத்தம் முழுவதும் சிதல மடைந்து பயனற்ற நிலை யில் இருப்பதும் குறிப்பிடத் தக்கதாகும். மேலும் அதிகாரி களிடம் புகார் தெரிவிக்கும் சமயத்தில் டிரைவர்கள் பேருந்து நிறுத் தத்தில் நிறுத்தி செல்கின்ற னர். பின்னர் வழக்கம் போல் கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தத்தில் பேருந்து களை நிறுத்தி செல்லாமல் ஆல்பேட்டை சோதனை சாவடி நிறுத்தம் வரை அனைவரும் சென்று அங்கிருந்து ஆட்டோ மூலம் தங்கள் பணிக்கு கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் ஏதேனும் பிரச்சனைகள் மற்றும் குறைகள் இருந்தால் கடலூர் கலெக்டர் அலுவல கத்தில் கோரிக்கை மனு அளித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆனால் கடலூர் கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்லாமலும், அதனை மீறி நிறுத்தி சென்றால் பொது மக்களுக்கும் நடத்துனருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அதன் பிறகு அவசர அவசர மாக நிறுத்தி பயணிகளை இறக்கி விடும்போது பல்வேறு விபத்துக்கள் ஏற்படும் நிலை உருவாகி யுள்ளது. ஆகையால் கடலூர் கலெக்டர் அலுவலகம் வழி யாக செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்ல வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட போக்கு வரத்து துறை அதிகாரிகள் உரிய முறையில் நடவடிக்கை எடுப்பார்களா? என பார்ப்போம். 

    • மீட்டர் கேஜ் ரெயில் பாதை இருந்தபோது கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
    • அமிர்தா எக்ஸ்பிரஸ் உடுமலை ரெயில் நிலையத்திற்கு காலை 6.10 மணிக்கு வந்து, 6.12 மணிக்கு புறப்பட்டு பழனி, திண்டுக்கல் வழியாக மதுரைக்கு 10 மணிக்கு சென்று சேருகிறது.

    உடுமலை : 

    உடுமலையில் முன்பு மீட்டர் கேஜ் ரெயில் பாதை இருந்தபோது கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் சேவை ராமேஸ்வரம் சென்று வந்த பக்தர்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.

    இந்த ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றும் பணிகள் நடந்து வந்ததால் இந்த வழித்தடத்தில் 2009-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளாக ரெயில் சேவை இல்லாமலிருந்தது. இந்த ரெயில்பாதை பணிகள் நிறைவடைந்த பிறகு கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அகல ரெயில் பாதையாக இயங்கி வருகிறது.

    இதைத்தொடர்ந்து உடுமலை வழியாக ராமேஸ்வரத்திற்கு ரெயில் சேவை மீண்டும் இருக்கும் என்று பயணிகள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த வழித்தடத்தில் ராமேஸ்வரத்திற்கு ரெயில் சேவை இல்லை. இந்த நிலையில் உடுமலை ரெயில் பாதை தற்போது மின்மயமாக்கப்பட்டுள்ளது. தினசரி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளம், பாலக்காடு, பொள்ளாச்சி வழியாக மதுரைக்கு செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் உடுமலை ரெயில் நிலையத்திற்கு காலை 6.10 மணிக்கு வந்து, இங்கிருந்து 6.12 மணிக்கு புறப்பட்டு பழனி, திண்டுக்கல் வழியாக மதுரைக்கு 10 மணிக்கு சென்று சேருகிறது.

    அந்த ரெயில் உடுமலை, பாலக்காடு, எர்ணாகுளம் வழியாக திருவனந்தபுரத்திற்கு செல்வதற்கு மதுரையில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும். அதுவரை அந்த ரெயில் மதுரை ரெயில் நிலையத்தில் நின்றிருக்கும்.

    ராமேஸ்வரம் வரை இந்த இடைப்பட்ட நேரத்தில் இந்த ரெயிலை ராமேஸ்வரம் வரை சென்று வரும் வகையில் இயக்குவதற்கு நேரம் உள்ளது. அவ்வாறு அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயிலை ராமேஸ்வரம் வரை நீட்டித்து இயக்கினால் உடுமலை மட்டுமல்லாது பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயனடைவார்கள்.

    அதனால் உடுமலை வழியாக இயக்கப்படும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில் நிலையத்திற்கு பஸ் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில் நிலையத்திற்கு பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள், பயணிகள் சிரமப்படுகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில் நிலையம் வழியாக சென்னை- செங்கோட்டை, மதுரை-செங்கோட்டை, செங்கோட்ட- மயிலாடுதுறை, வேளாங்கண்ண-எர்ணாகுளம், சென்னை- கொல்லம், திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் ஆகிய ெரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில் நிலையம் வழியாக தினசரி 6 ெரயில்கள் செல்கிறது. பொதுமக்கள் ஆட்டோ மூலம் ெரயில் நிலையத்திற்கு செல்கின்றனர். வெளியூர் பயணிகள் நீதிமன்றம் சென்று அங்கிருந்து ெரயில் நிலையத்திற்கு நடந்து செல்கின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில் நிலையத்திற்கு பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள், பயணிகள் சிரமப்படுகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசி, திருத்தங்கல், கிருஷ்ணப்பேரி, அச்சங்கு ளம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளை தேரடி, நகராட்சி அலு வலகம், தாலுகா அலுவலகம், ெரயில் நிலையம் வழியாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனால் ெரயில் பயணிகள் மட்டுமின்றி தாலுகா அலுவலகம் செல்லும் மக்களும் பயனடைவர். இதனால் நகர பஸ்களை ெரயில் நிலையம் வழியாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மைசூரில் இருந்து தூத்துக்குடி மற்றும் மயிலாடுதுறை செல்லும் ரெயில்களின் பெட்டிகள் பழைய ஐ.சி.எப்.பெட்டிகளாக இயங்கி வந்த நிலையில் இன்று முதல் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிவப்பு வண்ண எல்.எச்.பி. பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது.
    • தென்காசி மாவட்ட பகுதிகளுக்கு முதன்முறையாக கரூர், நாமக்கல், சேலம், பெங்களூரு, மைசூருக்கு ரெயில் இணைப்பு கிடைக்கும்.

    தென்காசி:

    மைசூரில் இருந்து தூத்துக்குடி மற்றும் மயிலாடுதுறை செல்லும் ரெயில்களின் பெட்டிகள் பழைய ஐ.சி.எப்.பெட்டிகளாக இயங்கி வந்த நிலையில் இன்று முதல் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிவப்பு வண்ண எல்.எச்.பி. பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது.

    எனவே இந்த நான்கு ெரயில்களின் பழைய ரெயில் பெட்டி தொடர்களைக் கொண்டு மைசூரில் இருந்து பெங்களூரு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், அம்பை வழியாக நெல்லைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

    மைசூர்-தூத்துக்குடி-மைசூர் மற்றும் மைசூர் - மயிலாடுதுறை - மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், 23 பெட்டிகளுடன், பெட்டிகள் பகிர்வு முறையில் இயங்கி வந்தன.

    இந்த இரண்டு ரெயில் பெட்டி தொடர்களின் பராமரிப்பும் மைசூர் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வண்டி தென்மேற்கு ரெயில்வேக்கு சொந்தமான வண்டி ஆகும்.

    தற்போது இந்த 2 ரெயில்களின் பெட்டி தொடர்கள் அதிநவீன ஜெர்மன் தொழில்நுட்பம் கொண்ட எல்.எச்.பி. பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது.

    எனவே இந்த இரண்டு ரெயில்களின் 4 ெரயில் பெட்டி தொடர்களில் உள்ள 92 ெரயில் பெட்டிகளில் நல்ல பெட்டிகளை தேர்ந்தெடுத்து 18 பெட்டிகளை பயன்படுத்தி நாமக்கல், மதுரை, தென்காசி வழியாக நெல்லைக்கு இயக்க சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளது.

    இது குறித்து தென் மாவட்ட ரெயில் பயணிகள் கூறுகையில், மதுரை ரெயில்வே கோட்டத்தில் மிக முக்கிய வழித்தடமான விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், அம்பை. நெல்ைல வழித்தடத்தில் 3 மாவட்டங்கள் பயன்பெறும் மிக முக்கிய நகரங்கள் உள்ளன. இந்த வழித்தடத்தில் பெங்களூருக்கு ரெயில்கள் வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

    தற்போது அதற்கான நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. மைசூர் - தூத்துக்குடி, மயிலாடுதுறை ரெயில்களின் பழைய ெரயில் பெட்டிகளை பயன்படுத்தி உடனடியாக மைசூர் - நெல்லை வழி பெங்களூரு, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, ராஜபாளையம், தென்காசி அம்பை வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும். இதன் மூலம் தென்காசி மாவட்ட பகுதிகளுக்கு முதன்முறையாக கரூர், நாமக்கல், சேலம், பெங்களூரு, மைசூருக்கு ரெயில் இணைப்பு கிடைக்கும்.

    எனவே மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக தெற்கு ரெயில்வே மற்றும் தென்மேற்கு ரெயில்வே பொது மேலாளர்களுக்கு கடிதம் எழுதியும் நேரில் வலியுறுத்தியும் இந்த ரெயிலை பெற்று தர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.


    பேராவூரணியில் பழுதடைந்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பேராவூரணி:

    பேராவூரணி அரசு மருத்துவமனை, அரசு வங்கி, தனியார் வங்கி அருகில் உள்ள பயணியர் நிழற்குடை மூலம் கொன்றைக்காடு, காலகம், ஒட்டங்காடு, துர்க்கையம்மன் கோயில், புனல்வாசல், துறவிக்காடு பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் 1000-க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வந்தனர். மேலும் அரசு மருத்துவமனை,அரசு வங்கி,தனியார் வங்கி மற்றும் கடை வீதிக்கு சென்று தங்கள் ஊருக்கு திரும்ப மழை மற்றும் வெயில் காலங்களில் நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிழற்குடை கடந்த 2011-12-ஆம் ஆண்டு முன்னாள் மத்திய மந்திரி பழனிமாணிக்கம் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது ஆகும். இதனை முறையாக பராமரிக்காததால் தரையில் ஒட்டப்பட்ட டைல்ஸ் பெயர்ந்தும், பயணிகள் அமரும் இருக்கைகளை சேதமடைந்த நிலையில் உள்ளது. சில இருக்கைகள் காணவில்லை. இரவு நேரங்களில் மின்வசதி துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளதால் சமூக விரோதிகள் மது அருந்துவது,எச்சில் துப்புவது,புகை பிடித்துக் கொண்டிருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    எனவே தூய்மை இந்தியா திட்டத்தில் பயணியர் நிழற்குடையை சீரமைத்து மின்வசதி செய்துதர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×