search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ெரயில் நிலையத்திற்கு பஸ் இயக்க கோரிக்கை
    X

    ெரயில் நிலையத்திற்கு பஸ் இயக்க கோரிக்கை

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில் நிலையத்திற்கு பஸ் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில் நிலையத்திற்கு பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள், பயணிகள் சிரமப்படுகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில் நிலையம் வழியாக சென்னை- செங்கோட்டை, மதுரை-செங்கோட்டை, செங்கோட்ட- மயிலாடுதுறை, வேளாங்கண்ண-எர்ணாகுளம், சென்னை- கொல்லம், திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் ஆகிய ெரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில் நிலையம் வழியாக தினசரி 6 ெரயில்கள் செல்கிறது. பொதுமக்கள் ஆட்டோ மூலம் ெரயில் நிலையத்திற்கு செல்கின்றனர். வெளியூர் பயணிகள் நீதிமன்றம் சென்று அங்கிருந்து ெரயில் நிலையத்திற்கு நடந்து செல்கின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில் நிலையத்திற்கு பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள், பயணிகள் சிரமப்படுகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசி, திருத்தங்கல், கிருஷ்ணப்பேரி, அச்சங்கு ளம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளை தேரடி, நகராட்சி அலு வலகம், தாலுகா அலுவலகம், ெரயில் நிலையம் வழியாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனால் ெரயில் பயணிகள் மட்டுமின்றி தாலுகா அலுவலகம் செல்லும் மக்களும் பயனடைவர். இதனால் நகர பஸ்களை ெரயில் நிலையம் வழியாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×