search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mother and daughter"

    வலங்கைமான் அருகே வீட்டின் கதவை உடைத்து தாய்-மகளிடம் சங்கிலியை பறித்து சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 15¼ பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
    வலங்கைமான்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள கண்டியூரை சேர்ந்தவர் வைத்தியநாதன். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். கடந்த 5-ந்தேதி நள்ளிரவில் 4 மர்மநபர்கள், இவருடைய வீட்டின் பின்புறமாக தாழ்பாள் மற்றும் கதவுகளை நூதன முறையில் திறந்து உள்ளே நுழைந்தனர். அப்போது தூங்கி கொண்டிருந்த வைத்தியநாதனின் மனைவி அனுசுயா, மகள் கர்ப்பிணியான சிந்துஜா ஆகியோரின் கழுத்தில் கிடந்த 15¼ பவுன் சங்கிலியை பறித்து கொண்டு மர்மநபர்கள் மோட்டார் சைக்கிள்களில் தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து வைத்தியநாதன் வலங்கைமான் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன், வலங்கைமான் இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சம்பவத்தன்று அப்பகுதிகளில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் நாச்சியார்கோவில் கடைத்தெருவில் உள்ள கேமராவில் 4 பேர் மோட்டார் சைக்கிள்களில் செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து 4 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வலங்கைமான் மகாமாரியம்மன் கோவில் பகுதியில் நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், மன்னார்குடி தாலுகா பெருகவாழ்ந்தான் சித்தமல்லி மல்லிகை தெருவை சேர்ந்த துரைசாமி மகன் கார்த்திக் (வயது 19), அதே பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் ஆனந்தராஜ் (வயது 19), தஞ்சை மாவட்டம் பந்தல்லூர் செருகுடி மேலத்தெருவை சேர்ந்த செல்வகுமார் மகன் ரஞ்சித் (18), அதே பகுதியை சேர்ந்த ராயமுத்து மகன் விஜயகுமார் (32) என்பதும், வைத்தியநாதனின் வீட்டில் அவருடைய மனைவி மற்றும் மகளிடம் சங்கிலியை பறித்து சென்றதும் தெரியவந்தது. 

    இது குறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக், ஆனந்தராஜ், ரஞ்சித், விஜயகுமார் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை, வலங்கைமான் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 15¼ பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
    வீட்டு முன்பு கூரை அமைத்த தகராறில் தாய், மகள் மீது தாக்குதல் நடத்திய 4 பெண்கள் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள கடகுளத்தை சேர்ந்தவர் ஜெய்சீலன். இவரது மனைவி குணசீலி. இவர்களது மகள் டைட்டா கேப்ரின் (வயது 16). இவர்களது வீட்டின் முன்பு வெயிலுக்காக கூரை அமைத்திருந்தனர். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த அகிலா, அல்போன்ஸ், வாசுகி, செல்வி, ஜேசம்மாள், ஜெயபிரபு, சுகன் ஆகியோர்சிலர் இந்த கூரையை அகற்றும்படி கூறியுள்ளனர். ஆனால் குணசீலி வெயிலுக்காக அமைத்துள்ளேன். பின்னர் இதை அகற்றிவிடுகிறேன் என கூறியுள்ளார். 

    இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்தவர்கள் குணசீலி கீழே தள்ளி தாக்கியுள்ளனர். இதை தடுக்க சென்ற டைட்டா கேப்ரினையும் தாக்கியுள்ளனர். 

    இது குறித்து தட்டார்மடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து 4 பெண்கள் உள்ளிட்ட 7 பேரை வலைவீசி தேடி வருகிறார்.
    அரியலூரில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் தாய் மற்றும் மகளை தாக்கி 7 பவுன் நகையை பறித்து சென்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் அருகே சுப்பு ராயபுரத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி வனஜா (வயது 45). இவர்களுக்கு அனுசியா என்ற மகள் உள்ளார்.

    நேற்று மாலை தாய்-மகள் இருவரும் சுப்புராயபுரத்தில் இருந்து அரியலூருக்கு பைக்கில் சென்றுள்ளனர். அப்போது, எதிரே 2 வாலிபர்கள் பைக்கில் மோதுவது போல் வந்துள்ளனர். இதனால் வனஜா அதிர்ச்சியடைந்து வண்டியை நிறுத்தியுள்ளார்.

    அப்போது வனஜா மற்றும் அவரது மகளை வாலிபர்கள் இருவரும் தாக்கி கீழே தள்ளினர். மேலும் வனஜா அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பி சென்றனர். இது குறித்து வனஜா அரியலூர் போலீசில் புகார் அளித்தார்.

    இதேபோல் மேற்கு சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி காசாம்பு (37). இவர்கள் ஆடு-மாடுகள் வளர்த்து வருகின்றனர். நேற்று மாலை காசாம்பு மாடுகளை வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்கள் காசாம்பு கழுத்தில் அணிந் திருந்த 5 பவுன் செயினை பறித்து விட்டு தப்பி சென்றனர். 

    இது குறித்து கயர்லாபாத் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×