search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூரில் தாய்-மகளை தாக்கி நகை பறிப்பு
    X

    அரியலூரில் தாய்-மகளை தாக்கி நகை பறிப்பு

    அரியலூரில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் தாய் மற்றும் மகளை தாக்கி 7 பவுன் நகையை பறித்து சென்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் அருகே சுப்பு ராயபுரத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி வனஜா (வயது 45). இவர்களுக்கு அனுசியா என்ற மகள் உள்ளார்.

    நேற்று மாலை தாய்-மகள் இருவரும் சுப்புராயபுரத்தில் இருந்து அரியலூருக்கு பைக்கில் சென்றுள்ளனர். அப்போது, எதிரே 2 வாலிபர்கள் பைக்கில் மோதுவது போல் வந்துள்ளனர். இதனால் வனஜா அதிர்ச்சியடைந்து வண்டியை நிறுத்தியுள்ளார்.

    அப்போது வனஜா மற்றும் அவரது மகளை வாலிபர்கள் இருவரும் தாக்கி கீழே தள்ளினர். மேலும் வனஜா அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பி சென்றனர். இது குறித்து வனஜா அரியலூர் போலீசில் புகார் அளித்தார்.

    இதேபோல் மேற்கு சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி காசாம்பு (37). இவர்கள் ஆடு-மாடுகள் வளர்த்து வருகின்றனர். நேற்று மாலை காசாம்பு மாடுகளை வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்கள் காசாம்பு கழுத்தில் அணிந் திருந்த 5 பவுன் செயினை பறித்து விட்டு தப்பி சென்றனர். 

    இது குறித்து கயர்லாபாத் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×