search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Uthayakumar"

    அ.தி.மு.க.வின் தோல்வி பயத்தால் இடைத்தேர்தல் தள்ளிவைத்துள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியுள்ளார். #Khushboo #ElectionCommission

    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

    5 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பலகட்ட தேர்தல்களை அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடத்தப்படாததற்கு காரணம் மழை அல்ல. அ.தி.மு.க.வால் ஜெயிக்க முடியாது. இந்த தேர்தல் மட்டுமல்ல இனி எந்த தேர்தலிலும் அந்த கட்சி ஜெயிக்கப்போவதில்லை.

    காரணம், மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி அல்ல இது. முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் திணிக்கப்பட்டவர்கள். மக்கனால் அவர்கள் யாரையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தினகரனை ரகசியமாக சந்தித்ததை இருவரும் ஒத்துக்கொண்டுள்ளார்கள். ஆனால் இருவரும் வெவ்வேறு காரணங்களை கூறி இருக்கிறார்கள். ஏன் சந்தித்தார்கள் என்பதை அவர்கள் தான் தெளிவுப்படுத்த வேண்டும்.


    அவர்களால் ஒன்றாக பணியாற்றவும் முடியவில்லை. எதையும் எதிர் கொள்ள தைரியம் வேண்டும். எங்காவது, ஏதாவது உதவி கிடைக்குமா? என்று ஒவ்வொருவரின் உதவியை நாடிக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நுழைய பார்க்கிறது பா.ஜனதா. நேரடியாக வர முடியா விட்டாலும், பின்வாசல் வழியாக புகுந்துவிட ஆசைப்படுகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைந்த ஓட்டு வாங்கியதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Khushboo #ElectionCommission

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதி தள்ளிவைப்பு அறிவிப்பு மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு என்று அமைச்சர் உதயகுமார் கூறினார். #ElectionCommission #MinsiterUdhayaKumar

    மதுரை:

    திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதய குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

     


    எனவே மழை நேரத்தில் அரசு எந்திரங்களை தேர்தல் பணிக்கு பயன்படுத்த முடியாது. அதை கருத்தில் கொண்டுதான் மழை நேரத்தில் தேர்தல் வேண் டாம் என்று தலைமை தேர்தல் கமி‌ஷனுக்கு கருத்து தெரிவிக்கப்பட்டது.

    எனவே மக்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் தள்ளிவைப்புக்கு பலர் பல காரணங்களை திரித்து கூறுவார்கள். அதையெல்லாம் கருத்தில் கொண்டால் மக்கள் நலன் காக்க முடியாமல போய்விடும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ElectionCommission #MinsiterUdhayaKumar

    அமைச்சர் விஜயபாஸ்கர், உதயகுமார் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தைரியம் இருக்கிறதா? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். #TTVDhinakaran #Vijayabaskar #Udayakumar
    நாகப்பட்டினம்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வேளாங்கண்ணியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது அம்மாவை பதவியிலிருந்து இறக்குவதற்கு நான் சதி செய்தேன் என்று அமைச்சர் தங்கமணி பேசுகிறார். அவர் பதட்டமாக இருப்பதால்தான் என்னைப் பற்றி தவறாக பேசிக் கொண்டிருக்கிறார். கருணாநிதியுடன் சேர்ந்து வழக்கில் அம்மாவை சிக்க வைத்துவிட்டேன் என்று சொல்கிறார்.

    கருணாநிதி இறந்த பிறகு ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட போதுதான் அவரை நேரில் சென்று பார்த்தேனே தவிர, அதற்கு முன்னர் நான் அவரை எங்கும் சந்தித்தது இல்லை.

    அமைச்சர் வேலுமணி, தினகரன் புறவழியாக வந்தவர் என்கிறார். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். ஆக உள்ள விஜயபாஸ்கர் போன்றவர்களெல்லாம் என்ன வேண்டுமென்றாலும் பேசட்டும், மதுரையில் உள்ள அரிஸ்டாட்டில். அதாவது அக்கா பையன் உதயகுமார் என்று ஒருவர் இருக்கிறார் அவர் தினகரன் யார் என்று கேட்கிறார்.

    தி.மு.க.வையும், காங்கிரசையும் கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்தில் என்னை பற்றி வாய்க்கு வந்தபடி ஒருமையில் பேசுகிறார்கள்.


    திருப்பரங்குன்றத்தில் நான் நிற்க வேண்டாம். எங்கள் கட்சி சார்பில் தொண்டர்கள் நிற்பார்கள்.

    அமைச்சர்கள் விஜயபாஸ்கரும், உதயகுமாரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் எங்கள் வேட்பாளர்களை எதிர்த்து வெற்றி பெற திராணி உண்டா? துரோகிகள் டெபாசிட் இழப்பது உறுதி.

    சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைப்பிதழில் குறிப்பிட வேண்டும் என்பதற்காக என்னுடைய பெயரையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

    இவர்கள் நடத்தும் விழாவிற்கு நான் போக வேண்டிய அவசியமில்லை. சொல்லப் போனால் விழா நடைபெறக்கூடிய அன்று நான் சென்னையிலே இல்லை. அழைப்பிதழில் பெயரை குறிப்பிடாமல் இருந்தால் நல்லா இருக்காது என்பதற்காக போட்டிருக்கலாம். அதனை வைத்து ஏதாவது அரசியல் செய்யலாம் என்பதற்காக கூட போட்டு இருக்கலாம்.

    ஆட்சி செய்த கட்சி, ஆட்சி செய்து கொண்டிருந்த கட்சிகள் மீதெல்லாம் மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு ஒன்று பேசுகிறார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு அதே நாக்கு வேறு மாதிரி பேசுகிறது. மக்கள் நலனை மறந்துவிட்டு ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்று செயல்பட்ட காரணத்தினால்தான் மக்கள் நலனை பேணக்கூடிய கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்தான் என்று தீர்மானித்துள்ளனர்.

    இடைத்தேர்தல் வைத்து விடாதீர்கள் என்று ஆளுங்கட்சியினர் டெல்லியில் கேட்பதாக நான் கேள்விப்பட்டேன். இடைத்தேர்தல் கண்டிப்பாக வர வேண்டும். ஏனென்றால் தமிழகத்தில் மக்கள் மத்தியில் யாருக்கு உண்மையான செல்வாக்கு இருக்கிறது என்பது அப்போது அனைவருக்கும் தெரிந்துவிடும். அதற்கு உதாரணமாக திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்கள் அமையும்.

    கூட்டணி வரவேண்டிய நேரத்தில் கூட்டணி அமைப்போம். கூட்டணி தொடர்பாக பா.ம.க.விடம் இதுவரை நான் பேசவில்லை. யாரோ தகவலை பரப்புகிறார்கள். தி.மு.க. எங்களது பிரதான எதிரிக்கட்சி. அதனால் தி.மு.க.வுடனும், பா.ஜ.க.வுடனும் நாங்கள் கூட்டணிக்கு போக முடியாது. மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம். மற்ற கட்சிகளில் உள்ளவர்கள் கூட்டணி வைக்க வேண்டும் என்ற உணர்வுடன் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும்.

    வடிவேல் படத்தில் நடிக்காததால் அவர் வேலையை திண்டுக்கல் சீனிவாசன் செய்து கொண்டுள்ளதால் தான் காமெடியாக பேசி வருகிறார். அம்மாவையே கொள்ளையடித்தவர் என்று பேசியவர் கசாப்பு கடைக்காரரான அவரை பற்றியெல்லாம் பேசாதீர்கள்.

    இவ்வாறு தினகரன் கூறினார். #TTVDhinakaran #Vijayabaskar #Udayakumar
    அதிர்ஷ்டத்தில் கிடைத்த பதவியை எவ்வாறு கையாளுவது எனத் தெரியாமல் கருணாஸ் நிலை தடுமாறியிருப்பதாக அமைச்சர் உதயகுமார் விமர்சனம் செய்தார். #Karunas #RBUdhayaKumar
    மதுரை:

    முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ், சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசியபோது, கூவத்தூரில் நான் இல்லாமலா இந்த அரசு உருவானது? என்று கூறிய அவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் இழுத்தார்.

    ‘முதல்வரே நான் அடித்து விடுவேன் என பயப்படுகிறார் போலும். இந்த கருணாஸ் இல்லாமல் எப்படி அரசாங்கம் ஏற்பட்டது? கூவத்தூர் ரிசார்ட்டை காட்டினது நான்தான். என்றார். அத்துடன் காவல்துறை உயர் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசினார். அவரது பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதுடன், அ.தி.மு.க.வில் சலசலப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.


    கருணாஸ் பேசியது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, கருணாஸ் பேச்சு குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

    இதற்கிடையே மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், “கருணாஸ் அதிர்ஷ்டத்தில் கிடைத்த பதவியை எவ்வாறு கையாளுவது எனத் தெரியாமல் நிலை தடுமாறியுள்ளார்” என தெரிவித்தார். அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. அரசைப் பற்றி விமர்சிக்க தி.மு.க.விற்கு எந்த தகுதியும் இல்லை என்றும் அமைச்சர் உதயகுமார் கூறினார். #RBUdhayaKumar #Karunas
    ×