என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Liquour Sold"

    • அரசு இயந்திரத்தின் மொத்த கவனத்தையும் சாராய விற்பனையில் திருப்பிய திமுக அரசு என்றார் நயினார் நாகேந்திரன்.
    • சாராய விற்பனையில் கல்லா கட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பது வெட்கக்கேடானது.

    தீபாவளியையொட்டி தமிழகத்தில் சுமார் ரூ.789 கோடிக்கும் அதிகமாக மது விற்பனை நடந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள், திமுக அரசின் கோர முகத்தை தோலுரித்துக் காட்டுகின்றன என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளிப் பண்டிகையையொட்டி தமிழகத்தில் சுமார் 789 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனை நடந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள், இந்த டாஸ்மாக் மாடல் அரசின் கோர முகத்தை நமக்குத் தோலுரித்துக் காட்டுகின்றன.

    சாதாரண நாட்களிலேயே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் தமிழகத்தில், பண்டிகை நேரத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடுமோ, மக்களின் மகிழ்ச்சியும் நிம்மதியும் குலைந்துவிடுமோ என நாம் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கையில், சம்பந்தப்பட்ட திமுக அரசும் அதை இயக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பது வெட்கக்கேடானது.

    அதுவும் வடகிழக்குப் பருவமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கடந்த நான்காண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மது விற்பனை உச்சம் பெற்றுள்ளது என்றால், அரசு இயந்திரத்தின் மொத்த வளங்களையும் கவனத்தையும் சாராய விற்பனையில் தான் திமுக செலவழித்துள்ளது என்பது தானே அர்த்தம்?

    மழை வெள்ளத்தால் ஆங்காங்கே சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, விழுப்புரம்-கடலூர் மாவட்டங்களில் வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது, தேனியில் வெள்ளம் பாதித்த பகுதிகள் மீண்டபாடில்லை, அத்தியாவசியப் பொருட்களுக்கு சில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, 90% மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துவிட்டதாகக் கூறிய சென்னை மாநகரம் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது, முறையான சேமிப்புக் கிடங்குகள் இல்லாததால் விளைவித்த பயிர்கள் மழையில் நனைந்து முளைப்பு கட்டிப் போயுள்ளது, டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கிருந்த பயிர்களும் சேதமாகியுள்ளது. ஆனால், டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எவ்வித சேதமுமில்லாமல், மதுவை சிறிதும் தொய்வின்றி விற்பனை செய்துகொண்டிருக்கிறது திமுக அரசு. இதுதான் நாடு போற்றும் நல்லாட்சிக்கான இலக்கணமா?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்றது தொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. மதுபானங்கள், பீர் வகைகள் அதிகளவில் விற்பனை ஆனது.

    அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். கீரிப்பாறை சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையிலான போலீசார் தடிக்காரன்கோணம் அண்ணா நகர் பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்த முருகன் (வயது 48) என்பவரை கைது செய்தனர்.

    அவரிடமிருந்து 13 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஈத்தாமொழி சப்-இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், அத்திக்கடை பகுதியில் மதுவிற்பனை செய்த தர்மலிங்கம் (45) என்பவரை கைது செய்தார். கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் கோட்டார் வயல் தெரு பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு மது விற்ற யேசுதாஸ் (70) என்பவரை கைது செய்தார். இவரிடமிருந்து 27 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ராஜாக்கமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் லூயிஸ் லாரன்ஸ் தலைமையிலான போலீசார் தம்மத்துகோணம் குருகுலம் சாலையில் ரோந்து சென்றபோது அங்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த ரஞ்சித் ரத்தினத்தை கைது செய்தனர். இவரிடமிருந்து 8 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    ×