search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Khawaja"

    • மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் சேர்த்தது.
    • கவாஜா 41 ரன்னிலும், லபுசேன் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை பெர்த் நகரில் தொடங்கியது.

    பாகிஸ்தான் அணியில் அமீர் ஜமால், குர்ரம் ஷாஜாத் ஆகியோர் அறிமுகமானார்கள். டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    அதன்படி தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா களம் இறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடினர். தொடக்க ஜோடி, பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தது.

    குறிப்பாக டேவிட் வார்னர் பவுண்டரிகளை விளாசினார். இதனால் ஆஸ்திரேலியாவின் ரன் வேகம் அதிகரித்தது. வார்னர் 41 பந்தில் அரை சதம் அடித்தார். அவருக்கு உறுதுணையாக கவாஜா நிதானமாக விளையாடினார். இதனால் ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றது.

    முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 25 ஓவரில் 117 ரன்கள் எடுத்திருந்தது. வார்னர் 72 ரன்களுடனும், காவாஜா 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. கவாஜா 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லபுசேன் 16 ரன்னில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு வார்னர் உடன் சுமித் ஜோடி சேர்ந்தார்.

    ஒரு பக்கம் இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்த போதிலும் மறுமுனையில் டேவிட் வார்னர் 125 பந்தில் 14 பவுண்டரி, ஒரு சிக்சருடன் சதம் விளாசினார். இவரது சதத்தால் ஆஸ்திரேலிய தேனீர் இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் சேர்த்தது.

    தற்போது ஆஸ்திரேலியா 54 ஓவரில் 230 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

    • ஐ.சி.சி.யின் முடிவை நான் மதிக்கிறேன். ஆனால் அனுமதியை பெற தொடர்ந்து போராடுவேன்.
    • நான் எந்த தரப்பின் பக்கமும் நிற்கவில்லை. நான் ஒரு முதிர்ச்சியடைந்த மனிதன், நான் விரும்பும் எதையும் என்னால் செய்ய முடியும்.

    பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா, அணிந்திருந்த 'ஷூ'வில் சுதந்திரம் அனைவருக்குமானது. எல்லா உயிர்களும் சமமானது என்ற வாசகம் இடம் பெற்று இருந்தது.

    இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக அவர் அந்த வாசகத்தை வைத்துள்ளார். ஐ.சி.சி. விதிமுறைப்படி எந்தவொரு அரசியல் குறித்தான பதிவையும் வீரர்கள் அணிந்திருக்க கூடாது.

    இதையடுத்து அந்த வாசகம் இடம் பெற்ற ஷூவை கவாஜா, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அணியக்கூடாது என்று ஐ.சி.சி. தெரிவித்தது.

    இதுகுறித்து "கவாஜா கூறும்போது, ஐ.சி.சி.யின் முடிவை நான் மதிக்கிறேன். ஆனால் அனுமதியை பெற தொடர்ந்து போராடுவேன்" என்றார்.

    மேலும் அவர் கூறும்போது, "அனைத்து உயிர்களும் சரிசமம் என நான் கூறியதில் எந்தத் தவறும் இல்லை; அரசியலும் இல்லை. நான் எந்த தரப்பின் பக்கமும் நிற்கவில்லை. நான் ஒரு முதிர்ச்சியடைந்த மனிதன், நான் விரும்பும் எதையும் என்னால் செய்ய முடியும், ஆனால் ஐசிசி எனக்கு அபராதம் விதித்துக் கொண்டே இருக்கும்.

    சில சமயங்களில் விளையாட்டிலிருந்து விலக்கி வைக்கும். நான் சொன்னதில் நிற்கிறேன். நான் என்றென்றும் நிற்பேன். முடிந்தவரை செய்ய முயற்சிப்பேன். ஏற்கனவே ஐசிசி அனுமதித்த முன்னுதாரணங்கள் உள்ளன என்று நினைக்கிறேன். இந்த நடவடிக்கையை நியாயமற்றது" என்றார்.

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உஸ்மான் கவாஜாதான் அதிக ரன்கள் குவிப்பார் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகிய தலைசிறந்த வீரர்கள் இல்லாத ஆஸ்திரேலியா அணியை இந்தியா எளிதில் வீழ்த்தி தொடரை கைப்பற்றும் என எதிபார்க்கப்படுகிறது.

    ஆனால் இந்த தொடரில் ஆஸ்திரேலியா வெற்றிபெறும், உஸ்மான் கவாஜா அதிக ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை தட்டிச் செல்வார் என்று முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘கவாஜா பேட்டிங்கில் தலைசிறந்து விளங்குகிறார். ஆஸ்திரேலியா மண்ணில் அவரது பேட்டிங் சாதனை அபாரமானது. இந்திய பந்து வீச்சாளர்கள் அச்சுறுத்தலாக இருக்க வாய்ப்புள்ளது. இருந்தபோதிலும் ஆஸ்திரேலியா மண்ணில், அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அவர் இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை தட்டிச் செல்வார்.



    விராட் கோலி கடந்த முறை ஆஸ்திரேலியா தொடரில் 692 ரன்கள் குவித்தார். இந்த முறை கவாஜா விராட் கோலியை முந்துவார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி எங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் ரன்கள் குவித்தார். இதனால் இந்த தொடரிலும் ரன்கள் குவிப்பார். கடந்த முறை ஆஸ்திரேலியா தொடர் அவருக்கு சிறப்பானதாகவே அமைந்தது.

    இரண்டு அணிகளின் பந்து வீச்சும் சிறப்பாக உள்ளது. ஆனால், ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்வதை விட, ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் இந்திய பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்வார்கள்’’ என்றார்.
    ×