search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பாலஸ்தீனத்திற்கு ஆதரவு வாசகம் எழுதிய ஷூவை அணிய கவாஜாவுக்கு தடை
    X

    பாலஸ்தீனத்திற்கு ஆதரவு வாசகம் எழுதிய ஷூவை அணிய கவாஜாவுக்கு தடை

    • ஐ.சி.சி.யின் முடிவை நான் மதிக்கிறேன். ஆனால் அனுமதியை பெற தொடர்ந்து போராடுவேன்.
    • நான் எந்த தரப்பின் பக்கமும் நிற்கவில்லை. நான் ஒரு முதிர்ச்சியடைந்த மனிதன், நான் விரும்பும் எதையும் என்னால் செய்ய முடியும்.

    பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா, அணிந்திருந்த 'ஷூ'வில் சுதந்திரம் அனைவருக்குமானது. எல்லா உயிர்களும் சமமானது என்ற வாசகம் இடம் பெற்று இருந்தது.

    இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக அவர் அந்த வாசகத்தை வைத்துள்ளார். ஐ.சி.சி. விதிமுறைப்படி எந்தவொரு அரசியல் குறித்தான பதிவையும் வீரர்கள் அணிந்திருக்க கூடாது.

    இதையடுத்து அந்த வாசகம் இடம் பெற்ற ஷூவை கவாஜா, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அணியக்கூடாது என்று ஐ.சி.சி. தெரிவித்தது.

    இதுகுறித்து "கவாஜா கூறும்போது, ஐ.சி.சி.யின் முடிவை நான் மதிக்கிறேன். ஆனால் அனுமதியை பெற தொடர்ந்து போராடுவேன்" என்றார்.

    மேலும் அவர் கூறும்போது, "அனைத்து உயிர்களும் சரிசமம் என நான் கூறியதில் எந்தத் தவறும் இல்லை; அரசியலும் இல்லை. நான் எந்த தரப்பின் பக்கமும் நிற்கவில்லை. நான் ஒரு முதிர்ச்சியடைந்த மனிதன், நான் விரும்பும் எதையும் என்னால் செய்ய முடியும், ஆனால் ஐசிசி எனக்கு அபராதம் விதித்துக் கொண்டே இருக்கும்.

    சில சமயங்களில் விளையாட்டிலிருந்து விலக்கி வைக்கும். நான் சொன்னதில் நிற்கிறேன். நான் என்றென்றும் நிற்பேன். முடிந்தவரை செய்ய முயற்சிப்பேன். ஏற்கனவே ஐசிசி அனுமதித்த முன்னுதாரணங்கள் உள்ளன என்று நினைக்கிறேன். இந்த நடவடிக்கையை நியாயமற்றது" என்றார்.

    Next Story
    ×