search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ponting"

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உஸ்மான் கவாஜாதான் அதிக ரன்கள் குவிப்பார் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகிய தலைசிறந்த வீரர்கள் இல்லாத ஆஸ்திரேலியா அணியை இந்தியா எளிதில் வீழ்த்தி தொடரை கைப்பற்றும் என எதிபார்க்கப்படுகிறது.

    ஆனால் இந்த தொடரில் ஆஸ்திரேலியா வெற்றிபெறும், உஸ்மான் கவாஜா அதிக ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை தட்டிச் செல்வார் என்று முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘கவாஜா பேட்டிங்கில் தலைசிறந்து விளங்குகிறார். ஆஸ்திரேலியா மண்ணில் அவரது பேட்டிங் சாதனை அபாரமானது. இந்திய பந்து வீச்சாளர்கள் அச்சுறுத்தலாக இருக்க வாய்ப்புள்ளது. இருந்தபோதிலும் ஆஸ்திரேலியா மண்ணில், அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அவர் இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை தட்டிச் செல்வார்.



    விராட் கோலி கடந்த முறை ஆஸ்திரேலியா தொடரில் 692 ரன்கள் குவித்தார். இந்த முறை கவாஜா விராட் கோலியை முந்துவார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி எங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் ரன்கள் குவித்தார். இதனால் இந்த தொடரிலும் ரன்கள் குவிப்பார். கடந்த முறை ஆஸ்திரேலியா தொடர் அவருக்கு சிறப்பானதாகவே அமைந்தது.

    இரண்டு அணிகளின் பந்து வீச்சும் சிறப்பாக உள்ளது. ஆனால், ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்வதை விட, ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் இந்திய பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்வார்கள்’’ என்றார்.
    சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஹால் ஆஃப் பேம் கவுரவ பட்டியலில் ராகுல் டிராவிட், ரிக்கி பாண்டிங், கிளைர் டெய்லர் இடம் பிடித்துள்ளார். #RahulDravid
    கிரிக்கெட்டில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுக்கள் மற்றும் சாதனைப் படைத்தவர்களை பெருமை சேர்க்கும் வகையில் ஐசிசி ஹால் ஆஃப் பேம் என்ற பட்டியலில் இணைத்து கவுரவித்து வருகிறது. இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட்டில் ஏற்கனவே சாதனைப் படைத்திருந்த சுனில் கவாஸ்கர், பிஷன் பெடி, கபில் தேவ், அனில் கும்ப்ளே ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.

    இந்நிலையில் இந்த வருடம் மூன்று பேரை இந்த கவுரவ பட்டியலில் ஐசிசி இணைத்துள்ளது. இதில் ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்புச்சுவர் என்று அழைக்கப்பட்ட ராகுல் டிராவிட் ஆவார். மற்ற இருவர்கள் ரிக்கி பாண்டிங், கிளைர் டெய்லர் ஆகியோர் ஆவார்கள்.



    ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் 48 சதங்களுடன் தலா 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்தவர் ஆவார்.

    164 டெஸ்ட் போட்டியில் விளையாடி 13288 ரன்கள் குவித்துள்ளார். இதில் 36 சதங்களும், 63 அரைசதங்களும் அடங்கும். ஒருநாள் போட்டியில் 12 சதம், 83 அரைசதங்களுடன் 10889 ரன்கள் அடித்துள்ளார்.
    ×