search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kargil Victory Day"

    • பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது
    • முன்னாள் ராணுவவீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை திருவூடல் தெருவில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த முன்னாள் ராணுவவீரர்கள் நலச்சங்கம் சார்பில் கார்கில் போர் 23-ம் ஆண்டு வெற்றி விழா நேற்று கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு மாவட்ட தலைவர் பி.கருணாநிதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட நீதிபதி (ஓய்வு) கிருபாநிதி, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் பிரிக்.ரவி முனுசாமி, கர்னல் சி.டி.அரசு, ருசிகேசவன், சுரேஷ் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    விழாவையட்டி கார்கில் போரின் வெற்றிவிழாவை கொண்டாடும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் கு.கண்ணகி, அப்துல்கலாம் நல அறக்கட்டளை ஆர்.நடராஜன், சங்க மாவட்ட துணைத் தலைவர் எல்.அந்துராஜ், சிஎஸ்டி மேலாளர் சுப்பிரமணி உள்பட திருவண்ணாமலை, கண்ணமங்கலம், போளூர், செய்யாறு, கீழ்பென்னாத்தூர், செங்கம், வேட்டவலம், கலசபாக்கம், ஆரணி, வந்தவாசி, கேளூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் ராணுவவீரர்கள், அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். விழாவில் கார்கில் போரில் ஊனமுற்ற, வீரமரணமடைந்த முன்னாள் ராணுவவீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்தவர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    முடிவில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.சகாதேவன் நன்றி கூறினார்.

    • பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரி தேசிய மாணவா் படை சாா்பில் காா்கில் போா் வெற்றி தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.
    • கல்லூரி மாணவா்கள் நடத்திய நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.

    குன்னூர்

    குன்னூா் வெலிங்டன் ராணுவ மைய வளாகத்தில் பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரி தேசிய மாணவா் படை சாா்பில் காா்கில் போா் வெற்றி தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.பாகிஸ்தானுடன் 1999-ம் ஆண்டு நடந்த காா்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.


    இந்நிலையில் காா்கில் போரில் உயிா்நீத்த ராணுவ வீரா்களுக்கும், தற்போது உயிரோடு உள்ள ராணுவ வீரா்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் வெலிங்டன் ராணுவ மைய நுழைவாயில் முன்பு குன்னூா் பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரி சாா்பில் தேசிய மாணவா் படை கல்லூரி மாணவா்கள் நடத்திய நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.


    இதில், காா்கில் போரின்போது நமது நாட்டு வீரா்கள் போரிட்டதை தத்ரூபமாக மாணவா்கள் நடித்துக் காட்டினா். இதனை ராணுவ அதிகாரிகளும் பொதுமக்களும் கண்டு ரசித்தனா். இந்நிகழ்ச்சியில் பிராவிடன்ஸ் கல்லூரியின் தேசிய மாணவா் படை அதிகாரி சிந்தியா ஜாா்ஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • 1999 ஆம் ஆண்டில் கார்கில் போர் 60 நாட்களுக்கு மேலாக நடந்தது.
    • போர் முடிவடைந்த போதிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் உயிர் நீத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக இன்று கல்லூரி வளாகத்தில் கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் பேசுகையில் , 1999 ஆம் ஆண்டில் கார்கில் போர் 60 நாட்களுக்கு மேலாக நடந்தது. ஜூலை 26 ம் நாளன்று இப் போர் முடிவடைந்த போதிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் உயிர் நீத்தனர்.

    உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அவர்கள் குடும்பம் நன்றாக வாழ்ந்திட கூட்டுப் பிரார்த்தனை செய்யப்பட்டது என்றார்.

    நிகழ்ச்சியில் மாணவ செயலர்கள் அருள்குமார் , சுந்தரம் , பூபதிராஜா தலைமையில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • சாணார்பட்டி அருகே கவராயப்பட்டி கிராமத்தில் தமிழக இளைஞர் பாராளுமன்ற சார்பில் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப் பட்டது.
    • மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    சாணார்பட்டி அருகே கவராயப்பட்டி கிராமத்தில் தமிழக இளைஞர் பாராளுமன்ற சார்பில் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது.

    இதற்கு சமூக ஆர்வலர் பால் தாமஸ் தலைமை தாங்கினார்.நேரு யுவகேந்திரா அமைப்பின் மாவட்ட அலுவலர் சரண், முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க மாவட்ட தலைவர் விசுவாசம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.இதில் மாணவ, மாணவிகள் அனைவரும் தேசியக் கொடியை கைகளில் ஏந்தியவாறு வந்தே மாதரம் என கோசமிட்டு முக்கிய வீதிகளில் வலம் வந்தனர்.

    நிகழ்ச்சியில் கார்கில் போரின்போது பணியாற்றிய சுபேதார் தங்கவேல், மாறவர்மன் ஆகியோருக்கு சிறப்பு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.இதில் இளைஞர் பாராளுமன்ற நிர்வாகிகள் ஜான்போஸ்கோ, கஸ்பார், மோகனா, ரேவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×