search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kanyakumari rain"

    • கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 5,77,803 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வெள்ள நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
    • விடுபட்ட குடும்ப அட்டைத்தாரர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள், நியாய விலைக்கடைகளுக்கு சென்று தங்களது நிவாரண உதவித்தொகையினை பெற்று கொள்ளலாம்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 17.12.2023 மற்றும் 18.12.2023 ஆகிய இரண்டு நாட்கள் பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் முதலமைச்சர் வெள்ள நிவாராணத் தொகையாக தலா ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து, உதவித்தொகை வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 5,77,803 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வெள்ள நிவாரண உதவித்தொகை கடந்த 29.12.2023 அன்று முதல் அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நியாயவிலைக்கடைகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் இதுநாள் வரை நிவாரணத்தொகை வாங்காத விடுப்பட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நாளை (03.01.2024) வழங்கப்படும். எனவே விடுபட்ட குடும்ப அட்டைத்தாரர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நியாயவிலைக்கடைகளுக்கு சென்று தங்களது நிவாரண உதவித்தொகையினை பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.74 அடியாக உள்ளது.
    • அணைக்கு 616 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் பரவலாக வெயிலடித்து வந்த நிலையில் மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. அங்கு 60.4 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    பேச்சிபாறை அணை பகுதியில் சாரல் மழை பெய்தது. மலையோர பகுதிகளிலும் அணை பகுதிகளிலும் மழை பெய்ததையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.74 அடியாக உள்ளது. அணைக்கு 616 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 439 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.29 அடியாக உள்ளது. அணைக்கு 478 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 425 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-1 நீர்மட்டம் 11.45 அடியாக உள்ளது. அணைக்கு 101 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    3 அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது. சிற்றாறு -2 அணையின் நீர்மட்டம் 11.84 அடியாகவும் மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 38.5 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.90 அடியாக உள்ளது. திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். அந்த பகுதியில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் நேற்று மாலை முதலே மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. இரவு விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது.

    நாகர்கோவில்:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

    குமரி மாவட்டத்தில் நேற்று மாலை முதலே மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. இரவு விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது.

    நாகர்கோவிலில் நேற்று இரவு முதலே விட்டு, விட்டு மழை பெய்தது. இன்று காலையிலும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பள்ளி சென்ற மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    கோழிப்போர்விளை பகுதியில் சுமார் 2 மணி நேரமாக கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. அங்கு அதிகபட்சமாக 70 மி.மீ. மழை பதிவானது.

    மயிலாடி, கொட்டாரம், குளச்சல், ஆனைக்கிடங்கு, ஆரல்வாய்மொழி, சுருளோடு, பூதப்பாண்டி, முள்ளங்கினாவிளை, புத்தன் அணை உள்பட அதன் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு, குளு சீசன் நிலவுகிறது.

    திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் குடும்பத்தோடு அங்கு குவிந்து இருந்தனர்.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் கொட்டித்தீர்த்த கனமழையினால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் அணைகளின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

    பெருஞ்சாணி அணை மீண்டும் நிரம்பி வருவதை அடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.95 அடியாக இருந்தது. அணைக்கு 431 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக் கிறது. அணையில் இருந்து 245 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 27.40 அடியாக இருந்தது. அணைக்கு 696 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 245 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள 2040 குளங்களில் ஆயிரம் குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது.
    நாகர்கோவில்:

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    சிற்றாறு-1 அணைப்பகுதியில் நேற்று இரவு விடிய, விடிய மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 35.6 மி.மீ. மழை பதிவானது. நாகர்கோவில், பூதப்பாண்டி, சுருளோடு, கன்னிமார், கொட்டாரம், குலசேகரம், களியக்காவிளை, மார்த்தாண்டம் பகுதிகளில் சூறைக் காற்றுடன் மழை பெய்தது.

    நாகர்கோவிலில் இன்று காலை சூறை காற்று வீசியது. இதில் புத்தேரி பாலம் பகுதியில் ராட்சத மரம் ஒன்று முறிந்து ரோட்டில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோல் வடசேரி குன்னுவிளை பகுதியிலும் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்தின் பின்புறம் நின்ற பழமைவாய்ந்த மரம் ஒன்றும் சூறைக்காற்றிற்கு முறிந்து விழுந்தது. தோவாளை பகுதியில் வீசிய சூறைக்காற்றிற்கு 10-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தது.

    தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நின்ற மரம் முறிந்து விழுந்ததில் அந்த பகுதியில் நின்ற மின்கம்பமும் சேதம் அடைந்தது. மின் ஒயர்கள் அறுந்து வழுந்தன. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் தடைபட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    அகஸ்தீஸ்வரம், முகிலன் குடியிருப்பு, ராஜாக்க மங்கலம், குளச்சல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சூறைக்காற்றிக்கு மரங்கள் முறிந்து விழுந்தது.

    பூதப்பாண்டி, தடிக்காரன் கோணம், அருமநல்லூர், தேரூர், அஞ்சுகிராமம், பொற்றையடி பகுதிகளில் நூற்றுக்கணக்கான வாழை மரங்களும் முறிந்து விழுந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    தோவாளை அரசுப்பள்ளி வளாகத்தில் நின்ற மரம் சூறைக்காற்றிற்கு முறிந்து கிடக்கும் காட்சி.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் பெய்து வரும் மழையினால் அணைகளின் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று ஒரேநாளில் 1¾ அடி உயர்ந்து உள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர் மட்டம் இன்று காலை 14 அடியாக இருந்தது. அணைக்கு 1537 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 53 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை இன்று காலை 75.70 அடியாக இருந்தது. அணைக்கு 1359 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 824 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணிநேரமும் அணையை கண்காணித்து வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து 977 கனஅடி தண்ணீர் திறந்துவிடுவதால் சானல்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டம் முழுவதும் உள்ள 2040 குளங்களில் ஆயிரம் குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது. குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் சாகுபடி பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-12.6, பெருஞ்சாணி-11.8, சிற்றாறு 1-35.6, சிற்றாறு 2-30, நாகர்கோவில்-3, பூதப்பாண்டி-3.2, சுருளோடு -10, கன்னிமார்-4.6, பால மோர்-29.2, கொட்டாரம்-5.4, அடையாமடை-5, கோழிப் போர்விளை-3, திற்பரப்பு-11.8, புத்தன் அணை-11.2.
    ×