search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kamuthi"

    • மாசி மாதம் என்றாலே குலதெய்வ வழிபாடு என்பது பிரபலம்.
    • பொங்கல் வைத்து சுமார் 1,001 ஆடுகள் பலியிடப்பட்டன.

    பசும்பொன்:

    மாசி மாதம் என்றாலே குலதெய்வ வழிபாடு என்பது பிரபலம். அதனை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் 19 கிராமங்களுக்கு சொந்தமான பகவதி பரஞ்சோதி, அக்னி வீரபத்திரன், நிறை குளத்து அய்யனார் கோவில்கள் களை கட்டின.

    இந்த கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாசிகளரி திருவிழாவை முன்னிட்டு, ஆடுகள் பலியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 19 கிராம மக்கள் சார்பில், பொங்கல் வைத்து சுமார் 1,001 ஆடுகள் பலியிடப்பட்டன. இன்று அதிகாலை 2 மணி முதல் 8 மணி வரை கிடா வெட்டு நடைபெற்றது.

    ஒரே வெட்டில் தலை வேறு, உடல் வேறாக ஆடுகள் வெட்டப்பட்டன. பெரும்பாலும் ஒவ்வொரு குடும்பத்தினரும் இரட்டை கிடா வெட்டுவது வழக்கம். பலியிடப்பட்ட ஆடுகள் மைதானத்தில் குவித்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைக்கு பின் அவரவர் சமைக்க கொண்டு சென்றனர்.

    இந்த திருவிழாவில், கமுதியை சுற்றிலும் உள்ள ஏராளமான கிராம மக்கள் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டது. விழாவை முன்னிட்டு, கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    கமுதி அருகே டாஸ்மாக் கடையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    கமுதி:

    கமுதி அருகேயுள்ள அபிராமத்தில் வீரசோழம் ரோட்டில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இங்கு சூப்பர்வைசராக மாரிமுத்து பணியாற்றி வருகிறார்.

    மேலும் 2 விற்பனையாளர்களும் உள்ளனர். வழக்கம் போல் நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டுச் சென்றனர்.

    நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்கு வந்த மர்ம மனிதர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் மற்றும் பணத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.

    இன்று காலை கடையை திறக்க வந்த ஊழியர்கள், பூட்டு உடைக்கப்பட்டு மதுபாட்டில்கள் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அபிராமம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முக சுந்தரம் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜான்சி ராணி, சப்-இன்ஸ்பெக்டர் மருதுபாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மது பாட்டில்களை திருடிச் சென்றவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    கமுதியில் நேற்று கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

    கமுதி:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. கமுதி, அபிராமம், முதுகுளத்தூர் பகுதிகளில் இடி, மின்னலுடன் சுமார் ½ மணி நேரம் மழை பெய்தது.

    இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வெப்பமான சூழல் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

    இதற்கிடையில் மின்னல் தாக்கியதில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார். அவரது பெயர் கலையரசு (வயது 32).

    கீழக்கொடுமலூரை சேர்ந்த வேங்கைமுத்து என்பவரின் மகனான கலையரசு, கருவேல மரங்கள் வெட்டியபோது மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகிய அவரை சிகிச்சைக்காக அரசு ஆஸ் பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    அபிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது, சப்- இன்ஸ்பெக்டர் மருது பாண்டி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முதுகுளத்தூர் தாசில்தார் மீனாட்சி சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார். மின்னல் தாக்கி இறந்த கலையரசுவிற்கு புஷ்பலதா என்ற மனைவியும், 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

    ×