என் மலர்
நீங்கள் தேடியது "மின்னல் தாக்கி தொழிலாளி பலி"
கமுதி:
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. கமுதி, அபிராமம், முதுகுளத்தூர் பகுதிகளில் இடி, மின்னலுடன் சுமார் ½ மணி நேரம் மழை பெய்தது.
இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வெப்பமான சூழல் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.
இதற்கிடையில் மின்னல் தாக்கியதில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார். அவரது பெயர் கலையரசு (வயது 32).
கீழக்கொடுமலூரை சேர்ந்த வேங்கைமுத்து என்பவரின் மகனான கலையரசு, கருவேல மரங்கள் வெட்டியபோது மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகிய அவரை சிகிச்சைக்காக அரசு ஆஸ் பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
அபிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது, சப்- இன்ஸ்பெக்டர் மருது பாண்டி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதுகுளத்தூர் தாசில்தார் மீனாட்சி சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார். மின்னல் தாக்கி இறந்த கலையரசுவிற்கு புஷ்பலதா என்ற மனைவியும், 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.






