search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "iron products"

    • விழுப்புரம் -புதுவை 4 வழி சாலை பணி தற்போது நடைபெற்று வருகிறது.
    • இதில் வெளிமாநிலத்தவர் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் -புதுவை 4 வழி சாலை பணி தற்போது நடைபெற்று வருகிறது.இதில் வெளிமாநிலத்தவர் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக திருவண்டார்கோவில் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் இரும்பு பொருட்கள் அடிக்கடி திருடு போய் வந்தது. இதற்கிடையே மதகடிப்பட்டு அருகே உள்ள ஆண்டியார் பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியில் சேர்ந்த மதன்ராஜ் என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

    இவர் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் திருவண்டார் கோவில் பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வரும் நடராஜனிடம் அடிக்கடி 3 வெளி மாநிலத்தவர் இரும்பு பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    இந்நிலையில் நேற்றும் அவர்கள் இரும்பு பொருட்களை திருடி கடையில் விற்பனை செய்தனர். இதுகுறித்து மேற்பார்வையாளர் மதன்ராஜ் திருபுவனை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமார் 400 கிலோ இரும்பு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இரும்பு பொருட்களை திருடி விற்ற வடமாநிலத்தை சேர்ந்த முகமது இஸ்மாயில், முஹம்மது இஜமதுல்லா, முகமது சகன்யராஜ் மற்றும் பழைய இரும்பு கடை வியாபாரி நடராஜன் ஆகிய 4 பேரையும் கைது செய்து புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருடப்பட்ட இரும்பு பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2லட்சம் ஆகும்.

    • இரும்பு பொருட்களை மர்மகும்பல் திருடி வேனில் கடத்துவதாக புதுச்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • முல்லைராஜ், சிவகேசவன் ஆகியோரை மடக்கி பிடித்துகைது செய்தனர்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஆயில் ஆலை உள்ளது. இந்த ஆலை வளாகத்தில் இரும்பு பொருட்கள் குவிக்கப்பட்டு உள்ளது. இந்த பொருட்களை பலர் திருடிய வண்ணம் உள்ளது. எனவே ஆலை நிர்வாக காவலாளிகள் கண்காணித்தபடி உள்ளது. எனினும் நேற்றுஆலை வளாகத்தில் உள்ள இரும்பு பொருட்களை மர்மகும்பல் திருடி வேனில் கடத்துவதாக புதுச்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினதா தலைமையிலான போலீசார் ஆலைக்கு விரைந்தனர்.

    அப்போது ஆண்டார் முள்ளிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த ராபர்ட் முல்லைராஜ் தலைைமயில் சிவகேசவன், சங்கர், கர்ணா, சுரேஷ், சிவபாலன், செல்வகுமார் ஆகியோர் ஒரு வேனில் 1,500 இரும்பு பொருட்களை வேனில் ஏற்றி கடத்த முயன்றனர். அப்போது போலீசாரை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றது. உஷரான போலீசார் ராபர்ட் முல்லைராஜ், சிவகேசவன் ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இரும்பு பொருட்களை கடத்த முயன்ற வேன் பறிமுதல் செய்யப்பட்டது. 

    • சிதம்பரம் அருகே ரூ.20 லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
    • மர்ம நபர்கள் இங்கு வந்து இரும்பு பொருட்களை திருடி செல்கின்றனர்.

    கடலூர்:

    சிதம்பரம் புதுச்சத்திரம் அருகே என்.ஓ.சி.எல். என்னை சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இந்த நிலையம் பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வருகிறது. இதனால் செயல்படாத அந்த நிலையத்தில் உள்ள இரும்பு பொருட்களை அந்த கிராமத்தைச் சேர்ந்த மற்றும் அதனை சுற்றியுள்ள மர்ம நபர்கள் இங்கு வந்து இரும்பு பொருட்களை திருடி செல்கின்றனர். இதனால் அந்த எண்ணெய் நிலையத்தின் உரிமையாளர் அங்குள்ள இரும்பு பொருட்களை எல்லாம் புதுவையில் உள்ள மற்றொரு தொழிற்சாலைக்கு அப்புறப்படுத்த முயன்றார். இதனால் 2 டாரஸ் லாரி மூலம் புதுச்சத்திரத்தில் இருந்து சுமார் 120 டன் இரும்பு பொருட்களை ஏற்க்றி கொண்டு புதுவையில் உள்ள தொழிற்சாலைக்கு கொண்டு சென்றனர்.

    அப்போது இந்த 2 லாரிகளும் கடலூர் வழியாக புதுவைக்கு செல்லாமல் வேப்பூர் வழியாக திருச்சி சாலையில் மாற்றி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 லாரிகளையும் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் டிரைவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்த தால் அவர்களை லாரியுடன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சின்னத்தம்பி, நாகப்பட்டினம் மாவட்டம் ஈசனூரை சேர்ந்த பவுல்ராஜ் மற்றும் ஆண்டாள் முரளி பகுதியை சேர்ந்த சுகதேவ் ஆகியோர் 2 லாரிகளில் ரூ.20 லட்சம் மதிப்பிலான இரும்பு பொருட்களை உரிய இடத்திற்கு கொண்டு செல்லாமல் வேறொரு இடத்துக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. உடனே 2 லாரிகளை பறிமுதல் செய்தனர்

    • சென்னிமலை அருகே கம்பெனியில் பூட்டை உடைத்து ஜெனரேட்டர், இரும்பு பொருட்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • திருட்டு போன பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்த ஈங்கூர் பகுதியில் சிப்காட் தொழில் பேட்டை உள்ளது. இங்கு தங்கவேல் என்பவர் கம்பெனி நடத்தி வருகிறார்.

    கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் இவர் கம்பெனியை நடத்த முடியாமல் மூடிவிட்டார். இந்நிலையில் அங்கு மின்வாரிய பணியாளர் ஒருவர் கணக்கு எடுப்பதற்காக சென்ற பொழுது மெயின் கேட் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அதன் உரிமையாளர் தங்கவேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த தங்கவேல் உள்ளே சென்று பார்த்த பொழுது ஜெனரேட்டர் மற்றும் சில இரும்பு பொருட்கள் திருட்டுப் போனது தெரியவந்தது.

    பின்னர் இது குறித்து சென்னிமலை போலீசில் தங்கவேல் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த கம்பெனியை லீசுக்கு நடத்திய திண்டல், செங்கோடம்பாளையம் சக்தி நகரை சேர்ந்த செல்வராஜ் (44) என்பவர் இரும்பு பொருட்களை வாங்கும் வியாபாரி தூத்துக்குடியை அடுத்த நசரேத் பகுதியை சேர்ந்த பட்டு ஜெபசிங் என்பவர் உடன் சேர்ந்து 2 பேரும் ஜெனரேட்டர் உள்பட இரும்பு பொருட்களை திருடி சென்றது விசாரணையில் தெரியவந்தது.

    திருட்டு போன பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து செல்வராஜ், பட்டு ஜெபசிங் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ×