search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "clamp investigation"

    • சிதம்பரம் அருகே ரூ.20 லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
    • மர்ம நபர்கள் இங்கு வந்து இரும்பு பொருட்களை திருடி செல்கின்றனர்.

    கடலூர்:

    சிதம்பரம் புதுச்சத்திரம் அருகே என்.ஓ.சி.எல். என்னை சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இந்த நிலையம் பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வருகிறது. இதனால் செயல்படாத அந்த நிலையத்தில் உள்ள இரும்பு பொருட்களை அந்த கிராமத்தைச் சேர்ந்த மற்றும் அதனை சுற்றியுள்ள மர்ம நபர்கள் இங்கு வந்து இரும்பு பொருட்களை திருடி செல்கின்றனர். இதனால் அந்த எண்ணெய் நிலையத்தின் உரிமையாளர் அங்குள்ள இரும்பு பொருட்களை எல்லாம் புதுவையில் உள்ள மற்றொரு தொழிற்சாலைக்கு அப்புறப்படுத்த முயன்றார். இதனால் 2 டாரஸ் லாரி மூலம் புதுச்சத்திரத்தில் இருந்து சுமார் 120 டன் இரும்பு பொருட்களை ஏற்க்றி கொண்டு புதுவையில் உள்ள தொழிற்சாலைக்கு கொண்டு சென்றனர்.

    அப்போது இந்த 2 லாரிகளும் கடலூர் வழியாக புதுவைக்கு செல்லாமல் வேப்பூர் வழியாக திருச்சி சாலையில் மாற்றி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 லாரிகளையும் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் டிரைவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்த தால் அவர்களை லாரியுடன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சின்னத்தம்பி, நாகப்பட்டினம் மாவட்டம் ஈசனூரை சேர்ந்த பவுல்ராஜ் மற்றும் ஆண்டாள் முரளி பகுதியை சேர்ந்த சுகதேவ் ஆகியோர் 2 லாரிகளில் ரூ.20 லட்சம் மதிப்பிலான இரும்பு பொருட்களை உரிய இடத்திற்கு கொண்டு செல்லாமல் வேறொரு இடத்துக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. உடனே 2 லாரிகளை பறிமுதல் செய்தனர்

    ×