search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரம் அருகே தனியார் ஆலையில் இரும்பு ெபாருட்களை திருடி வேனில் கடத்த முயன்ற கும்பல்
    X

    சிதம்பரம் அருகே தனியார் ஆலையில் இரும்பு ெபாருட்களை திருடி வேனில் கடத்த முயன்ற கும்பல்

    • இரும்பு பொருட்களை மர்மகும்பல் திருடி வேனில் கடத்துவதாக புதுச்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • முல்லைராஜ், சிவகேசவன் ஆகியோரை மடக்கி பிடித்துகைது செய்தனர்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஆயில் ஆலை உள்ளது. இந்த ஆலை வளாகத்தில் இரும்பு பொருட்கள் குவிக்கப்பட்டு உள்ளது. இந்த பொருட்களை பலர் திருடிய வண்ணம் உள்ளது. எனவே ஆலை நிர்வாக காவலாளிகள் கண்காணித்தபடி உள்ளது. எனினும் நேற்றுஆலை வளாகத்தில் உள்ள இரும்பு பொருட்களை மர்மகும்பல் திருடி வேனில் கடத்துவதாக புதுச்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினதா தலைமையிலான போலீசார் ஆலைக்கு விரைந்தனர்.

    அப்போது ஆண்டார் முள்ளிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த ராபர்ட் முல்லைராஜ் தலைைமயில் சிவகேசவன், சங்கர், கர்ணா, சுரேஷ், சிவபாலன், செல்வகுமார் ஆகியோர் ஒரு வேனில் 1,500 இரும்பு பொருட்களை வேனில் ஏற்றி கடத்த முயன்றனர். அப்போது போலீசாரை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றது. உஷரான போலீசார் ராபர்ட் முல்லைராஜ், சிவகேசவன் ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இரும்பு பொருட்களை கடத்த முயன்ற வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×