search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "illegal sale"

    • தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • 67 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு, 

    சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி, அம்மாபேட்டை, கோபி, கவுந்தப்பாடி, கடத்தூர், தாளவாடி, கடம்பூர், பெருந்துறை போலீசார், தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 67 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    • பள்ளி, கல்லூரிக்கு அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
    • நல்லூா் போலீசார் பா.ஜ.க.வினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

     திருப்பூர் :

    திருப்பூரை அடுத்த கோவில்வழி அருகே டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையானது பள்ளி, கல்லூரிக்கு அருகில் செயல்பட்டு வருவதாகவும், சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக கூறி பா.ஜ.க.வினர் சாலை மறியல் போராட்டத்துக்கு முயன்றனா்.

    இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த நல்லூா் போலீசார் பா.ஜ.க.வினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது பள்ளி குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காவலரை அமா்த்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதையடுத்து பா.ஜ.க.வினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

    ×