search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டவிரோத மது விற்பனையை கண்டித்து பா.ஜ.க.வினர் போராட்டம்
    X

    கோப்புபடம்.

    சட்டவிரோத மது விற்பனையை கண்டித்து பா.ஜ.க.வினர் போராட்டம்

    • பள்ளி, கல்லூரிக்கு அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
    • நல்லூா் போலீசார் பா.ஜ.க.வினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

    திருப்பூர் :

    திருப்பூரை அடுத்த கோவில்வழி அருகே டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையானது பள்ளி, கல்லூரிக்கு அருகில் செயல்பட்டு வருவதாகவும், சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக கூறி பா.ஜ.க.வினர் சாலை மறியல் போராட்டத்துக்கு முயன்றனா்.

    இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த நல்லூா் போலீசார் பா.ஜ.க.வினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது பள்ளி குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காவலரை அமா்த்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதையடுத்து பா.ஜ.க.வினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

    Next Story
    ×