என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hakini mudra"

    • மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவுகிறது.
    • உடலின் ஐந்து உறுப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை பராமரிக்கிறது.

    ஆரோக்கியமாக இருக்க, நல்ல மற்றும் போதுமான தூக்கம் அவசியம். ஆனால், இன்றைய கால கட்டத்தில் மன அழுத்தம், பரபரப்பான வாழ்க்கை தவிர, இரவு நேரங்களில் மொபைலில் மணிக்கணக்கில் நேரத்தை செலவிடுவதால் தூக்கமின்மை பிரச்சனை மக்களிடையே அதிகரித்து வருகிறது. நல்ல தூக்கம் இல்லாததால் உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகள் ஏற்படும்.

    நல்ல உறக்கத்திற்கு பல யோகா முத்திரைகள் உள்ளன. இது இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவுகிறது. தூக்கமின்மையில் இருந்து உங்களைப் பாதுகாக்கும் ஹக்கினி முத்ராவைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

    ஹாகினி முத்ரா என்பது ஹஸ்த முத்ரா. இது கைகளால் செய்யப்படுகிறது. இதன் மூலம், உடலின் ஐந்து கூறுகளான காற்று, நெருப்பு, நீர், பூமி மற்றும் ஆகாயம் ஆகியவை சமநிலையில் இருக்கும். ஐந்து விரல்கள் இந்த ஐந்து உறுப்புகளின் சின்னங்களாகக் கருதப்படுகின்றன.

    இதில், ஆள்காட்டி விரல் காற்றின் குறியீடாகவும், நடுவிரல் வானமாகவும், மோதிர விரல் பூமியாகவும், கட்டை விரலை நெருப்பாகவும், சுண்டு விரை தண்ணீரையும் குறிக்கும். இந்த ஆசனத்தை இரு கைகளாலும் செய்தால், அக்குபிரஷர் ஏற்படுகிறது. இது உடலின் ஐந்து உறுப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை பராமரிக்கிறது.

    ஹக்கினி முத்ராவின் செய்முறை

    முதலில் பத்மாசனத்தில் அமர வேண்டும். பிறகு கண்களை மூடி இரண்டு கண்களுக்கும் இடையில் கவனம் செலுத்த வேண்டும்.

    இரண்டு கைகளையும் தொப்புளுக்கு அருகில் கொண்டு வாருங்கள். இப்போது உங்கள் இரு கைகளின் விரல் நுனிகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும்.

    நான்கு விரல்களும் முன்னோக்கி இருக்க வேண்டும் மற்றும் கட்டைவிரல் மேல்நோக்கி இருக்க வேண்டும்.

    விரல் நுனியில் லேசான அழுத்தத்தைப் பயன்படுத்துங்கள். அடுத்து, ஆழமான மற்றும் நீண்ட மூச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.

    இந்த ஆசனத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை 10 நிமிடங்கள் செய்ய வேண்டும். இதை காலையில் சூரிய உதயத்திற்குப் பிறகும், இரவு தூங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பும் செய்ய வேண்டும்.

    ஹக்கினி முத்ராவின் நன்மைகள்

    * நல்ல ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.

    * ரத்த ஓட்டம் மேம்படுகிறது, இதன் காரணமாக ஆக்ஸிஜன் மூளையை அடைகிறது.

    * நினைவாற்றல், செறிவு மற்றும் கவனத்தை அதிகரிக்கிறது.

    * மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு போன்ற பிரச்சனைகள் குறையும்.

    * இந்த முத்ரா உடலின் தோஷங்களை (வட, பித்த மற்றும் கபா) சமநிலைப்படுத்துகிறது.

    * இந்த ஆசனத்தை தினமும் செய்து வந்தால் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் வராது.

    இந்த முத்திரை மூளையின் சக்தியை அதிகரிக்கிறது. மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது. மறந்துபோன விஷயத்தைத் திரும்பவும் ஞாபகப்படுத்திப் பார்க்கவும் பயன்படுத்தலாம்.
    மனித மூளையின் இடது பக்கம் கணக்கு, சீர்தூக்கிப் பார்த்தல், தர்க்கப்பூர்வமாகச் சிந்தித்தல், கற்றல் உள்ளிட்ட செயல்பாடுகளையும்,

    வலதுபக்க மூளையானது, உள்ளுணர்வு, கற்பனை, கலைநயம், இசை, காட்சிகள் வாயிலாகச் சிந்தித்தல், மனிதநேயம், அன்பு போன்ற உணர்வுப்பூர்வமான செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும். இந்த, இரண்டு பக்க மூளையும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட்டால் மட்டுமே, ஒரு காரியத்தை அறிவுப்பூர்வமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் செய்ய முடியும். இதற்கு, ஆக்கினை முத்திரை உதவுகிறது.

    செய்முறை :

    நாற்காலியிலோ விரிப்பிலோ அமர்ந்த நிலையில், வலது கை விரல்களின் நுனிகளை இடது கை விரல்களின் நுனிகளுடன் தொட்டுக்கொண்டு இருக்கும்படி வைக்க வேண்டும். நடுவில் கூடு போன்ற பகுதி இருக்கும். இதை, ஒருநாளைக்கு மூன்று முறை செய்யலாம். ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் செய்ய வேண்டும். நேரம் கிடைக்கும் போது எல்லாம் இந்த ஆசனத்தை செய்து வரலாம்.

    பலன்கள் :

    மூளையின் சக்தி அதிகரிக்கிறது. மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது. ஞாபகமறதியைப் போக்கப் பயன்படும். மறந்துபோன விஷயத்தைத் திரும்பவும் ஞாபகப்படுத்திப் பார்க்கவும் பயன்படுத்தலாம்.

    இரண்டு பக்க மூளைக்கும் உள்ள சக்தி ஓட்டம், பரிமாற்றம் சீராகிறது. அதனால், சிந்தனை வளம் அதிகமாகிறது. குழந்தைகள் படிப்பில் மட்டும் அல்லாது விளையாட்டு உட்பட மற்ற எக்ஸ்ட்ராகரிக்குலர் ஆக்டிவிட்டிஸிலும் வெற்றி பெறுவர்.

    அதிகமாக மூளைக்கு வேலை தருபவர்கள், பன்முகச் செயல்பாடுகள் (Multitasking) செய்பவர்கள் அவசியம் செய்ய வேண்டிய முத்திரை.

    கண் பார்வை, காது கேட்கும் திறன், மூக்கால் நுகரும் திறன், சுவையறிதல், தொடு உணர்வு ஆகிய ஐம்புலன்களின் செயல்பாடுகளும் கூர்மையாகின்றன.
    ஹாக்கினி முத்திரை ஞாபகமறதியைப் போக்கப் பயன்படும். மறந்துபோன விஷயத்தைத் திரும்பவும் ஞாபகப்படுத்திப் பார்க்கவும் பயன்படுத்தலாம்.
    வலது மூளை இடது மூளை இரண்டையும் தூண்டிவிட்டு, ஒரே நேரத்தில் அவற்றை இணைந்து இயங்க வைக்கும் ஒரு எளிய தந்திர யோக வழியே ஹாக்கினி முத்திரையாகும். இதன் மூலம் நினைவு திறன் அதிகரிக்கும்.

    இந்த முத்திரை ஞாபகமறதியைப் போக்கப் பயன்படும். மறந்துபோன விஷயத்தைத் திரும்பவும் ஞாபகப்படுத்திப் பார்க்கவும் பயன்படுத்தலாம்.

    செய்முறை :

    இடதுகை வலதுகை விரல்கள் ஒன்றை ஒன்று தொடாமல் நேராக நீட்டி அவைகளின் நுனிகளை ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்கவேண்டும்.

    விரிப்பில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ இந்த முத்திரையை செய்யலாம்.

    முதுகும் கழுத்தும் வளைவின்றி நேராக இருக்க வேண்டும். இரண்டு கைகளின் விரல் நுனிகளும் மறு கை விரல்களின் ஒத்த விரல்களை (படத்திலுள்ளபடி) தொட்டபடி இருக்கும்படி செய்ய வேண்டும் அழுத்தக்கூடாது.

    சுவாசம் இயல்பாகவும் சீராகவும் இருக்க வேண்டும். முழுக் கவனமும் செய்யும் முத்திரையின் மீது குவிந்திருக்க வேண்டும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த முத்திரையை செய்யலாம்.

    மாணவர்கள் தினசரி நான்கு முறை (காலை, மதியம், மாலை, இரவு) 10-15 நிமிடம் வரையில் செய்யலாம்

    பயன்கள்

    இந்த ஹாக்கினி முத்திரையை செய்வதன் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை நினைவுக்கு கொண்டுவர முடியும். நினைவுத்திறனை மேம்படுத்தப் பயிற்சி தரும் அமைப்புகள் இந்த முத்திரையை பயன்படுத்துகிறார்கள்.

    இந்த முத்திரையைச் செய்துவிட்டு படிக்கத் துவங்கினால், படித்தவை அப்படியே மனதில் தங்கும். எளிதில் புரியும். மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு கேள்விக்கான பதில் மறந்து போனால், உடனே இந்த முத்திரையைச் செய்தால் அது நினைவுக்கு வந்துவிடும்.

    ×