search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gold jewels"

    • தனியார் தங்க நகை தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
    • நகைகளின் தரம் மற்றும் ட்ரேட் மார்க் பணிகளையும் செய்து வந்தார்.

    கோவை 

    கோவை சலீவன் வீதியில் தனியார் தங்க நகை தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தில் கோவை வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ்(34)என்பவர் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். இந்த நிறுவனத்தில் இருந்து நகை தயாரிப்பாள ர்களுக்கு தங்கக் கட்டிகளை கொடுத்து பின்னர் அவற்றை நகைகளாக வாங்கி முத்திரை வைக்கும் பணிகளை ஜெகதீஷ் செய்து வந்தார். மேலும் நகைகளின் தரம் மற்றும் ட்ரேட் மார்க் பணிகளையும் செய்து வந்தார்.

    சம்பவத்தன்று நிறுவனத்தின் கணக்குகளை மேலாளர் கார்த்திகேயன் சரிபார்த்தார். அப்போது கடந்த 6 மாதத்தில் கணக்கு வழக்குகளில் திருத்தம் செய்தும் கம்ப்யூட்டரில் உள்ள பதிவுகளில் மாற்றம் செய்தும் ரூ.55 லட்சம் மதிப்பிலான 1467 கிராம் தங்க கட்டிகளை ஜெகதீஷ் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கார்த்திகேயன் வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஜெகதீஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர் அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 94 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #LSPolls
    கரூர்:

    பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு கடந்த 10-ந்தேதி வெளியானது. அப்போது முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த தேர்தல் ஆணையம் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் அதையும் மீறி தினந்தோறும் பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர்கள், தொழிலதிபர்கள் எடுத்து செல்லும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். இதில் ஏராளமான வெளிநாட்டு பணம், தங்கம், வெள்ளி நகைகள், மின் சாதன பொருட்களும் சிக்கியுள்ளன.

    இந்த நிலையில் கரூர் அருகே நள்ளிரவில் நடந்த வாகன சோதனையில் 94 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதுபற்றிய விபரம் வருமாறு:-

    மதுரை அய்யர்பங்களா சரோஜினி காலனியில் தனியார் கூரியர் மற்றும் பார்சல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் சேலத்தில் உள்ள நகைக்கடைகளுக்கு தங்கம், வெள்ளி நகைகள் வியாபாரிகள், நகை செய்வோர்களிடம் இருந்து பெறப்பட்டு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

    அதேபோல் நேற்று இரவு மதுரையில் இருந்து சேலத்தில் உள்ள 13 நகைக்கடைகளில் ஒப்படைப்பதற்காக நகைகளை எடுத்துக்கொண்டு ஆம்னி வேன் ஒன்று புறப்பட்டது. அந்த வேனை டிரைவர் கிருபாகரன் ஓட்டிச் சென்றார். மேலும் கூரியர் நிறுவன மேலாளர் மற்றும் துப்பாக்கியுடன் 2 பாதுகாவலர்களும் அந்த வேனில் வந்தனர்.

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த ஆண்டி பட்டிக்கோட்டை சோதனைச்சாவடி அருகே நள்ளிரவில் அந்த வேன் வந்தபோது அங்கு தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் மறித்தனர். நிலையான ஆய்வுக்குழு அதிகாரி குழந்தைவேலு வேனில் எடுத்து வரப்பட்ட பொருட்கள் குறித்து கேட்டபோது அதில் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது.

    ஆனால் அதில் பெரும்பாலான நகைகளுக்கு உரிய ஆவணம் இல்லாதது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நகைகளுடன் அந்த வேன் இன்று அதிகாலை கரூர் கலெக்டர் அலுவலக வளாத்திற்கு கொண்டு வரப்பட்டது. வேனில் வந்தவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அதில் 94 கிலோ 894 கிராம் தங்க நகைகள் கொண்டு வரப்பட்டது தெரிந்தது.

    அதன் மதிப்பு ரூ.5 கோடியே 63 லட்சத்து 13 ஆயிரம் என அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த நகைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

    தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி மீனாட்சி வேனில் எடுத்து வரப்பட்ட நகைகளை ஆய்வு செய்து, உரிய ஆவணங்கள் இருந்தால் திருப்பி ஒப்படைக்கப்படும் என்றும், இல்லையேல் அவை அனைத்தும் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார். கரூரில் 94 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #LSPolls

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 16-ம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராய மன்னர் வழங்கிய தங்க நகைகள் மாயமானது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #TirupatiTemple
    புதுடெல்லி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 16-ம் நூற்றாண்டில் விஜயநகரத்தை ஆட்சி செய்த கிருஷ்ணதேவராய மன்னர் ஏராளமான தங்க நகைகளை காணிக்கையாக வழங்கிய தகவல் கோவிலில் காணப்படும் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு இருப்பதை 2011-ம் ஆண்டு ஐதராபாத் தொல்லியல் துறை உறுதி செய்து அறிக்கை வெளியிட்டது. மேலும் தற்போது கோவிலில் வைக்கப்பட்டுள்ள நகைகளின் பட்டியலில் கிருஷ்ணதேவராய மன்னர் வழங்கிய ஆபரணங்கள் குறித்த தகவல் எதுவும் காணப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.



    இதையடுத்து பி.கே.எஸ்.ஆர். அய்யங்கார் என்ற சமூக ஆர்வலர் திருப்பதி கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட தங்க நகைகள் குறித்த விவரங்களை தெரிவிக்கவேண்டும் என்றும் திருப்பதி கோவிலை வரலாற்று மற்றும் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிப்பதற்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று கேட்டும் மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு கடிதம் எழுதினார். ஆனால் அவருக்கு எந்த துறையும் திருப்திகரமான பதிலை அளிக்கவில்லை.

    இதைத்தொடர்ந்து மத்திய தகவல் ஆணையத்துக்கு இதுபற்றி அய்யங்கார் கேள்வி எழுப்பி கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தை தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு விரிவாக ஆய்வு செய்தார். பின்னர், அய்யங்கார் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படி இந்திய தொல்லியல் துறை, மத்திய கலாசார அமைச்சகம், ஆந்திர அரசு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆகியவற்றுக்கு அவர் உத்தரவிட்டார்.

    மேலும், திருப்பதி கோவிலை வரலாற்று மற்றும் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிப்பது தொடர்பாக பிரதமர் அலுவலகம் எடுத்த நடவடிக்கை குறித்து வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும் என்றும் அவர் உத்தரவு பிறப்பித்தார். #TirupatiTemple 
    அன்னூரில் பட்டபகலில் 18 பவுன் தங்க நகைகள் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அன்னூர்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒட்டர்பாளையம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 55). கைத்தறி தொழிலாளி.

    சம்பவத்தன்று மதியம் இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு மகள் திருமண சம்பந்தமாக ஜோதிடரை பார்க்கச் சென்றார். பின்னர் மாலையில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த கனகராஜ் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோவில் இருந்த ஆரம், செயின் உள்பட 18 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து கனகராஜ் அன்னூர் போலீசில் புகார் செய்தார். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் காந்தராஜ் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 18 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். பட்டபகலில் 18 பவுன் தங்க நகைகள் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×