search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gangraped"

    உத்தரகாண்ட் மாநிலத்தில் 11 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். #Uttarakhand
    டேராடூன்:

    இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையை கூடுமான வரையில் சரிசெய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    ஜார்காண்ட் மாநிலத்தின் பக்தா என்ற கிராமத்தில் வீடு புகுந்து சிறுமியை கடத்தி, பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை வீடு புகுந்து கடத்தி சென்ற 4 பேர், அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

    அதோடு நின்றுவிடாத அந்த கொடியவர்கள், அந்த 11 வயது சிறுமியை கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #Uttarakhand
    பஞ்சாப் மாநிலம் டசுயா நகரத்தில் 5 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    காந்திநகர்:

    பஞ்சாப் மாநிலம் டசுயா நகரில் நேற்று இரவு 5 வய்து சிறுமி காணாமல் போனதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று காலை அப்பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தின் அருகே சிறுமி இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மிகவும் மோசமான நிலையில் இருந்த சிறுமியை, டசுயா சிவில் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி ராஜேஷ் பக்காரி, சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகவும், அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் சண்டிகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் 5 வயது சிறுமியை கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்த கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
    பீகார் மாநிலத்தின் கயாவில் தந்தையை மரத்தில் கட்டிப்போட்டு தாய் மற்றும் மகளை கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    பாட்னா:

    பீகார் மாநிலம் கயா மாவட்டத்தின் சொந்தியா கிராமத்தின் வழியாக ஒரு குடும்பத்தினர் பைக்கில் நேற்று இரவு சென்று கொண்டிருந்த்னர்.

    அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த 20 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்தது. அந்த கும்பல் தந்தையை அங்குள்ள மரத்தில் கட்டிப்போட்டு விட்டு, தாயையும், மகளையும் பாலியல் பலாத்காரம் செய்தது.

    இதுதொடர்பான புகாரை பெற்ற கோஞ்ச் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், அந்த பகுதி வழியாக சென்ற கல்லூரி மாணவர்களிடம் அந்த கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த கும்பலை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    உத்தரப்பிரதேசம் மாநிலம் எட்டா பகுதியில் வீட்டில் இறக்கிவிடுவதாக காரில் ஏற்றி, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் எட்டா பகுதியில் இளம் பெண் மார்க்கெட் சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக பேருந்துக்கு காத்திருந்தார். அப்போது அங்கு காரில் வந்த அவரது தூரத்து உறவினர்களில் ஒருவன், வீட்டில் இறக்கிவிடுவதாக கூறி அவரை காரில் ஏற்றியுள்ளான்.

    அந்த காரில் அவனது நண்பர்கள் 3 பேரும் இருந்துள்ளனர். அப்போது இளம் பெண்ணின் வீட்டுக்கு செல்லாமல் அவரை காருக்குள் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். #girlgangrapped
    ×