search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "foreign travelers"

    • ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அனைத்திலும் சுற்றுலா பயணிகளால் அறைகள் நிறைந்துவிட்டன.
    • விழாவில் பங்கேற்ற சுற்றுலா பயணிகள், குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு வழங்கினார்.

    புதுச்சேரி:

    கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடுவதற்காக பிரான்சு உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவையில் குவிந்துள்ளனர்.

    இதனால் புதுவை மற்றும் அதனையொட்டியுள்ள ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அனைத்திலும் சுற்றுலா பயணிகளால் அறைகள் நிறைந்துவிட்டன.

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி புதுவை நகர பகுதியில் உள்ள தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது.

    இதில் வெளிமாநில மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்திருந்த கிறிஸ்தவர்கள், சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.

    தனியார் ஒட்டல்கள், விடுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் சுற்றுலா பயணிகள் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர்.

    விழாவில் பங்கேற்ற சுற்றுலா பயணிகள், குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு வழங்கினார்.

    • ஆஸ்பத்திரிகளில் தயார் நிலையில் படுக்கைகள் உள்ளது.
    • வெளிநாட்டு பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.

    கோவை,

    சீனா, அமெரிக்கா, பிரேசில், ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய பி.எப்.7 என்ற புதிய வகை ெகாரோனா நோய்த் தொற்று பரவி வருகிறது. இதனையடுத்து நாட்டிலுள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் மருத்துவ மையங்கள் அமைத்து ெகாரோனா பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    தவிர வெளிநாட்டு பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி கடந்த 2 நாட்களில் பன்னாட்டு விமானத்தில் கோவை விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டு பயணிகள் 8 பேரிடம் ெகாரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் சேகரிக்கப் பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு பயணிகள் 162 பேர் சுகாதாரத் துறை சார்பில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குனர்அருணா கூறியதாவது:-

    வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளில் ெகாரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து முடிவுகள் கிடைக்கும் வரை சுகாதாரத் துறையின் கண்காணிப்பு மையத்தில் வைத்திருக்கவும், அறிகுறிகள் இல்லாதவர்களில் 2 சதவீதம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அறிகுறிகள் இல்வாதவர்களிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களிடம் ெகாரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர, வெளிநாட்டு பயணிகளை 14 நாட்கள் வரை தொலைபேசி வழியாக கண்காணிக்க சுகாதார ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து கோவை வந்த 162 பேருக்கும் எந்தவித அறிகுறியும் இல்லை. இவர்களில் ரேண்டம் முறையில் 8 பேரிடம் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு அனைவரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் சுகாதார ஆய்வாளர்களை வெளிநாட்டு பயணிகளை தொலைபேசி வழியாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் முழுவதும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்த்து மொத்தம் சுமார் 12 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.

    அதேபோன்று, நோயாளிகளுக்கு அளிப்பதற்கான ஆக்சிஜன் கட்டமைப்பு வசதியும் நம்மிடம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவை அரசு ஆஸ்பத்திரி அதிகாரிகள் கூறும்போது, கோவை அரசு மருத்துவமனையில் தற்போது யாரும் ெகாரோனாவுக்கு சிகிச்சை பெறவில்லை. இருப்பினும், ெகாரோனா நோயாளிகளுக்கான 30 படுக்கைகள் கொண்ட வார்டு உள்ளது. மருத்துவமனையில் சுமார் 1,500 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் இணைப்பு வசதி உள்ளது.

    கோவை இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறும்போது,

    இங்கு ெகாரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன. தொற்று அதிகரித்தால் அதற்கேற்ப அவை பயன்படுத்தப்படும் என்றனர்.

    இ-விசா வசதியின் கீழ் வருகை தந்த வெளிநாட்டு பயணிகள் வாயிலாக மத்திய அரசுக்கு இதுவரை ரூ.1,400 கோடி வருவாய் கிடைத்து இருக்கிறது.
    புதுடெல்லி:

    மத்திய அரசு, கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பர் 27-ந் தேதி ஆன்லைன் வாயிலாக வெளிநாட்டுப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கும் இ-விசா திட்டத்தை அறிமுகம் செய்தது. அப்போது இத்திட்டத்தின் கீழ் சுமார் 40 வெளிநாடுகள் இணைக்கப்பட்டன. 2015 ஆகஸ்டு மாதத்தில் 113 நாடுகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

    2016 மார்ச் மாதத்தில் இந்த வசதி மேலும் 37 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. அதனால் மொத்தம் 150 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இ-விசா வசதி கிடைத்தது. பின்னர் இத்திட்டத்தில் ஜப்பான் உள்பட மேலும் சில நாடுகள் இணைக்கப்பட்டன. இதனையடுத்து மொத்தம் 163 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் இ-விசா வசதி பெற்று வருகின்றனர். இந்த வசதியின் கீழ் வரும் வெளிநாட்டினர் ஒருவர் இந்தியாவில் 2 மாதங்கள் வரை தங்க முடியும்.

    கடந்த 2015-ஆம் ஆண்டில் இ-விசா வசதியின் கீழ் வருகை தந்த வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை 4,45,300-ஆக இருந்தது. 2016-ஆம் ஆண்டில் அது இரண்டு மடங்குக்கு மேல் உயர்ந்து 10,79,696-ஆக அதிகரித்தது. 2017-ல் 19 லட்சமாக உயர்ந்தது. நடப்பு ஆண்டில் இந்த எண்ணிக்கை 25 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இ-விசா திட்டம் அறிமுகமான காலம் முதல் இதுவரை இந்த வசதியைப் பயன்படுத்தி நம் நாட்டுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகள் மூலம் மத்திய அரசுக்கு ரூ.1,400 கோடி வருவாய் கிடைத்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

    மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மருத்துவ சிகிச்சைக்கான செலவினம் குறைவாக உள்ளது. இதனால் மருத்துவ சுற்றுலா மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமல்லாமல் சிகிச்சைக்காக இந்தியா வரும் வெளிநாட்டினருக்கும், வணிக பிரிவினருக்கும் இ-விசா வசதி வழங்கப்படுகிறது. 
    ×