search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flag day"

    • கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து நிதி செலுத்தினர்
    • மாணவர்கள், அரசு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகம் சார்பில் நேற்று கொடி நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    ஊர்வலம் நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே இருந்து தொடங்கியது. ஊர்வலத்தை நாட்டறம்பள்ளிதாசில் தார் க.குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பூபதி கவுண்டர் தெரு, போலீஸ் ஸ்டேஷன் ரோடு, ஆர்.சி.எஸ். மெயின் ரோடு வழியாக சென்று தாலுகா அலுவலகத்தில் ஊர்வலம் முடிந்தது. ஊர்வலத்தின்போது பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள், சாலையோரம் உள்ள கடைக்கா ரர்கள் தாங்களாகவே முன்வந்து கொடி நாள் நிதி செலுத்தினர்.

    இந்த ஊர்வலத்தில் மண்டலதுணை தாசில்தார் அரிதாஸ், வருவாய் ஆய்வாளர்கள் அன்னலட்சுமி, கவுரி, பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • கொடி நாள் வசூல் பணி தொடங்கப்பட்டுள்ளது
    • நடப்பாண்டு ரூ.34.60 லட்சம் இலக்கு

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் கொடி நாள் வசூல் பணியை கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தொடக்கி வைத்தார். ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடிநாள் வசூல் உண்டியலில் நிதியை அளித்து அவர் தெரிவித்தாவது:-

    நமது தாயகத்தைக் காக்கும் முப்படைகளிலும் பணிகளில் ஈடுபட்டுள்ள படைவீரர்கள் மற்றும் படைப்பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள முன்னாள் படைவீரர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் கெரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ம் நாளன்று படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளன்று அரசால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கொடி நாள் நிதி வசூல் தொடக்கப்படுகிறது.

    அதன் படி அரியலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு கொடிநாள் நிதி வசூல் இலக்கு ரூ.32,75,000 நிர்ணயிக்கப்பட்டது . ஆனால் அனைத்து துறை அலுவலர்களின் ஒத்து ழைப்போடு நிர்ணயித்த இலக்கைவிட கூடுதலாக ரூ.40,75,000 நிதி வசூலித்து சாதனையை எட்டியுள்ளது.

    அதே போல நிகழாண்டு ரூ.34,60,000 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போல கொடிநாள் நிதி வசூலில் அனைத்து றைகளின் ஒத்துழை ப்புடன் நிர்ணயி க்கப்பட்டுள்ள இலக்கைவிட கூடுதலாக வசூலித்து, சாதனை படைக்க வேண்டும் என்றார். முன்னதாக அவர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு கல்வி உதவித்தொகை, கண்கண்ணாடி, திரும ணநிதியுதவி உள்ளிட்ட திட்டத்தின் கீழ் 29 நபருக்கு ரூ.5,61,000 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரர் நல அலுவலக கண்காணி ப்பாளர் ம.கலையரசி காந்திமதி, முன்னாள் படைவீரர் நல அமைப்பாளர் சி.சடையன் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா்களிடம் இருந்து 13 மனுக்கள் பெறப்பட்டன.
    • முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோருக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் முகாம் நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரா் நலத் துறை சாா்பில் படைவீரா் கொடி நாள் விழா, முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோருக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தலைமை வகித்தாா்.

    இதில், தமிழக அரசு மற்றும் மத்திய முப்படை வீரா் வாரியத்தால் முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோருக்கு வழங்கப்படும் பல்வேறு நலத் திட்ட உதவிகள் தொடா்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டில் முன்னாள் படை வீரா் கொடி நாளுக்காக அரசால் ரூ.1.24 கோடி நிதி வசூலிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டதில், ரூ.1.37 கோடி நிதி வசூலிக்கப்பட்டது. அதேபோல, நிகழாண்டு ரூ.1.31 கோடி நிதி வசூலிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா்களிடம் இருந்து 13 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து துறை அலுவலா்களையும் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம் அறிவுறுத்தினாா்.

    இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், உதவி இயக்குநா் (முன்னாள் படை வீரா் நலன்) மணிவண்ணன், முன்னாள் படை வீரா் நல அலுவலக அமைப்பாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    படைவீரர் கொடிநாள் நிதி திரட்டும் வகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு படை வீரர்கள் நலவாரிய செயலாளர் இன்று கொடி அணிவித்து இந்த ஆண்டுக்கான வசூலை தொடங்கி வைத்தார். #BrigadierMHRizvi #NarendraModi #ArmedForcesFlagDay
    புதுடெல்லி:

    நமது தாய்த் திருநாட்டின் எல்லைகளை இரவு பகலாகக் காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் நாள் படை வீரர் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது.

    பனிமுகடுகள் உள்ள இமயமலை எல்லைகளையும், அடர்ந்த காடுகள் நிறைந்த வடகிழக்கு எல்லைப் பகுதிகளையும், பரந்த சமவெளியான வடமேற்கு எல்லைப் பகுதிகளையும், நீண்ட நெடிய கடல் பகுதிகளையும் காவல் காத்து, தாய்த் திருநாட்டிற்காக தமது உயிரைத் தியாகம் செய்த முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் பேணிக் காத்திடுவது நமது சமூகக் கடமையாகும்.

    இந்த சமூகக் கடமையை நிறைவேற்றிடும் பொருட்டு கொடிநாள் அன்று கொடி விற்பனை மூலமும், நன்கொடைகள் மூலமும் திரட்டப்படும் நிதி, முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்கும், அண்டை நாட்டு எதிரிகள் மற்றும் உள்நாட்டு தீவிரவாதிகளின் தாக்குதலில் உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும், முன்னாள் படை வீரர்களின் மேம்பாட்டிற்காகவும் செலவிடப்படுகிறது.


    ஒவ்வொரு மாநில நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட வாரியாக உள்ள அரசு அலுவலகங்களின் மூலம் கொடி நாள் நிதி திரட்டப்படுகின்றது. இந்த நிதி வசூலை அந்தந்த மாநிலங்களின் கவர்னர்கள் ஆண்டுதோறும் துவக்கி வைப்பார்கள். பின்னர், மாவட்டங்கள் தோறும் திரட்டப்படும் நிதியானது, மாநில அரசிடம் சேர்ப்பிக்கப்படும்.

    மாநில அரசுகள் அனைத்தும் அந்தந்த ஆண்டுகளில் தாம் சேமித்த நிதியை பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய அளவிலான படை வீரர்கள் நலவாரியத்திடம் ஒப்படைக்கும்.

    அவ்வகையில், இந்த ஆண்டுக்கான படைவீரர் கொடிநாள் நிதி திரட்டும் வகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு படை வீரர்கள் நலவாரிய செயலாளர் பிரிகேடியர் எம்.ஹெச். ரிஸ்வி இன்று கொடி அணிவித்து இன்று வசூலை தொடங்கி வைத்தார். #BrigadierMHRizvi #NarendraModi #ArmedForcesFlagDay 
    நமது படை வீரர்களின் சேவையைப் போற்றிடும் வகையில் கொடிநாள் நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டும் என்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார். #FlagDay #GovernorBanwarilalPurohit
    சென்னை :

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முப்படை வீரர்களான ராணுவம், கப்பல் மற்றும் விமானப்படை ஆகியவற்றில் வலிமையுடன் பணியாற்றி வருபவர்களின் பெருமையை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ந்தேதி கொடிநாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

    நமது நாட்டின் எல்லைப் பகுதிகளை எதிரிகளிடமிருந்தும். எல்லைக்குள் ஊடுருகின்றவர்களிடமிருந்தும் காத்திடும் வகையில் திறமையுடன் செயல்பட்டு வரும் முப்படை வீரர்களின் தன்னலமற்ற சேவைகளை நாம் அனைவரும் நினைவு கூறக்கூடிய அருமையான தருணமாகும்.

    வீரமான படைவீரர்களை உருவாக்குவது மட்டுமின்றி, நாட்டுக்காக பணியாற்றிடும் இப்படை வீரர்கள் பணி ஓய்வு பெற்றோர், அவர்களின் வயதானோர், இயலாதோர் ஆகியோர் பயனடையும் வகையில் சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, சமூகப்பாதுகாப்பு போன்ற புதுமையான திட்டங்களை செயல்படுத்த முக்கிய நிதி ஆதாரமே, முப்படை கொடிநாள் நிதிக்கு ஆர்வமுடன் பொதுமக்களால் கொடுக்கப்படும் நிதி உதவியே ஆகும்.

    நமது படை வீரர்களின் சேவையைப் போற்றிடும் வகையில் கொடிநாள் நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #FlagDay #GovernorBanwarilalPurohit 
    ×