search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூா் மாவட்டத்தில்  கொடி நாள் நிதியாக ரூ.1.31 கோடி வசூலிக்க இலக்கு
    X

    முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்ற காட்சி. 

    திருப்பூா் மாவட்டத்தில் கொடி நாள் நிதியாக ரூ.1.31 கோடி வசூலிக்க இலக்கு

    • முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா்களிடம் இருந்து 13 மனுக்கள் பெறப்பட்டன.
    • முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோருக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் முகாம் நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரா் நலத் துறை சாா்பில் படைவீரா் கொடி நாள் விழா, முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோருக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தலைமை வகித்தாா்.

    இதில், தமிழக அரசு மற்றும் மத்திய முப்படை வீரா் வாரியத்தால் முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோருக்கு வழங்கப்படும் பல்வேறு நலத் திட்ட உதவிகள் தொடா்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டில் முன்னாள் படை வீரா் கொடி நாளுக்காக அரசால் ரூ.1.24 கோடி நிதி வசூலிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டதில், ரூ.1.37 கோடி நிதி வசூலிக்கப்பட்டது. அதேபோல, நிகழாண்டு ரூ.1.31 கோடி நிதி வசூலிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா்களிடம் இருந்து 13 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து துறை அலுவலா்களையும் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம் அறிவுறுத்தினாா்.

    இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், உதவி இயக்குநா் (முன்னாள் படை வீரா் நலன்) மணிவண்ணன், முன்னாள் படை வீரா் நல அலுவலக அமைப்பாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×