search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடிநாள் நிதிக்கு தாராளமாக உதவிடுங்கள்: கவர்னர் வேண்டுகோள்
    X

    கொடிநாள் நிதிக்கு தாராளமாக உதவிடுங்கள்: கவர்னர் வேண்டுகோள்

    நமது படை வீரர்களின் சேவையைப் போற்றிடும் வகையில் கொடிநாள் நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டும் என்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார். #FlagDay #GovernorBanwarilalPurohit
    சென்னை :

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முப்படை வீரர்களான ராணுவம், கப்பல் மற்றும் விமானப்படை ஆகியவற்றில் வலிமையுடன் பணியாற்றி வருபவர்களின் பெருமையை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ந்தேதி கொடிநாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

    நமது நாட்டின் எல்லைப் பகுதிகளை எதிரிகளிடமிருந்தும். எல்லைக்குள் ஊடுருகின்றவர்களிடமிருந்தும் காத்திடும் வகையில் திறமையுடன் செயல்பட்டு வரும் முப்படை வீரர்களின் தன்னலமற்ற சேவைகளை நாம் அனைவரும் நினைவு கூறக்கூடிய அருமையான தருணமாகும்.

    வீரமான படைவீரர்களை உருவாக்குவது மட்டுமின்றி, நாட்டுக்காக பணியாற்றிடும் இப்படை வீரர்கள் பணி ஓய்வு பெற்றோர், அவர்களின் வயதானோர், இயலாதோர் ஆகியோர் பயனடையும் வகையில் சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, சமூகப்பாதுகாப்பு போன்ற புதுமையான திட்டங்களை செயல்படுத்த முக்கிய நிதி ஆதாரமே, முப்படை கொடிநாள் நிதிக்கு ஆர்வமுடன் பொதுமக்களால் கொடுக்கப்படும் நிதி உதவியே ஆகும்.

    நமது படை வீரர்களின் சேவையைப் போற்றிடும் வகையில் கொடிநாள் நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #FlagDay #GovernorBanwarilalPurohit 
    Next Story
    ×