search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடி நாள் வசூல் பணி தொடக்கம்
    X

    கொடி நாள் வசூல் பணி தொடக்கம்

    • கொடி நாள் வசூல் பணி தொடங்கப்பட்டுள்ளது
    • நடப்பாண்டு ரூ.34.60 லட்சம் இலக்கு

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் கொடி நாள் வசூல் பணியை கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தொடக்கி வைத்தார். ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடிநாள் வசூல் உண்டியலில் நிதியை அளித்து அவர் தெரிவித்தாவது:-

    நமது தாயகத்தைக் காக்கும் முப்படைகளிலும் பணிகளில் ஈடுபட்டுள்ள படைவீரர்கள் மற்றும் படைப்பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள முன்னாள் படைவீரர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் கெரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ம் நாளன்று படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளன்று அரசால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கொடி நாள் நிதி வசூல் தொடக்கப்படுகிறது.

    அதன் படி அரியலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு கொடிநாள் நிதி வசூல் இலக்கு ரூ.32,75,000 நிர்ணயிக்கப்பட்டது . ஆனால் அனைத்து துறை அலுவலர்களின் ஒத்து ழைப்போடு நிர்ணயித்த இலக்கைவிட கூடுதலாக ரூ.40,75,000 நிதி வசூலித்து சாதனையை எட்டியுள்ளது.

    அதே போல நிகழாண்டு ரூ.34,60,000 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போல கொடிநாள் நிதி வசூலில் அனைத்து றைகளின் ஒத்துழை ப்புடன் நிர்ணயி க்கப்பட்டுள்ள இலக்கைவிட கூடுதலாக வசூலித்து, சாதனை படைக்க வேண்டும் என்றார். முன்னதாக அவர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு கல்வி உதவித்தொகை, கண்கண்ணாடி, திரும ணநிதியுதவி உள்ளிட்ட திட்டத்தின் கீழ் 29 நபருக்கு ரூ.5,61,000 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரர் நல அலுவலக கண்காணி ப்பாளர் ம.கலையரசி காந்திமதி, முன்னாள் படைவீரர் நல அமைப்பாளர் சி.சடையன் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×