search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Employee dies"

    • 20 வருடங்களாக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருந்தது
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளியை அடுத்த வெள்ளநாயக்கநேரி பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 49). இவர் பச்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.இவருக்கு திருமணமாகி இந்திராணி என்கிற மனைவியும்,3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.காமராஜ் கடந்த 20 வருடங்களாக ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

    இந்தநிலையில் நேற்று முன் தினம் காமராஜ் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப் பிட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை, அவரது மகன் ஹரிஹரன் சிகிச்சைக் காக நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச் சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து ஓசூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பல னின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது தாய் சாந்தா கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார்த்திகேயன் (வயது 28). இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கூரியர் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
    • அண்ணா பூங்கா படுகை தடுப்பு அணை பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர் ராஜ வாய்க்காலில் அனைவரும் குளித்துக் கொண்டு இருந்த போது கார்த்திகேயன் மட்டும் ராஜவாய்க்காலின் மறுகரைக்கு செல்ல முற்பட்டதாக கூறப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள கைலாசம் பாளையம் பக்தவச்சலம் நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 28). இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கூரியர் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    நேற்று கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர்கள் 9 பேர் நேற்று பரமத்தி வேலூர் தாலுகா, ஜேடர் பாளையத்தில் உள்ள அண்ணா பூங்கா படுகை தடுப்பு அணை பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர் ராஜ வாய்க்காலில் அனைவரும் குளித்துக் கொண்டு இருந்த போது கார்த்திகேயன் மட்டும் ராஜவாய்க்காலின் மறுகரைக்கு செல்ல முற்பட்டதாக கூறப்படுகிறது.

    அப்போது அவர் நீச்சல் தெரியாததால் வெளியே வரமுடியாமல் உயிருக்கு போராடினார். பின்னர் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதை பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக ஜேடர்பாளையம் போலீசாருக்கும், நாமக்கல் தீயணைப்பு துறையி னருக்கும் தகவல் கொடுத் துள்ளனர்.

    தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுழலில் சிக்கி ராஜவாய்க் காலில் இறந்து போன கார்த்திகேயனின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்ப டைத்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக் கப்பட்டு கார்த்திகேயனின் உடலை பிரேத பரிசோத னைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தவறி விழுந்து சுங்கச்சாவடி ஊழியர் சாவு
    • நகராட்சி அலுவலகம் பின்புறம் நீதியரசன் தவறி கீழே விழுந்து இறந்து கிடந்தார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே உள்ள பொம்மனப்பாடி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நீதியரசன் (வயது 56). இவர், பெரம்பலூர் புறநகர் பஸ் நிலையத்தில் தற்காலிக நேர காப்பாளராக பணிபுரிந்து, தற்போது சமயபுரம் சுங்கச்சாவடியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

    இந்தநிலையில், நீதியரசன் பெரம்பலூர் வெங்கடாஜலபதி நகரில் உள்ள அவர் குடியிருக்கும் வீட்டுக்கு சென்றுள்ளார்.

    அப்போது நகராட்சி அலுவலகம் பின்புறம் அவர் தவறி கீழே விழுந்து இறந்து கிடந்தார். நேற்று முன்தினம் அந்த வழியே சென்றவர்கள் அதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து ஊழியர் உயிரிழந்தார்
    • கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் பணி செய்து வந்தார்.

    திருச்சி:

    திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை கிருஷ்ணமூர்த்தி ஸ்டோர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரி. இவரது மகன் ஆனந்த் (வயது 28). இவர் வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் பணி செய்து வந்தார். இந்த நிலையில் ஆனந்த் மது போதையில் முதலியார் சத்திரம் பகுதியில் ஒர்க் ஷாப் எதிராக உள்ள கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே அவரை அப்பகுதியினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து சுந்தரி பாலக்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்ணீர் தொட்டியில் விழுந்த ஊழியர் உயிரிழந்தார்
    • அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார்.

    கரூர்:

    கரூர் தாந்தோணிமலை பாரதிதாசன் நகர் 4வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 47). இவர் தாளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று மது மயக்கத்தில் இருந்த ராமமூர்த்தி, வீ ட்டிலிருந்த தரைத்தள தண்ணீர் தொட்டியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயரிழந்தார். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து ராமமூர்த்தி சடலத் தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • கொரோனா பரவல் காரணமாக வீட்டில் இருந்தபடி வேலை பார்த்து வந்தார்.
    • மறுநாள் காலையில் அவருக்கு தொடர் வாந்தி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மயங்கினார்.

    கோவை:

    கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கே.கே. புதூரை சேர்ந்தவர் விஜயராஜ். இவரது மகன் விகாஷ் (வயது 32). ஐ.டி. ஊழியர். கொரோனா பரவல் காரணமாக வீட்டில் இருந்தபடி வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு விகாஷ் வீட்டில் இருந்த படி வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது தூக்கம் வரமல் இருக்க பிஸ்கட் சாப்பிட்ட படி வேலை செய்தார். தெரியாமல் எலி மருந்து பிஸ்கட்டை சாப்பிட்டார். மறுநாள் காலையில் அவருக்கு தொடர் வாந்தி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மயங்கினார்.

    இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக விகாஷை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மேல் சிசிக்சைக்காக மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் விகாஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×