என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elephant attack death"

    • காட்டு யானையால் தாக்கப்பட்டு 2 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
    • காயம் அடைந்த ராஜு மற்றும் அவரது மகன் சுதீப் ஆகியோர் நகர அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுகா தேவரபுராவை சேர்ந்த அன்னையா (வயது41) மற்றும் மைசூர் மாவட்டம் எச்டி கோட் தாலுகா பல்லே வனப்பகுதியை சேர்ந்த சுஷில் (46) ராஜு மற்றும் இவரது மகன் சுதீப் உள்ளிட்டோர் தேவரபுராவில் இருந்து காபி தோட்டத்திற்கு வேலைக்கு சென்றனர்.

    அப்போது அன்னையா பகுதியில் காட்டு யானையால் தாக்கப்பட்டு 2 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இவர்கள் உடல்களை மண்டல வன அதிகாரி கங்காதர் தலைமையிலான வன குழுவினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த ராஜு மற்றும் அவரது மகன் சுதீப் ஆகியோர் நகர அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    • யானை கோபத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
    • பாகனை தாக்கி விட்டோமே என்று நினைத்து யானை வருந்தியது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் 26 வயது தெய்வானை யானை உள்ளது. இந்த கோவில் யானையை பராமரிக்க பாகன்களாக அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் (வயது 46), ராதாகிருஷ்ணன் (57), செந்தில்குமார் (47) ஆகிய 3 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    நேற்று மாலை யானை பராமரிப்பு பணியில் பாகன் உதயகுமார் மட்டும் இருந்தார். அப்போது அவரை பார்ப்பதற்காக அவரது உறவினரான கன்னியாகுமரி மாவட்டம் பலுகல் பகுதியை சேர்ந்த சிசுபாலன் (59) வந்துள்ளார்.

    நேற்று மாலை யானை அருகே சென்றபோது சிசு பாலனை யானை தாக்கியது. அப்போது அதனை பார்த்த பாகன் உதயகுமார் அதனை தடுக்க சென்றபோது அவரையும் யானை தாக்கியதில் 2 பேரும் பலியாகினர்.


    இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து சென்றனர். இதற்கிடையே சக பாகன்கள் யானையை சாந்தப்படுத்தி கூடுதல் சங்கிலிகள் கொண்டு அதனை கட்டி போட்டனர். சிசுபாலன் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று தனியார் வங்கியில் பணி யாற்றி வருகிறார்.

    இவரது தந்தை திருச்செந்தூரில் யானை பாகனாக இருந்ததால் சிறு வயது முதலே சிசுபாலன் யானைகளை பார்க்க வருவது வழக்கமாகும்.தெய்வானை யானை தங்குவதற்கு ராஜகோபுரம் பகுதியில் குடில் அமைக்கப்பட்டுள்ளது.

    நேற்று அந்த குடிலின் பின் வாசல் வழியாக சிசுபாலன் சென்றுள்ளார். அப்போது அவர் யானையின் துதிக்கையில் முத்தம் கொடுத்தும், யானையின் முன்னால் நின்று தனது செல்போனில் 'செல்பி'யும் எடுத்துள்ளார்.

    இதற்கிடையே ஏற்கனவே அந்த யானையிடம் சிசுபாலன் விளையாட்டுத் தனமாக நடந்து கொண்டதாகவும், இதனால் அவர் மீது யானை கோபத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று அவர் நீண்ட நேரம் 'செல்பி' எடுத்ததால் ஆத்திரம் அடைந்த யானை அவரை துதிக்கை யால் சுற்றி வளைத்து தாக்கி யது. இதனை யானையின் பின்னால் நின்ற உதயகுமார் பார்த்து அதிர்ச்சியடைந்து சிசுபாலனை மீட்க சென்றுள்ளார்.


    அப்போது பின்னால் இருந்து வேறு யாரோ வருகிறார்கள் என நினைத்து துதிக்கையால் அவரையும் தாக்கியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பாகனும், சிசுபாலனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    பின்னால் வந்த நபர் பாகன் உதயகுமார் என்பது தெரிந்ததும் பாகனை தாக்கி விட்டோமே என்று நினைத்து யானை வருந்தியது.

    சி.சி.டி.வி.காட்சிகள்

    எப்போதும் யானை பாகன் மீது மிகுந்த பாசத்தில் இருந்து வருமாம். இந்நிலையில் கோபம் தணிந்ததும் பாகனை தாக்கியதை அறிந்த யானை குழந்தைபோல் கண்ணீர் விட்டு தன்னை கட்டிப்போட்ட இடத்தில் இருந்து மண்டியிட்டு உதயக்குமாரை துதிக்கையால் தூக்கியவாறு அவரை எழுப்ப முயன்றது.

    பலமுறை இவ்வாறாக செய்தும் பாகன் எழுந்திருக்காததால் யானை கண்ணீர் விட்டபடி சோகத்தில் மூழ்கியது. அப்போது யானையை சாந்த படுத்திய சக பாகன்களை பார்த்து தெய்வானை யானை கண் கலங்கி நின்றது. இந்த காட்சிகள் அங்குள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி உள்ளது.

    பாகன் உதயகுமார் தெய்வானை யானையுடன் மிகவும் அன்பாக பழகி வந்துள்ளார். சிறு வயது முதலே யானை அவருடன் வளர்ந்ததால் எப்போதும் அது அன்யோன்யமாக நடந்து கொள்ளும். தினமும் நடைபயிற்சியின் போதும், பக்தர்களுக்கு ஆசி வழங்கும்போதும் உதயக்குமாருடன் யானை விளையாடி கொண்டி ருக்கும்.

    தொட்டியில் குளிக்கும்போதும், முகாம்களுக்கு சென்றி ருக்கும்போதும் யானை உதயக்குமாருடன் நெருங்கி பழகி விளையாடுமாம்.

    பாகனை தாக்கிய வருத்தத்தில் யானை சோகமாக இருந்ததுடன் இரவு வரை சாப்பிடாமல் இருந்தது. சம்பவம் நேற்று மாலை 3 மணி அளவில் நடந்த நிலையில் இரவு 10 மணி வரை யானை உணவருந்தவில்லை. அதற்கு பின்னர் பாகன்கள் முயற்சியால் சிறிதளவு பச்சை ஓலையை சாப்பிட்டது.

    இதுகுறித்து திருச்செந்தூர் வனச்சரக அலுவலர் கவின் கூறும்போது,சிசுபாலன் யானையின் முன்பு நின்று 'செல்பி' எடுத்தவாறு துதிக்கையில் முத்தமிட்டுள்ளார். ஏற்கனவே அவர் மீது ஆத்திரத்தில் இருந்த யானை அவரை தாக்கி உள்ளது என்றார்.

    தொடர்ந்து யானைக்கு மாவட்ட வன அலுவலர் ரேவதி ராமன், வனத்துறை மருத்துவர்கள் மனோகர், முத்துகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவ பரிசோதனை செய்தனர். தொடர்ந்து யானை குடிலை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மேலும் தெய்வானை யானையை பராமரிப்பதற்காக நெல்லையப்பர் கோவில் யானை பாகன் ராமதாஸ் என்பவரும் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.

    திருச்செந்தூர் யானை இதுவரை பாகன்களையோ, பக்தர்களையோ தாக்கிய சம்பவங்கள் நடைபெற்றது இல்லை. நேற்றும் அங்கு சென்ற பிற பாகன்களையோ மற்றவர்களையோ தாக்காத யானை சிசுபாலனை மட்டும் தாக்கியதன் காரணம் என்ன? என்பது குறித்து வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே கடைசியாக பாகன் உதயகுமார் தெய்வானை யானை மீது தண்ணீர் காட்டும் காட்சி களும், தன்னை அறியாமல் பாகனை தாக்கியதை அறிந்த தெய்வானை யானை குழந்தை போல் கண் கலங்கிய காட்சிகளும் தற்போது சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. அது பார்ப்பவர்கள் கண்களை கலங்க செய்யும் வகையில் உள்ளது.

    • இறந்த இடத்தையும், தெய்வானை யானையையும் பார்வையிட்டார்.
    • முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் கடந்த 18-ந் தேதி தெய்வானை யானை தாக்கி யதில் யானை பாகன் உதய குமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் இறந்தனர்.

    இந்த துயர செய்தியை கேட்டவுடன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் யானை பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து, நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் சம்பவ இடத்தை இன்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் யானை தெய்வானைக்கு கரும்பு கொடுத்தார்.


    அதை யானை வாங்கி சாப்பிட்டு தலையை அசைத்தது. பின்னர் அமைச்சர் சேகர் பாபு கோவிலுக்கு சென்று சுவாமி மூலவர் மற்றும் சண்முகர் சன்னதியில் தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் யானை பாகன் உதயகுமார் வீட்டிற்கு சென்று அவரது மனைவி ரம்யாவிடம், முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம், கோவில் நிதியில் இருந்து ரூ. 5 லட்சம், தக்கார் அருள் முருகன் சார்பில் ரூ.3 லட்சம் என மொத்தம் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

    தொடர்ந்து அவர் சிசு பாலன் மகள் அஷ்யாவிடம், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம், தக்கார் அருள் முருகன் சார்பில் ரூ.3லட்சம் என ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறியதாவது:-

    யானை பாகன் இறந்த 10 நிமிடத்தில் யானை இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. யானை பாகன் உயிரிழப்பு பாதிப்பில் இருந்து இன்னும் அது மீள வில்லை. யானை சரிவர உணவை உட்கொள்வதை தவிர்க்கிறது. தற்போது யானை நலனுடன் உள்ளது. 5 துறை சார்ந்த அதிகாரிகள் குழு யானையின் உடல் நிலையை கண்காணித்து வருகின்றனர்.


    திருச்செந்தூர் கோவில் சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. யானைகள் குளிப்பதற்கு பிரத்யேக நீச்சல் குளம் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    யானைகளுக்கு தேவையான அனைத்தும் செய்யக்கூடிய நிலையில் ஆண்டுதோறும் நடக்கும் புத்துணர்வு முகாம்களுக்கு அனுப்புவதா? இல்லையா? என்பது தொடர்பாக வனத்துறை மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகளோடு ஆலோசனை செய்து முதல்-அமைச்சரின் உத்தரவை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

    புத்துணர்வு முகாமிற்கு அனுப்புவதற்கான பரிந்து ரைகள் வந்தால் அந்த பணி மேற்கொள்ளப்படும். கோவிலில் நடந்த சம்ப வத்தில் எந்த ஒளிவு மறைவு இல்லாமல் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுளளது.துறை சார்ந்த குழு தொடர் கண்காணிப்பு நடந்து வருகிறது.

    கால்நடை, வனத்துறை மருத்துவர்கள் குழு தொடர்ந்து அங்கேயே இருந்து கண்காணித்து வருகின்றனர். கண்காணிப்பு பணிகள் முடிந்த உடன் அடுத்தகட்ட நடவடிக்கை முதல்-அமைச்சரின் ஆலோ சனை படி எடுக்கப்படும்.

    தமிழகத்தில் உள்ள 28 கோவில்களில் யானைகளுக்கு தேவையான அனைத்தும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    யானைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் மூலம் தொடர் கண்காணிப்பு பணி மருத்துவர்களின் பரிந்து ரைப்படி உணவுகள், தேவையான மருத்துவ சிகிச்சைகள் போன்றவைகள் வழங்கப்பட்டுள்ளது

    யானை பாகன் உதயகுமார் மனைவிக்கு தகுதிக்கு தகுந்த வேலை வாய்ப்பு வழங்கப்படும். அவரது குழந்தைகள் படிப்புச் செலவை இந்த தொகுதி அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், கனிமொழி எம்.பி. ஆகியோர் ஏற்றுக் கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அமைச்சர் சேகர் பாபுவுடன் கோவில் தக்கார் அருள் முருகன், இந்து சமய அறநிலைய முதன்மை செயலாளர் சந்திரமோகன், ஆணையர் ஸ்ரீதர், மாவட்ட கலெக்டர் இளம் பகவத், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், வன கால்நடை மருத்துவர் மனோகரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி பிரம்ம சக்தி, திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்

    ×