search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Shekhar Babu"

    • ரூ. 47 லட்ச ரூபாய் செலவில் ஸ்ரீமத் சிதம்பர சாமிகள் மடம் திருக்குளம் புதுப்பிக்கும் பணி நடைபெற்றும் வருகின்றன.
    • மேலும் 3 கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம் விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு தைகிருத்திகையை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) திருப்போரூர், கந்தசாமி கோவில் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடு அரங்குகளை பார்வையிட்டு, நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியையும், கோவிலில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார்.

    பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்போரூர் கந்தசாமி கோவில் சார்பில் கட்டப்பட்டு நீண்ட நாட்கள் திறக்கப்படாமல் இருந்த திருமண மண்டபத்தை இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் திறந்து வைக்கப்பட்டது. மேலும் கோவில் அலுவலகத்திற்கு ரூ.94 லட்சம் மதிப்பீட்டிலான பணிகள் முடிவுறும் நிலை யிலும், ரூ.6.65 கோடி செலவில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி தொடங்கப்படும் நிலையிலும், ரூ. 47 லட்ச ரூபாய் செலவில் ஸ்ரீமத் சிதம்பர சாமிகள் மடம் திருக்குளம் புதுப்பிக்கும் பணி நடைபெற்றும் வருகின்றன.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி ஏற்பட்ட பிறகு இறை பசியோடும், வயிற்றுப் பசியோடும் வருபவர்களின் இரண்டு பசியையும் தீர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் 2 கோவில்களில் செயல்படுத்தப்படட முழு நேர அன்னதானத் திட்டம் 8 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டதோடு, இந்தாண்டு மேலும் 3 கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம் விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

    அதேபோல ஒருவேளை அன்னதான திட்டத்தில் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 10 கோவில்கள் இணைத்துக் கொள்ளப்பட்டன. இவ்வாண்டு மேலும் 7 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளன. இத்திட்டங்களின் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 82 ஆயிரம் பக்தர்கள் உணவருந்துகின்றனர்.

    இதற்கான ஆண்டு ஒன்றிற்கு 105 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. கோவில்களின் அன்ன தானம் மற்றும் பிரசாதத்தின் தரத்தினை உறுதிபடுத்தி ஒன்றிய அரசின் தரச்சான்றிதழ்களை இந்தியாவிலேயே அதிகமான எண்ணிக்கையில் தமிழ்நாடுதான் பெற்று உள்ளது.

    பழனியில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத்திற்கு 20 நாட்கள் நாளொன்றுக்கு 10,000 நபர்கள் வீதம் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானமும், பழனி கோவில் நடத்தும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் 4000 மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டியும் வழங்கப்படுகின்றது. வடலூர் வள்ளலார் கோவிலில் ஒரு நாளைக்கு 10,000 சன்மார்க்க அன்பர்கள் என 3 நாட்களுக்கு 30,000 சன்மார்க்க அன்பர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவிலில் திருவிழா காலங்களில் 500 நபர்க ளுக்கும், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் வியாழக்கிழமை தோறும் 500 நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது. இப்படி பல்வேறு நல திட்டங்களால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கட்டமைத்து தருகின்ற ஒரு அரசாக திராவிட மாடல் அரசு திகழ்ந்து கொண்டிருக்கின்றது.

    இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இன்று வரை 1,225 கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றிருக்கின்றது. மேலும் இந்த மாத இறுதிக்குள் 1,316 ஆக இந்த எண்ணிக்கை உயரும். அதே போல் நில மீட்பை பொறுத்த அளவில் ரூ. 5,508 கோடி மதிப்பிலான 6,071 ஏக்கர் நிலத்தை மீட்டிருக்கின்றோம்.

    தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருக பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளில் ரூ. 599.50 கோடி மதிப்பீட்டில் 238 பணிகளும், அறுபடை வீடுகள் அல்லாத முருகன் கோவில்களில் ரூ.131.97 கோடி மதிப்பீட்டில் 173 பணிகளும் ஆக மொத்தம் முருகன் கோவில்களில் மட்டும் ரூ.731.47 கோடி மதிப்பீட்டில் 411 பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்தாண்டு முதல் 1000 மூத்த குடிமக்களை அறுபடை வீடுகளுக்கு கட்ட ணமில்லாமல் அழைத்துச் செல்லும் ஆன்மிகப் பயணத்தின் முதற்கட்ட பயணம் வரும் 28-ந்தேதியும், ராமேஸ் வரம் – காசி ஆன்மிகப் பய ணத்தில் இந்தாண்டு 300 நபர்கள் 5 கட்டங்களாகவும் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

    இந்து சமய அறநிலைத் துறையானது இப்படி பல்வேறு புதிய முயற்சிகளை எடுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது.

    பாம்பன் சுவாமிகளின் மயூர வாகன சேவனத்தின் 100 ஆண்டு விழாவை மிக சிறப்பாக கொண்டாடி, அவரது வாழ்க்கை வரலாற்று சரித்திரத்தை மறுபதிப்பு செய்து வெளியிட்டும், 108 இசைக் கல்லூரி மாணவ, மாணவியர் சண்முக கவசம் மற்றும் குமாரஸ்தவம் ஆகியவற்றை பாராயணம் செய்தும் சிறப்பு செய்தோம். ஆனால் இன்று சிலர் சுத்தமாக இருக்கின்ற கோவில்களையே சுத்தப்படுத்துவது போல மீடியா பப்ளிசிட்டிக்காக செய்து கொண்டிருக்கின்றார்கள்.

    அதற்கு கவர்னர் துணை நின்று, சுத்தம் செய்கிறேன் என்று புறப்பட்டு இருக்கின்றார். ஏற்கனவே ஆலயங்கள் அனைத்தும் தூய்மையாக தான் பராமரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை, தென்கலை பிரச்சினையை நான் ஏற்கனவே அமைச்சர் என்ற முறையில் இரண்டு முறை அவர்களை அழைத்து தலைமைச் செய லகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றேன். துறையினுடைய செயலாளர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரும் அழைத்து பேசியிருக்கிறார்கள்.

    இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்திலும் சுமார் 8 முறை பேச்சு வார்த்தை நடத்தி இருக்கின்றோம். மனது ஒத்துப் போனால் தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்.

    இவ்வாறு அமைச்சர் பி. கே.சேகர்பாபு கூறினார்.

    இந்நிகழ்ச்சிகளின் போது, செங்கல்பட்டு சார் ஆட்சியர் வி.எஸ்.நாராயண சர்மா, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா, காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் வான்மதி, செங்கல்பட்டு உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் எம்.தேவராஜ், கோவில் செயல் அலுவலர் கே.குமர வேல் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி மதிப்பில் 20 பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது 35 சதவீத பணி நடந்துள்ளது.
    • கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் பெரும் வளாக திட்ட பணி 2025-ம் ஆண்டுக்குள் பணி நிறைவடையும்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

    இதையொட்டி கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோவிலில் ஆய்வு செய்தனர்.

    முன்னதாக கோவில் வளாகத்தில் ரூ. 49.50 லட்சம் மதிப்பில் யானை நினைவு மண்டபம் கட்டுவதற்கு அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார். பின்னர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான வெயிலுகந்த அம்மன் கோவிலில் பசுமடம் கட்டுவதற்கு அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்.

    தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்துசமய அறநிலையத்துறை சார்பில் திருத்தணி, திருவேற்காடு, திருச்செந்தூர் உள்ளிட்ட 4 இடங்களில் பசு மடம் கட்டப்பட உள்ளது. 11 இடங்களில் யானை நினைவு மண்டபம் கட்டப்பட உள்ளது. திருச்செந்தூரில் ரூ. 49.50 லட்சம் மதிப்பில் யானை நினைவு மண்டபம் கட்டப்பட்ட உள்ளது.

    எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி மதிப்பில் 20 பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது 35 சதவீத பணி நடந்துள்ளது.

    கந்தசஷ்டி திருவிழாவிற்கு 20 லட்சம் மக்கள் கூடுவார்கள். அதற்காக 16 இடங்களில் 12,500 வாகனங்கள் நிறுத்தும் கண்காணிப்பு காமிரா பொறுத்தப்பட்டு தற்காலிக வாகன நிறுத்தம் அமைக்கப்பட்ட உள்ளது.

    100 இடங்களில் புதிதாக கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட உள்ளது. 5 இடங்களில் ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்படும். அங்கு மருத்துவ முகாம் நடக்கும். 400 தூய்மை பணியாளர் நியமிக்கப்படுவார்கள். 21 இடத்தில் கொட்டகை அமைக்கப்பட உள்ளது.

    30 ஆயிரம் பேர் தங்கி விரதம் இருக்கும் வகையில் கழிப்பறை, குடிநீர் வசதியுடன் அமைக்கப்படும். கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் பெரும் வளாக திட்ட பணி 2025-ம் ஆண்டுக்குள் பணி நிறைவடையும். இந்த கட்டுமான பணி சுமார் 50 ஆண்டுகள் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கும்.

    அரசின் சார்பில் ரூ.100 கோடியில் செயல்படுத்த உள்ள 18 திட்டப்பணிகள் கார்த்திகை மாதத்தில் தொடங்கப்பட உள்ளது. யாத்திரிகர் நிவாஸ் பணிக்கு கூடுதலாக ரூ. 19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 45 நாட்களில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வரும்.

    சஷ்டிதிருவிழா பக்தர்களுக்கு எந்த இடையூறு இல்லாமல் சிறப்பாக நடத்தப்படும். கோவிலுக்குள் 250 வாகனங்கள் அனுமதிக்கப்படும். வெளியே 12,500 வாகனங்கள் நிறுத்த வழி வகைசெய்யப்படும்.

    விரதம் மேற்கொள்ள வருகை தரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மருத்துவ வசதிகள் சிறப்பாக செய்து கொடுக்கப்படும். கந்தசஷ்டி திருவிழாவின் போது நீதிமன்ற உத்தரவுபடி உள்பிரகாரத்தில் பக்தர்கள் விரதம் இருக்க அனுமதி இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அவருடன் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் உள்பட உடன் இருந்தனர்.

    • வேலவன் விடுதி வளாகத்தில் கோவில் மூலம் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவமனையையும் திறந்து வைத்தனர்.
    • ரோப் கார் கீழ்நிலையத்தில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக புதிய மின்கல மகிழுந்துகளையும் (பேட்டரிகார்) அமைச்சர்கள் வழங்கினார்கள்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்திட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற 27.01.2023 குடமுழுக்கு அன்று நடைபெறவுள்ளது.

    அதனையொட்டி இன்று நடைபெற்ற பந்தக்கால் நடும் விழாவில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, வேலவன் விடுதி வளாகத்தில் கோவில் மூலம் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவமனையையும் திறந்து வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் மலைக்கோவில் ராஜ கோபுர கலசங்களுக்கு தங்க ரேக் ஒட்டும் பணிகள், ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் மலைக் கோவில் நீராழி பத்தி மண்டபத்தினைச் சுற்றிலும் தற்போதுள்ள இரும்பு மற்றும் எவர்சில்வர் கம்பிகளால் ஆன தடுப்புகள் மற்றும் மடக்கு கதவுகளுக்கு பதிலாக கோவில் அமைப்பிற்கேற்றவாறு, பித்தளையிலான தடுப்புகள் மற்றும் மடக்கு கதவுகள் அமைத்தல், ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் நீராழிபத்தி மண்டபத்திற்கும், மகா மண்டபத்திற்கும் இடையில் இரும்பிலான தடுப்பு வேலிகளை அகற்றி பித்தளை கம்பி வேலி அமைத்தல், ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் தங்க விமானத்தை சுற்றியுள்ள இரும்பினால் ஆன பாதுகாப்பு வேலியினை அகற்றி பித்தளையிலான பாதுகாப்பு வேலியினை அமைத்தல் ஆகிய திருப்பணிகளை தொடங்கி வைத்தனர்.

    ரோப் கார் கீழ்நிலையத்தில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக புதிய மின்கல மகிழுந்துகளையும் (பேட்டரிகார்) அமைச்சர்கள் வழங்கினார்கள்.

    ×