search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disaster Rescue Team"

    வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். #GajaCyclone #Gaja #ADMK #TNMinister #RBUdhayakumar
    மதுரை:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அசோக் நகரில் ரூ. 7 கோடி மதிப்பிலான தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை இன்று நடந்தது. இதில் அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டனர்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. 32 மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இன்று தலைமைச் செயலகத்தில் முதல்- அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கடலோர மாவட்டங்களில் கூடுதலாக பாதுகாப்புகளை ஏற்படுத்த அனைத்து கடலோர மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை கூட்டம் ஏற்கனவே நடத்தப்பட்டு உள்ளது.

    பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மக்கள் தங்குவதற்கு முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.

    4,399 இடங்கள் பாதிக்கப்படும் இடங்களாக கண்டறியப்பட்டு அங்கு தேவையான முகாம்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    தேவைப்படும் பட்சத்தில் மத்திய பேரிடர் மீட்பு குழு பயன்படுத்தப்படும். 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    காற்றோடு மழை இருக்கும் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. எனவே மக்களுக்கு ஊடகங்கள் மூலமாக செய்திகளை அவ்வப்போது கொண்டு சேர்ப்போம். ரெட் அலர்ட் என்பது அரசு நிர்வாகத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மக்கள் அச்சப்பட தேவையில்லை.


    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து கடலோர மாவட்டங்களிலும் அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் ஏற்கனவே கடலுக்குள் சென்றவர்கள் கரை திரும்ப வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #Gaja #ADMK #TNMinister #RBUdhayakumar
    கொடைக்கானலில் மழை நீடித்து வருவதால் பேரிடர் மீட்புக்குழு முகாமிட்டுள்ளது. #TNRain #RedAlert #NDRF

    பெருமாள்மலை:

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் இங்கு கடந்த சில நாட்களாக மழை நீடித்து வருகிறது. நேற்று மதியம் முதல் மழை வெளுத்து கட்டியது. சுமார் 5 மணி நேரம் பெய்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது.

    தொடர் மழை காரமணாக கொடைக்கானல் ஏரி நிரம்பி வழிந்தது. இந்த தண்ணீர் பழனி பகுதியில் உள்ள அணைக்கு வந்து சேருகிறது. அதோடு குடிநீர் வழங்கும் நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

    கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள வெள்ளி நீர் வீழ்ச்சி, பாம்பார் அருவி, வட்டக்கானல் அருவி, பியர்சோழா அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இந்த மழையால் கொடைக்கானல் - வத்தலக்குண்டு மலைப் பாதையில் மச்சசூர் என்ற இடத்தில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தினர்.


    கொடைக்கானல் - பழனி மலைப்பாதையில் வெள்ளைப்பாறை என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. தகவல் அறிந்த வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து சென்று அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேகமூட்டம் தொடர்ந்து காணப்பட்டதால் மலைப்பகுதியில் பகல் நேரத்தில் கூட இருள் போல் காணப்பட்டது. எனவே வாகனங்களில் செல்வோர் முகப்பு விளக்கை போட்டபடி சென்றனர்.

    இன்று வாரவிடுமுறை என்ற போதும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாகவே காணப்பட்டது. எனவே நகர் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. கன மழை எச்சரிக்கை காரணமாக தொப்பி தூக்கும் பாறை, அமைதிச் சோலை, வாட்ச் டவர், பேரிஜம் ஏரி, பசுமை பள்ளத்தாக்கு, பில்லர் ராக், குணா குகை, மோயர் பாயிண்ட் உள்ளிட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்கள் மூடப்பட்டன.

    தொடர் மழை காரணமாக திண்டுக்கல்லில் இருந்து மீட்புக் குழுவினர் 20 பேர் கொடைக்கானல் விரைந்தனர். இவர்கள் பெருமாள் மலை பகுதியில் முகாமிட்டுள்ளனர். அங்கிருந்து வெள்ளப்பாதிப்பு ஏற்படும் இடங்களுக்குச் சென்று மீட்பு பணிகளை தொடங்க உள்ளனர்.

    கன மழை காரணமாக கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் காலனியில் கணேசன், சரோஜா என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்துள்ளது. தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் அங்கு விரைந்துள்ளனர். #TNRain #RedAlert #NDRF

    அரக்கோணத்திலிருந்து மதுரை, ஊட்டி, கோவை, குமரி போன்ற 5 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். #TnRain #NDRF

    அரக்கோணம்:

    தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் நாளை மழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று வானிலை மையம் ரெட் அலார்ட் விடுத்துள்ளது.

    இதனையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 200-க்கும் மேற்பட்டவர்களை மதுரை, ஊட்டி, கோவை, குமரி போன்ற 5 மாவட்டங்களுக்கு துனை கமான்டர் ராஜன்பாலு அனுப்பி வைத்தார்.

    இதுகுறித்து உதவி கமான்டர் கூறுகையில்:-

    இந்த குழுவினர் தங்களுடன் மரம் அகற்றும் கருவிகள் பைபர் படகுகள் நீச்சல் வீரர்களுக்கான உடைகள் என பல்வேறு கருவிகளுடன் எதற்கும் தயாராக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இது தவிர கேரளாவிற்கும் 5 குழுக்கள் சென்றுள்ளனர். ஏற்கனவே திருச்சூரில் 3 குழுக்கள் உள்ளனர் எதற்கும் தயார் நிலையில் உள்ளோம் என்றார்.

    இதேபோல் அரக்கோணம் தாலுகாவில் பேரிடர் தாக்கும் பகுதிகள் என 8 கிராமங்களை ஆய்வு செய்து நேற்று மாலை தாசில்தார் பாபு கிராமத்துக்கு 10 பேர் வீதம் தன்னார்வ தொண்டர்களை தேர்வு செய்து அவர்களுக்கு மீட்பு பணிகளுக்கான பயிற்சியும் வழங்கப்பட்டது.

    பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தயங்காமல் ஒன்றினைந்து செயல்பட்டால் பெரும் சேதம் தவிர்க்க உதவியாக இருக்கும். ஆகவே யார் வேண்டுமானாலும் எதிர்பாராமல் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. #TnRain #NDRF

    ×