search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kodaikanal heavy rain"

    கொடைக்கானலில் மீண்டும் கனமழை பெய்ததால் சீரமைப்பு பணிகள் சுணக்கம் அடைந்துள்ளன. #gajacyclone #heavyrain

    கொடைக்கானல்:

    கஜா புயலால் திண்டுக்கல் மாவட்டத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக கொடைக்கானல் நகர், மேல்மலை, கீழ்மலை ஆகிய பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளபட்டு கொடைக்கானல்- வத்தலக்குண்டு, பழனிசாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. மேல்மலை கிராமங்களுக்கும் போக்குவரத்து தொடங்கியதால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். இதனால் காய் கறிகளை கிடைத்த விலைக்கு மதுரை மற்றும் ஒட்டன் சத்திரம் மார்க்கெட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

    கடந்த 4 வருடங்களாக வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இந்த ஆண்டு ஏற்பட்ட புயலால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

    பல ஏக்கர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது. மேலும் அழுகல் நோய் தாக்கத்தொடங்கியுள்ளதால் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். கொடைக்கானல் நகர்பகுதியில் 75 சதவீதம் மின்வினியோகம் தரப்பட்டுள்ளது. மேல்மலை, கீழ்மலை கிராமங்களில் 2 நாட்களில் மின்வினியோகம் சீரமைக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

    நேற்றிரவு சாரலாக தொடங்கிய மழை விடிய விடிய கனமழையாக நீடித்தது. இதனால் சீரமைப்பு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மலை கிராமமக்கள் கடந்த 7 நாட்களாக மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். வத்தலக்குண்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள உறவினர்களது வீடுகளுக்கு சென்று செல்போன் சார்ஜ் மற்றும் அடிப்படை தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.

    இருந்தபோதும் மலை கிராமங்களில் இயல்புநிலை திரும்ப சில நாட்களாகும் என வேதனையுடன் தெரிவித்தனர். #gajacyclone #heavyrain

    கொடைக்கானலில் மழை நீடித்து வருவதால் பேரிடர் மீட்புக்குழு முகாமிட்டுள்ளது. #TNRain #RedAlert #NDRF

    பெருமாள்மலை:

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் இங்கு கடந்த சில நாட்களாக மழை நீடித்து வருகிறது. நேற்று மதியம் முதல் மழை வெளுத்து கட்டியது. சுமார் 5 மணி நேரம் பெய்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது.

    தொடர் மழை காரமணாக கொடைக்கானல் ஏரி நிரம்பி வழிந்தது. இந்த தண்ணீர் பழனி பகுதியில் உள்ள அணைக்கு வந்து சேருகிறது. அதோடு குடிநீர் வழங்கும் நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

    கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள வெள்ளி நீர் வீழ்ச்சி, பாம்பார் அருவி, வட்டக்கானல் அருவி, பியர்சோழா அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இந்த மழையால் கொடைக்கானல் - வத்தலக்குண்டு மலைப் பாதையில் மச்சசூர் என்ற இடத்தில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தினர்.


    கொடைக்கானல் - பழனி மலைப்பாதையில் வெள்ளைப்பாறை என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. தகவல் அறிந்த வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து சென்று அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேகமூட்டம் தொடர்ந்து காணப்பட்டதால் மலைப்பகுதியில் பகல் நேரத்தில் கூட இருள் போல் காணப்பட்டது. எனவே வாகனங்களில் செல்வோர் முகப்பு விளக்கை போட்டபடி சென்றனர்.

    இன்று வாரவிடுமுறை என்ற போதும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாகவே காணப்பட்டது. எனவே நகர் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. கன மழை எச்சரிக்கை காரணமாக தொப்பி தூக்கும் பாறை, அமைதிச் சோலை, வாட்ச் டவர், பேரிஜம் ஏரி, பசுமை பள்ளத்தாக்கு, பில்லர் ராக், குணா குகை, மோயர் பாயிண்ட் உள்ளிட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்கள் மூடப்பட்டன.

    தொடர் மழை காரணமாக திண்டுக்கல்லில் இருந்து மீட்புக் குழுவினர் 20 பேர் கொடைக்கானல் விரைந்தனர். இவர்கள் பெருமாள் மலை பகுதியில் முகாமிட்டுள்ளனர். அங்கிருந்து வெள்ளப்பாதிப்பு ஏற்படும் இடங்களுக்குச் சென்று மீட்பு பணிகளை தொடங்க உள்ளனர்.

    கன மழை காரணமாக கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் காலனியில் கணேசன், சரோஜா என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்துள்ளது. தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் அங்கு விரைந்துள்ளனர். #TNRain #RedAlert #NDRF

    கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் பெய்து வரும் கன மழையினால் பல கிராமங்கள் இருளில் மூழ்கியது.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கவுஞ்சி, பூண்டி, கிளாவரை உள்ளிட்ட கிராமங்களில் நேற்று காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இரவு இடைவிடாது கன மழை பெய்ததால் பேரிஜம் ஏரி, கொழுவம்பட்டியில் உள்ள கோணலாறு ஏரியில் நீர் வரத்து அதிகரித்தது.

    இந்த தண்ணீர் அதிக அளவு பெருக்கெடுத்து ஓடி அமராவதி ஆற்றில் கலக்கிறது. பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் இங்கு பயிரிடப்பட்டுள்ள கேரட் உள்ளிட்ட செடிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இடைவிடாது பெய்த கன மழையினால் மேல்மலை கிராமங்களில் பல இடங்களில் மின் கம்பிகள், மின்சார வயர்கள் அறுந்து விழுந்தது. மேலும் மரங்களும் முறிந்து விழுந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருவதாலும் மின்சாரம் இல்லாததாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    ×