என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அரக்கோணத்திலிருந்து பேரிடர் மீட்பு குழுவினர் 5 மாவட்டங்களுக்கு விரைவு
அரக்கோணம்:
தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் நாளை மழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று வானிலை மையம் ரெட் அலார்ட் விடுத்துள்ளது.
இதனையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 200-க்கும் மேற்பட்டவர்களை மதுரை, ஊட்டி, கோவை, குமரி போன்ற 5 மாவட்டங்களுக்கு துனை கமான்டர் ராஜன்பாலு அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து உதவி கமான்டர் கூறுகையில்:-
இந்த குழுவினர் தங்களுடன் மரம் அகற்றும் கருவிகள் பைபர் படகுகள் நீச்சல் வீரர்களுக்கான உடைகள் என பல்வேறு கருவிகளுடன் எதற்கும் தயாராக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர கேரளாவிற்கும் 5 குழுக்கள் சென்றுள்ளனர். ஏற்கனவே திருச்சூரில் 3 குழுக்கள் உள்ளனர் எதற்கும் தயார் நிலையில் உள்ளோம் என்றார்.
இதேபோல் அரக்கோணம் தாலுகாவில் பேரிடர் தாக்கும் பகுதிகள் என 8 கிராமங்களை ஆய்வு செய்து நேற்று மாலை தாசில்தார் பாபு கிராமத்துக்கு 10 பேர் வீதம் தன்னார்வ தொண்டர்களை தேர்வு செய்து அவர்களுக்கு மீட்பு பணிகளுக்கான பயிற்சியும் வழங்கப்பட்டது.
பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தயங்காமல் ஒன்றினைந்து செயல்பட்டால் பெரும் சேதம் தவிர்க்க உதவியாக இருக்கும். ஆகவே யார் வேண்டுமானாலும் எதிர்பாராமல் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. #TnRain #NDRF
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்