search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corona lockdown"

    • ரயில்வேயில் 3 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்களை பாஜக அரசு ஏன் நிரப்பவில்லை?
    • இந்திய ரெயில்வேவை தனியார்மயமாக்கும் பெரும் திட்டத்தை மோடி அரசு ஏற்கனவே தொடங்கிவிட்டது

    மோடியின் ஆட்சியில் ரயில்வேதுறை சுய விளம்பரத்திற்காகவே பயன்படுத்தப்படுகிறது. மோடியின் 3டி செல்ஃபி பாயின்ட்கள் மற்றும் வந்தே பாரத் நிகழ்வின் பச்சைக் கொடிகளை காட்டி வேண்டுமென்றே ரெயில்வே துறையை சீரழித்துள்ளது பாஜக என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் ரயில்வே துறை பற்றிய 7 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    1. ரயில்வேயில் 3 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்களை பாஜக அரசு ஏன் நிரப்பவில்லை? இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனத்தில் இடஒதுக்கீடு பெறக்கூடிய SC, ST, OBC, EWS மக்களுக்கு பாஜக எதிரானதா?

    2. 2013-14 காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ரயில் பயணத்தில் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பயணியின் சராசரி விலை 0.32 பைசாவில் இருந்து 2023ல் 0.66 பைசாவாக இருமடங்காக உயர்ந்தது ஏன் ?

    3. 2017 மற்றும் 2021 க்கு இடையில் 1,00,000 க்கும் மேற்பட்ட ரயில் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன. கிட்டத்தட்ட 300 பேரின் விலைமதிப்பற்ற உயிரைப் பறித்த கொடிய ஒடிசா ரெயில் விபத்து (2023) இந்த பட்டியலில் இல்லை. ரெயில்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளாமல் தடுக்கக்கூடிய எதிர்ப்பு தொழில்நுட்பம் ரெயில்வே நெட்வொர்க்கில் 2.13% மட்டுமே உள்ளது என்பது உண்மையல்லவா?

    4. கொரோனா பொது முடக்கத்தான் போது , மூத்த குடிமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சலுகைகளை மோடி அரசு ஏன் திரும்பப் பெற்றது? இதன் மூலம் ஒரே ஆண்டில் ₹2242 கோடியை மோடி அரசு கொள்ளையடித்தது.

    5. CAG அறிக்கையின் படி, ₹58,459 கோடியில் 0.7% நிதி மட்டுமே ரெயில்வே பாதை புதுப்பித்தலுக்கு செலவிடப்பட்டது ஏன்? இதுவே, மோடி அரசாங்கத்தால் கூறப்படும் 180 கிமீ வேகத்திற்குப் பதிலாக, வந்தே பாரத் அதிவேக ரெயில்களின் சராசரி வேகம் மணிக்கு 83 கி.மீ. தான்.

    6. ரெயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட் உடன் இணைக்கும் நடவடிக்கை என்பது பின் வாசல் வழியாக அதன் நிதியை குறைப்பதற்கான ஒரு வழியாகும் என்பது உண்மையல்லவா ?

    7. இந்திய ரெயில்வேவை தனியார்மயமாக்கும் பெரும் திட்டத்தை மோடி அரசு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பது உண்மையல்லவா ? மோடி அரசின் தேசிய ரெயில்வே திட்டத்தின் (2021) படி, அனைத்து சரக்கு ரெயில்களும் 2031க்குள் தனியார்மயமாக்கப்படும் என்றும் 750 ரெயில் நிலையங்களில் 30 சதவீதம் தனியார்மயப்படுத்தப்படும் என்று பாஜக அரசு அறிவித்துள்ளது.

    லாபம் ஈட்டும் அனைத்து ஏசி பெட்டிகளும் தனியார் மயமாக்கப்படும். நஷ்டத்தில் இயங்கும் இரண்டாம் வகுப்பு பயணிகள் ரெயில்கள் மட்டுமே ரயில்வேயிடம் விடப்படும். இன்னும் கோடிக்கணக்கான இந்தியர்களின் உயிர்நாடியாக ரயில்வே உள்ளது.

    ஆனால் மோடி அரசு ரெயில்வே துறையின் நிதி, பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் மலிவு விலையில் மக்கள் பயன்படுத்தும் வசதியை அழித்துவிட்டது.

    2012-13ல் 79% ஆக இருந்த மெயில் ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் எண்ணிக்கை 2018-19ல் 69.23% ஆக குறைந்ததில் ஆச்சரியமில்லை.

    காங்கிரஸ் கட்சி ரயில்வே துறைக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும்" என்று பதிவிட்டுள்ளார். 

    • கொரோனா பொது முடக்கத்தின்போது மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணங்களில் வழங்கப்பட்ட சலுகைகளை ரயில்வே அமைச்சகம் நீக்கியது
    • 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் திருநங்கைகளும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மூத்த குடிமக்களாக கருதப்படுவார்கள்

    மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் கட்டண சலுகையை நீக்கியதன் மூலம் இந்தியன் ரெயில்வே ₹5,800 கோடி கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்தியன் ரெயில்வே பதில் அளித்துள்ளது.

    அதில், மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் கட்டண சலுகையை நீக்கியதன் மூலம் மார்ச் 20, 2020 முதல் ஜனவரி 31, 2024 வரை ரெயில்வே துறைக்கு 5,875 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பொது முடக்கத்தின்போது மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணங்களில் வழங்கப்பட்ட சலுகைகளை ரயில்வே அமைச்சகம் நீக்கியது.

    இந்த சலுகை திரும்பப் பெறப்பட்டதிலிருந்து, மூத்த குடிமக்கள் ரயில் பயணங்களுக்கு மற்ற பயணிகளுக்கு இணையாக முழு கட்டணத்தையும் செலுத்தி டிக்கெட் வாங்கி வருகின்றனர்.

    ரயில்வே விதிமுறைகளின்படி, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் திருநங்கைகளும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மூத்த குடிமக்களாக கருதப்படுவார்கள்.

    அதன்படி, கொரோனா பொது முடக்கத்திற்கு முன்பு, ரெயில் கட்டணத்தில் பெண்களுக்கு 50 சதவீத சலுகையும், ஆண் மற்றும் திருநங்கைகளுக்கு 40 சதவீத சலுகையும் ரெயில்வே வழங்கியது.

    கடந்த நான்கு ஆண்டுகளில் மூத்த குடிமக்கள் பிரிவில் சுமார் 13 கோடி ஆண்களும், ஒன்பது கோடி பெண்களும் மற்றும் 33,700 திருநங்கைகள் மொத்தமாக 13,287 கோடி பணம் செலுத்தி ரெயில் டிக்கெட் பெற்றுள்ளனர்.

    • 5 நிறுவன பங்குகள் முதலீட்டிற்கு 50 சதவீத லாபத்தை ஈட்டி தந்தன
    • இவ்வருடம் முதல்முறையாக நிஃப்டி 21 ஆயிரத்தை கடந்து வர்த்தகமாகியது

    2020 கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு விதித்த ஊரடங்கு உத்தரவினால் பல இந்தியர்கள் வீட்டிலிருந்தே வருவாயை அதிகரிக்கும் வழிகளை தேடி வந்தனர். அவர்களுக்கு பங்கு சந்தை ஒரு நல்வாய்ப்பாக அமைந்ததனால், அப்போதிலிருந்தே இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

    இவ்வருடத்தின் முதல் வர்த்தக நாளான ஜனவரி 2 முதல் கடந்த டிசம்பர் 21 காலம் வரை இந்திய பங்கு சந்தையில் பல பங்குகள் முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபத்தை ஈட்டி தந்தன.

    குறிப்பாக 5 நிறுவன பங்குகள் 50 சதவீதத்தை கடந்து வர்த்தகமாகி உள்ளன.

    டாடா மோட்டார்ஸ் - ஜனவரி 2 அன்று 394 - டிசம்பர் 21 அன்று 708

    என்டிபிசி - ஜனவரி 2 அன்று 168 - டிசம்பர் 21 அன்று 301

    பஜாஜ் ஆட்டோ - ஜனவரி 2 அன்று 3573 - டிசம்பர் 21 அன்று 6246

    எல் அண்ட் டி - ஜனவரி 2 அன்று 2089 - டிசம்பர் 21 அன்று 3424

    கோல் இண்டியா - ஜனவரி 2 அன்று 224 - டிசம்பர் 21 அன்று 355

    முதல்முறையாக, மும்பை பங்கு சந்தை பிஎஸ்ஈ (BSE) குறியீட்டு எண் 70,000 தொட்டதும் தேசிய பங்கு சந்தை நிஃப்டி (Nifty) 21,000 தொட்டதும் இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்.

    இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டார்ஸ், முதலீட்டாளர்களுக்கு 44 சதவீதம் லாபம் ஈட்டி தந்தது. ஜனவரி 2 அன்று 2715 என தொடங்கி டிசம்பர் 21 அன்று 3850 என வர்த்தகமாகியது.

    ரஷிய-உக்ரைன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் போர், உலகளாவிய பொருளாதார மந்தநிலை உட்பட பல சிக்கல்களுக்கு இடையே பங்கு சந்தை வலுவாக இருந்ததை சாதனையாக குறிப்பிடுகின்றனர் பொருளாதார வல்லுனர்கள்.

    ×