search icon
என் மலர்tooltip icon

    Recap 2023

    2023 ரீவைண்ட்: முதலீட்டாளர்களுக்கு பலனளித்த பங்கு சந்தை
    X

    2023 ரீவைண்ட்: முதலீட்டாளர்களுக்கு பலனளித்த பங்கு சந்தை

    • 5 நிறுவன பங்குகள் முதலீட்டிற்கு 50 சதவீத லாபத்தை ஈட்டி தந்தன
    • இவ்வருடம் முதல்முறையாக நிஃப்டி 21 ஆயிரத்தை கடந்து வர்த்தகமாகியது

    2020 கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு விதித்த ஊரடங்கு உத்தரவினால் பல இந்தியர்கள் வீட்டிலிருந்தே வருவாயை அதிகரிக்கும் வழிகளை தேடி வந்தனர். அவர்களுக்கு பங்கு சந்தை ஒரு நல்வாய்ப்பாக அமைந்ததனால், அப்போதிலிருந்தே இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

    இவ்வருடத்தின் முதல் வர்த்தக நாளான ஜனவரி 2 முதல் கடந்த டிசம்பர் 21 காலம் வரை இந்திய பங்கு சந்தையில் பல பங்குகள் முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபத்தை ஈட்டி தந்தன.

    குறிப்பாக 5 நிறுவன பங்குகள் 50 சதவீதத்தை கடந்து வர்த்தகமாகி உள்ளன.

    டாடா மோட்டார்ஸ் - ஜனவரி 2 அன்று 394 - டிசம்பர் 21 அன்று 708

    என்டிபிசி - ஜனவரி 2 அன்று 168 - டிசம்பர் 21 அன்று 301

    பஜாஜ் ஆட்டோ - ஜனவரி 2 அன்று 3573 - டிசம்பர் 21 அன்று 6246

    எல் அண்ட் டி - ஜனவரி 2 அன்று 2089 - டிசம்பர் 21 அன்று 3424

    கோல் இண்டியா - ஜனவரி 2 அன்று 224 - டிசம்பர் 21 அன்று 355

    முதல்முறையாக, மும்பை பங்கு சந்தை பிஎஸ்ஈ (BSE) குறியீட்டு எண் 70,000 தொட்டதும் தேசிய பங்கு சந்தை நிஃப்டி (Nifty) 21,000 தொட்டதும் இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்.

    இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டார்ஸ், முதலீட்டாளர்களுக்கு 44 சதவீதம் லாபம் ஈட்டி தந்தது. ஜனவரி 2 அன்று 2715 என தொடங்கி டிசம்பர் 21 அன்று 3850 என வர்த்தகமாகியது.

    ரஷிய-உக்ரைன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் போர், உலகளாவிய பொருளாதார மந்தநிலை உட்பட பல சிக்கல்களுக்கு இடையே பங்கு சந்தை வலுவாக இருந்ததை சாதனையாக குறிப்பிடுகின்றனர் பொருளாதார வல்லுனர்கள்.

    Next Story
    ×