search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congress party protest"

    • மத்திய அரசை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில், ராகுல் காந்தியின் எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்த மத்திய பா.ஜ.க.அரசை கண்டித்து, சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ வழிகாட்டுதல் படி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.பஞ்சாட்சரம் தலைமையில், ராணிப்பேட்டை தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தில் நகர காங்கிரஸ் தலைவர் குப்புசாமி, மோகனசுந்தரம், பிரகாஷ் ஆகியோர் வரவேற்று பேசினர். மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல். அண்ணாதுரை, மாவட்ட துணை தலைவர் விநாயகம் முன்னிலை வகித்தனர்.

    எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் நாகேஷ், மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் பிரவீனா , மாவட்ட ஊடகத்துறை பிரவீன் குமார், மாவட்ட பொதுச் செயலாளர் அருண் மோகன்குமார், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பாலச்சந்தர், மாணவர் காங்கிரஸ் தருண்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பேசினர்.

    இதில் அரக்கோணம் நகர தலைவர் பார்த்தசாரதி, வட்டார தலைவர்கள் வாலாஜா. கணேசன், ஆற்காடு வீரப்பா, அரக்கோணம் வாசுதேவன், நமச்சிவாயம், காவேரிப்பாக்கம் செல்வம், மண்ணு ஆகியோர் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ராகுல்காந்திக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆத்துமேடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் பிரசன்னா தலைமை தாங்கினார். இளைஞர் காங்கிரஸ் தொகுதி துணைத்தலைவர் ராஜேஷ், பொதுச்செயலாளர்கள் பிரகாஷ், கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிநாதன், முரளி, ரெங்கமலை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். வட்டார தலைவர்கள் சதீஸ், பாலமுருகன், கோபால்சாமி, எரியோடு நகர தலைவர் சண்முகம், நிர்வாகிகள் மூர்த்தி, பாண்டியன், பகவான், கண்ணன், ஜாபர்அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    ராகுல் காந்திக்கு சிறை தண்டனை, பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரசார் அரக்கோணத்தில் உள்ள பழைய பஸ் நிலையப் பகுதியில் நரேஷ், ராஜ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் நிர்வாகிகள் மூர்த்தி, எட்வின் உட்பட காங்கிரஸ் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

    • பாஜக.வை கண்டித்து கோஷம் எழுப்பினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    செங்கத்தில் காங்கிரஸ் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல்காந்திக்கு எதிராக 2019- ஆம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் குஜராத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

    இதை தொடர்ந்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் செங்கம் ஜி.குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் செங்கம் புதிய பஸ் நிலையம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தின் போது மோடி அரசை கண்டித்தும், பாஜக.வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் குணசேகரன், சுப்பிரமணி, காமராஜ், ராஜு உள்பட தொண்டர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆரணியில் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபு தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ ராஜா பாபு மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் செல்வம் மாவட்ட துணை தலைவர் சாந்தகுமார் நகர பொருளாளர் பிள்ளையார் நிர்வாகிகள் பாபு சம்மந்தம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.

    சேதராப்பட்டில் கனரக வாகனங்களை வழிமறித்து காங்கிரசார் போராட்டம் நடத்தினர். #BharathBandh #PetrolDieselPriceHike

    சேதராப்பட்டு:

    பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று நடந்த பந்த் போராட்டத்தையொட்டி சேதராப்பட்டில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. பெரும்பாலான தொழிற்சாலைகளும் இயங்கவில்லை.

    இந்த நிலையில் சேதராப்பட்டு மும்முனை சாலையில் வடக்குமாவட்ட காங்கிரஸ் தலைவர் புருஷோத்தமன், காங்கிரஸ் பிரமுகர் நாகரத்தினம் ஆகியோர் தலைமையில் காங்கிரசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தொழிற்சாலைகளுக்கு பொருட்கள் ஏற்றி வந்த கண்டெய்யினர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை வழிமறித்து காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க தலைவர் மோதிலால், விடுதலைசிறுத்தை கட்சி நிர்வாகிகள் சத்தியமூர்த்தி உள்ளிட்ட தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் காங்கிரசார் மற்றும் தி.மு.க.-விடுதலை சிறுத்தைகட்சி மற்றும் கம்யூனிஸ்டுகள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். #BharathBandh #PetrolDieselPriceHike 

    சொத்து வரி உயர்வை கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஈரோடு:

    சொத்து வரி உயர்வை கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு காளை மாடு சிலை அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலை வர் ஈ.பி. ரவி தலைமை தாங்கினார். 

    துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மண்டல தலைவர்கள் திருச்செல்வம், ஜாபர் சாதிக், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ், நிர்வாகிகள் முகமது அர்சத், பாஷா, மகிளா காங்கிரஸ் தலைவி புவனேஸ்வரி, நிர்வாகி கே.சி. பழனிச்சாமி உள்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ×