காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

மத்திய அரசை கண்டித்து நடந்தது ஏராளமானோர் கலந்து கொண்டனர்
காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில், ராகுல் காந்தியின் எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்த மத்திய பா.ஜ.க.அரசை கண்டித்து, சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ வழிகாட்டுதல் படி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.பஞ்சாட்சரம் தலைமையில், ராணிப்பேட்டை தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் நகர காங்கிரஸ் தலைவர் குப்புசாமி, மோகனசுந்தரம், பிரகாஷ் ஆகியோர் வரவேற்று பேசினர். மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல். அண்ணாதுரை, மாவட்ட துணை தலைவர் விநாயகம் முன்னிலை வகித்தனர்.

எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் நாகேஷ், மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் பிரவீனா , மாவட்ட ஊடகத்துறை பிரவீன் குமார், மாவட்ட பொதுச் செயலாளர் அருண் மோகன்குமார், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பாலச்சந்தர், மாணவர் காங்கிரஸ் தருண்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பேசினர்.

இதில் அரக்கோணம் நகர தலைவர் பார்த்தசாரதி, வட்டார தலைவர்கள் வாலாஜா. கணேசன், ஆற்காடு வீரப்பா, அரக்கோணம் வாசுதேவன், நமச்சிவாயம், காவேரிப்பாக்கம் செல்வம், மண்ணு ஆகியோர் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com