வேடசந்தூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராகுல்காந்திக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
Published on

வேடசந்தூர்:

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆத்துமேடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் பிரசன்னா தலைமை தாங்கினார். இளைஞர் காங்கிரஸ் தொகுதி துணைத்தலைவர் ராஜேஷ், பொதுச்செயலாளர்கள் பிரகாஷ், கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிநாதன், முரளி, ரெங்கமலை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். வட்டார தலைவர்கள் சதீஸ், பாலமுருகன், கோபால்சாமி, எரியோடு நகர தலைவர் சண்முகம், நிர்வாகிகள் மூர்த்தி, பாண்டியன், பகவான், கண்ணன், ஜாபர்அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com