search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோட்டில் இன்று சொத்து வரி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    ஈரோட்டில் இன்று சொத்து வரி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    சொத்து வரி உயர்வை கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஈரோடு:

    சொத்து வரி உயர்வை கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு காளை மாடு சிலை அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலை வர் ஈ.பி. ரவி தலைமை தாங்கினார். 

    துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மண்டல தலைவர்கள் திருச்செல்வம், ஜாபர் சாதிக், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ், நிர்வாகிகள் முகமது அர்சத், பாஷா, மகிளா காங்கிரஸ் தலைவி புவனேஸ்வரி, நிர்வாகி கே.சி. பழனிச்சாமி உள்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×