search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congratulate"

    • மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றனர்
    • 7-ம் வார்டு நகர்மன்ற உறுப்பினர் விசாலாட்சி பங்கேற்பு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் பெத்தலகம் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள், மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக வெளியூருக்கு செல்கின்றனர்.

    முன்னதாக அவர்கள் நீலகிரி எம்.பி ஆ.ராசாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும், 7-ம் வார்டு நகர்மன்ற உறுப்பிருமான விசாலாட்சி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

    • எடப்பாடி பழனிசாமிக்கு சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
    • எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    சிவகங்கை

    சென்னையில் நடந்த பொதுக்குழுவில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    இதற்கு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 58 பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், 30ஒன்றிய செயலாளர்கள், 4 நகரசெயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள் ஆகியோர் மாவட்ட செயலாளரும் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் தலைமையில் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    பாராளுமன்ற தேர்தலில் அபாரமான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக நாடுகளை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவரும் நிலையில் பிற்பகல் சுமார் 2 மணி நிலவரப்படி 340-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகித்துவரும் பாஜக கூட்டணி அபாரமான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது.

    இந்த வெற்றியை பாஜகவினர் மிகவும் எழுச்சியுடன் கொண்டாடிவரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உள்பட உலக நாடுகளை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



    5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து, மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குவதாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். #AssemblyElection2018 #NarendraModi #Congratulate #Congress
    புதுடெல்லி:

    5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

    அதில், “தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, மிசோ தேசிய முன்னணி ஆகிய கட்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் தீர்ப்பை பா.ஜனதா தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறது” என்று அவர் கூறியுள்ளார். #AssemblyElection2018 #NarendraModi #Congratulate #Congress
    ×