என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Christmas function"
- நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கொக்கிரகுளத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
- சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
நெல்லை:
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கொக்கிரகுளத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
நலத்திட்ட உதவிகள்
மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். மூத்த குருவானவர் ஸ்டீபன் லயனல் கலந்து கொண்டு நற்செய்தி வழங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதில் முன்னாள் மேயரும், மத்திய மாவட்ட தி.மு.க. துணை செயலாளரு மான விஜிலா சத்தியானந்த், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பெண்களுக்கு இலவச சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
விழாவில் கவுன்சிலர் அனுராதா சங்கர பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்கலிங்க குமார், கவி பாண்டியன், உதயகுமார், வட்டார தலைவர் பாக்கிய குமார், மண்டல தலைவர்கள் கெங்கராஜ், ரசூல் மைதீன், நிர்வாகிகள் குறிச்சி கிருஷ்ணன், கே.எஸ்.மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக முன்னாள் அமைச்சர் கக்கனின் நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், மாவட்ட தலைவர்கள் சங்கர பாண்டியன், ஜெயக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- களக்காடு கடம்போடு வாழ்வு செயிண்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.
- சிறப்பு விருந்தினராக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பங்கேற்று ஏழைகளுக்கும், முதியவர்களுக்கும் புத்தாடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
களக்காடு:
களக்காடு கடம்போடு வாழ்வு செயிண்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரி யில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. ஜோசப் கல்வி நிறுவனங்களின் தலைவர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். மாணவி கிறிஸ்டி திருவிவிலியம் வாசித்தார். பெருமாள்குளம் சேகர குரு பெனர்ட் ஜெபம் செய்து விழாவை தொடங்கி வைத்தார். மாணவி இந்திரா வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏவும், தமிழக காங்கிரஸ் பொருளாளருமான ரூபி மனோகரன் ஏழைகளுக்கும், முதியவர்களுக்கும் புத்தாடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாணவிகளுக்கு இனிப்பு களும், பரிசுகளும் வழங்கப் பட்டன.
பாளையங்கோட்டை ரோஸ் மேரி கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெனதா ராணி, ஜோசப் கல்லூரி முதல்வர் டாக்டர் குமரேசன், பேராசிரியர்கள் கபிரியேல்ராஜ், ரமேஷ், முருகன், மாரியப்பன், மலர்விழி ஜெபக்கனி, பத்ரகாளி, ராதிகா, அனிதா ரெபெக்காள், ஜமீலாபானு, பணியாளர்கள் கலைச் செல்வி, சுகன்யா, பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஷர்லி, தேவபிரியா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். முடிவில் மாணவி அனிஸ் தஸ்னீம் நன்றி கூறினார்.
- ஆறுமுகநேரி காமராஜபுரம் பிஷப் அசரியா வேதாகம பள்ளியின் ஆண்டு விழா, கிறிஸ்துமஸ் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
- விழாவில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து 60 ஏழை சிறுவர், சிறுமிகளுக்கு புத்தாடைகளும், 100 பெண்களுக்கு சேலைகளும் வழங்கப்பட்டன.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி காமராஜபுரம் பிஷப் அசரியா வேதாகம பள்ளியின் ஆண்டு விழா, கிறிஸ்துமஸ் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
பள்ளியின் இயக்குனர் அந்தோணி அடிகளார் தலைமை தாங்கினார். ஏரியா பொருளாளர் விக்டர் ராஜா முன்னிலை வகித்தார். நற்செய்தி குழு தலைவர் ஜோனோ பர்னபாஸ் ஆரம்ப ஜெபம் நடத்தினார். முன்னாள் பொருளாளர் பாலன் தாமஸ் சிறப்பு ஜெபம் நடத்தினார். தொழிலதிபர் ஞானராஜ் கோயில்பிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இந்திய மிஷனரி இயக்க ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார். அமைப்பின் தலைவர் பாஸ்கரன், அரசு வக்கீல் சாத்ராக் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
விழாவில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து 60 ஏழை சிறுவர், சிறுமிகளுக்கு புத்தாடைகளும், 100 பெண்களுக்கு சேலைகளும் வழங்கப்பட்டன. மேலும் தையல் எந்திரங்கள், சிறு தொழில் செய்வோருக்கான நிதி உதவி மற்றும் 3 பேருக்கு ஆடுகளும் வழங்கப்பட்டன. விழாவில் முள்ளக்காடு தொழிலதிபர் கிறிஸ்துதாஸ், போதகர்கள் வாட்சன், மோசஸ், ஜெயபாண்டி, கிறிஸ்தவ சபை நிர்வாகி சாக்ரடீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்