search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cauvery case"

    • மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி முறையீடு செய்தார்.
    • காவிரி நீர் தொடர்பான வழக்கை முதலில் முறையீட்டு பட்டியலில் இணைக்க பதிவாளரிடம் கோரிக்கை வைக்கவும் அறிவுறுத்தினார்.

    சென்னை:

    காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் மனுவை முறையீட்டு பட்டியலில் இணைப்பது தொடர்பாக பதிவாளரிடம் கோரிக்கை வைக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

    கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி வரை கர்நாடகம் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய 51 டி.எம்.சி நீரில் 15 டி.எம்.சி மட்டுமே தந்திருப்பதால் எஞ்சியுள்ள 38 டி.எம்.சி நீரை உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    ஆனால் வினாடிக்கு 10,000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்க கர்நாடகத்திற்கு உத்தரவிட்டது மேலாண்மை ஆணையம். நமக்கு தரவேண்டிய தண்ணீரை திறந்து விட மறுக்கப்பட்டதால் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது தமிழ்நாடு அரசு. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் படி உரிய நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் கூறியுள்ளது. தமிழ்நாடு அரசு 113 பக்கங்களை கொண்ட விரிவான மனுவில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டிய நீரில் சுமார் 29 டி.எம்.சி தண்ணீரை இன்னும் கர்நாடகம் திறந்து விட வேண்டும்.

    அதேபோல ஆகஸ்டு மாதத்தில் கர்நாடகம் 45 டி.எம்.சி நீர் தர வேண்டும்.

    எனவே தமிழக அரசு காவிரி டெல்டா பாசன பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களை காப்பாற்ற உடனடியாக வினாடிக்கு 24,000 கனஅடி வீதம் தண்ணீர் இந்த மாதம் முழுவதும் காவிரியில் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    அதேபோன்று செப்டம்பர் மாதம் திறக்க வேண்டிய 36.76 டி.எம்.சி நீரையும் காலதாமதமில்லாமல் உரிய நேரத்தில் திறந்து விடவும் கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும்.

    மேலும், காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் உரிய நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு மனுவில் வலியுறுத்தி இருந்தது.

    இந்நிலையில் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி முறையீடு செய்தார்.

    அதற்கு தலைமை நீதிபதி, வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்கான முறையீட்டுக்கான பட்டியலில் இந்த வழக்கு இணைக்கப்படாமல் உள்ள நிலையில் தங்களது முறையீட்டை எவ்வாறு ஏற்பது? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினர்.

    மேலும், காவிரி நீர் தொடர்பான வழக்கை முதலில் முறையீட்டு பட்டியலில் இணைக்க பதிவாளரிடம் கோரிக்கை வைக்கவும் அறிவுறுத்தினார்.

    காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு பா.ஜ.க., காங்கிரஸ் துரோகம் செய்கின்றன என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். #GKVasan #Cauvery
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வர்த்தகர் அணி சார்பில் வணிகர் தினவிழாவையொட்டி சாதனையாளர்கள் சிறப்பு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்க கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார்.

    வர்த்தகர் அணி மாநில தலைவர் ஆர்.எஸ்.முத்து முன்னிலை வகித்தார். மூத்த துணைத்தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், துணைத்தலைவர் கோவைதங்கம், தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாநில இணைச்செயலாளர் மால்மருகன், இளைஞரணி மாவட்ட தலைவர் ஜெயம் ஜெ.கக்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கிய நடிகர் ரமேஷ்கண்ணா(கலைத்துறை), கே.ராஜா(வணிகத்துறை), தேவானந்த்(கல்வித்துறை), கே.கே.பில்டர்ஸ் (கட்டிடத்துறை), சங்கர்ராஜ்(உணவுத்துறை), டாக்டர் காமராஜ்(மருத்துவத்துறை) உள்பட 9 பேருக்கு ஜி.கே.வாசன் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். இதையடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

    * சென்னை விமானநிலையம் காமராஜ் உள்நாட்டு முனையம் என்று இருந்ததை, அதில் உள்ள காமராஜ் பெயரை நீக்க இருக்கின்றனர். அதை நீக்கக்கூடாது. காமராஜர் உள்நாட்டு முனையம் என்ற பெயர் இருக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்.

    * தமிழக அரசு வணிக நல வாரியத்தை சீரமைத்து அதில் வணிக பிரதிநிதிகளை வாரிய உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.

    * ஆன்லைன் வர்த்தகத்தால் சில்லரை வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. மருந்து பொருட்கள் கூட ஆன்லைனில் விற்கும் நிலை இருக்கிறது. அதை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அதைத்தொடர்ந்து ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். கர்நாடக அரசு தமிழகத்துக்கு 4 டி.எம்.சி. தண்ணீர் வழங்கும் என்று ஏங்கிக்கொண்டு இருந்த விவசாயிகளுக்கு மத்திய பா.ஜ.க.வும், கர்நாடக காங்கிரசும் துரோகத்தையும், அநீதியையும் இழைத்து இருக்கின்றன. தொடர்ந்து இந்த 2 கட்சிகளும் தேர்தல் தான் முக்கியம் என்றும், தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்றும் உறுதியாக இருக்கிறார்கள்.

    இந்த கட்சிகளை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அறிக்கை வழங்க வேண்டும். சட்டத்துக்கு மதிப்பு கொடுத்து கர்நாடக அரசு 4 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும்.

    த.மா.கா. தனித்தன்மையோடு இயக்கத்தை பலப்படுத்துகிறது. பெரிய கட்சிகளோ, சின்ன கட்சிகளோ இப்போதுள்ள சூழ்நிலையில் கூட்டணி அவசியம். தேர்தல் வரும்போது, த.மா.கா. சார்பில் கூட்டணி குறித்து ஆலோசிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×