search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bank employee arrest"

    • சம்பவம் தொடர்பாக ஆனந்தராஜின் மாமனார் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • ஆனந்தராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    காடையாம்பட்டி:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பில்பருத்தி பகுதியை சேர்ந்தவர் தமிழ். இவரது மகன் ஆனந்தராஜ் (27).

    இவர் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள தனியார் வங்கியில் லோன் பணம் வசூலிக்கும் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் ஆனந்தராஜ் தனது மனைவியின் தங்கையை ஆசை வார்த்தை கூறி சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த டேனீஸ்பேட்டை ஊராட்சி லோகூர் வனப்பகுதிக்கு அழைத்து வந்து கற்பழித்ததாக தெரிகிறது. இதில் அந்த பெண் 2 மாத கர்ப்பிணியானார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக ஆனந்தராஜின் மாமனார் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆனந்தராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு தந்தையை கொன்ற வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
    குஜிலியம்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகில் உள்ள பகவதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது50). அவரது மனைவி மகாலட்சுமி (46). அதே பகுதியில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்தி வந்தனர்.

    இவர்களுக்கு வினோத்குமார் (26) என்ற மகனும், அபிராமி என்ற மகளும் உள்ளனர். வினோத்குமார் எம்.பி.ஏ. முடித்து விட்டு கோவிலூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். அபிராமி ஆசிரியர் பயிற்சி முடித்து நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    வினோத்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வினோத்குமாருக்கு குடிபழக்கம் இருந்துள்ளது. நேற்று இரவு போதையில் வீட்டிற்கு வந்த அவர் தந்தையின் தலையில் அம்மி கல்லைபோட்டு கொலை செய்தார். இதை பார்த்ததும் அருகில் இருந்த அவரது தாய் மகாலட்சுமி சத்தம்போட்டார்.

    இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த வினோத்குமார் தனது தாயை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவர்களது சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இது குறித்து குஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வேடசந்தூர் டி.எஸ்.பி. சிவக்குமார் தலைமையில் அங்கு வந்த போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மகாலட்சுமியை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் செல்வராஜ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்வராஜுக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் நபருக்கும் அடிக்கடி தகராறு இருந்து உள்ளது. நேற்று இரவு போதையில் வந்த வினோத்குமார் அவர்களிடம் எதற்காக எங்களது வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்கிறீர்கள் என சத்தம் போட்டார். இதனால் அவர்களுக்கு கடும் வாக்கு ஏற்பட்டது.

    அப்போது அங்கு வந்த மகாலட்சுமி தனது மகனை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவர் அங்கு வராமல் கத்தியால் தாய் என்று கூட பாராமல் சரமாரியாக குத்தினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் தடுக்க வந்தார். அவரை கீழே தள்ளி அருகில் கிடந்த அம்மிக்கல்லை செல்வராஜ் தலையில் வினோத்குமார் போட்டார். இதில் அவர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளார். மேற்கண்டவை விசாரணையில் தெரியவந்து உள்ளது. அதன்பின்னர் வினோத்குமாரை போலீசார் கைது செய்தனர்.
    அய்யப்பந்தாங்கலில் 3 ஆண்டுகளில் சுமார் ரூ.64 லட்சம் பணத்தை ஏ.டி.எம். மூலம் திருடிய வங்கி ஊழியரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    அய்யப்பந்தாங்கலில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்திற்குள் இந்தியன் வங்கி கிளை உள்ளது. இதில் ஏ.டி.எம். மையமும் செயல்பட்டு வருகிறது.

    கடந்த 3 ஆண்டுகளாக ஏ.டி.எம்மில் அடிக்கடி பணம் குறைந்து வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த வங்கி மேலாளர் போரூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    விசாரணையில் ஏ.டி.எம். மையத்தின் பொறுப்பாளராக பணியாற்றி வரும் சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த வங்கி ஊழியர் சுரேஷ் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை சுரேசை கைது செய்தனர். விசாரணையில் சுரேஷ் 11 வருடங்களாக வங்கியில் பணியாற்றி வந்ததும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் போரூர் கிளைக்கு வேலைக்கு வந்ததும் ஏ.டி.எம். மையத்தில் கள்ளசாவி போட்டு அடிக்கடி பணத்தை எடுத்ததையும் சுரேஷ் ஒப்புக்கொண்டார்.

    3 ஆண்டுகளில் சுமார் ரூ.64 லட்சம் பணத்தை ஏ.டி.எம். மூலம் எடுத்தது தெரியவந்துள்ளது தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×