search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவியின் தங்கையை கற்பழித்த தனியார் வங்கி ஊழியர் கைது
    X

    மனைவியின் தங்கையை கற்பழித்த தனியார் வங்கி ஊழியர் கைது

    • சம்பவம் தொடர்பாக ஆனந்தராஜின் மாமனார் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • ஆனந்தராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    காடையாம்பட்டி:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பில்பருத்தி பகுதியை சேர்ந்தவர் தமிழ். இவரது மகன் ஆனந்தராஜ் (27).

    இவர் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள தனியார் வங்கியில் லோன் பணம் வசூலிக்கும் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் ஆனந்தராஜ் தனது மனைவியின் தங்கையை ஆசை வார்த்தை கூறி சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த டேனீஸ்பேட்டை ஊராட்சி லோகூர் வனப்பகுதிக்கு அழைத்து வந்து கற்பழித்ததாக தெரிகிறது. இதில் அந்த பெண் 2 மாத கர்ப்பிணியானார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக ஆனந்தராஜின் மாமனார் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆனந்தராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    Next Story
    ×