search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assam Rain"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 30க்கு மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
    • காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி காட்டு விலங்குகள் இறந்துள்ளதாக கால்நடை துறை தெரிவித்துள்ளது.

    கவுகாத்தி:

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

    தொடர்மழையால் அணைகள் நிரம்பி, உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்நிலையில், அசாம் மாநிலத்தில் மழை வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரிவில் புதையுண்டும் பலியானோர் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது என மாநில பேரிடர் மீட்புத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    மழை, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ளவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள். அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதுவரை மாநிலம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் காட்டு விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அவை இழுத்துச் செல்லப்பட்டன. இதில் 8 விலங்குகள் இறந்துள்ளதாக கால்நடை துறையினர் தெரிவித்தனர்.

    மேலும், மாநிலம் முழுவதும் 20 பாலங்கள், 173 சாலைகள் சேதமடைந்துள்ளன என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அசாம் மாநிலத்தில் பெய்து வரும் மழையால் காட்டு விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
    • மேலும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அவை இழுத்து செல்லப்பட்டன. இதில் 8 விலங்குகள் இறந்துள்ளதாக கால்நடை துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    கவுகாத்தி:

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக அசாம், மேகாலயா மாநிலங்களில் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

    தொடர்மழை காரணமாக அணைகள் நிரம்பி, உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    மழை வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரிவில் புதையுண்டும் அசாமில் இதுவரை 82 பேர் பலியாகி உள்ளனர். இதனை மாநில பேரிடர் மீட்புத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11 பேர் பலியாகி உள்ளனர். தர்ராங், நாகோன், கச்சார், திப்ரூகர், ஹோஜாய், ஹைலகண்டி போன்ற பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியவில்லை.

    மழை, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ளவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள். அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாநிலம் முழுவதும் 2.31 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    அசாம் மாநிலத்தில் பெய்து வரும் மழையால் காட்டு விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அவை இழுத்து செல்லப்பட்டன. இதில் 8 விலங்குகள் இறந்துள்ளதாக கால்நடை துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    இதுபோல தேசிய விலங்குகள் பூங்காவிலும் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அங்குள்ள விலங்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக பூங்கா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    அசாம் வெள்ள நிவாரண பணிகளை முடுக்கிவிட மத்திய அரசு மாநில அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. மேலும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மாநில முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவை டெலிபோனில் அழைத்து நிலவரங்களை கேட்டறிந்தார்.

    மேலும் அசாமில் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும் கேட்டுக்கொண்டார்.

    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்தும் பிரதமர் மோடி கவலை.
    • அசாம் மாநில முதல்வர் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு.

    அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், 28 மாவட்டங்களில் 18.95 லட்சம் பேர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரழிவில் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை அழைத்து மாநிலத்தின் வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும், மத்திய அரசின் அனைத்து உதவிகளையும் வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

    மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்தும் பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.

    இதுகுறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-

    பிரதமர் மோடி அவர்கள் இன்று காலை 6 மணிக்கு என்னை தொடர்புக் கொண்டு அசாமில் வெள்ள நிலவரம் குறித்து விசாரித்தார். இந்த இயற்கை பேரிடரால் மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார். அப்போது, பிரதமர் மோடி மத்திய அரசின் அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார். அவரது உறுதியளிக்கும் பெருந்தன்மையால் தாழ்மையடைந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அசாமில் 25 மாவட்டங்கள் வெள்ளம் நில சரிவுகளால் சிக்கி பாதிக்கப்பட்டு உள்ளன.
    • 11.09 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    அசாமின் கம்ரூப் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிலையங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு நாள் மூடும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    எனினும், முன்பே திட்டமிடப்பட்ட தேர்வுகளை நடத்த விதிவிலக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு கம்ரூப் மாவட்ட பேரிடர் மேலாண் கழகத்தின் துணை ஆணையாளர் மற்றும் தலைவரின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×